"நிலாத்தூறல்"-----6 |
![]() ![]() |
"நிலாத்தூறல்"-----6 |
Jul 26 2005, 10:13 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----6 ![]() மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 11:02 PM
Post
#2
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
நான் தேடிப் பார்க்கிறேன்
நாம் குந்தியிருந்து மணல்வீடு கட்டிய முதிரைக் கல்லடியை..! நான் கூர்ந்து பார்க்கிறேன் நானும் நீயும் இளமாலைப்பொழுதில் இடைதேய நடந்தவேளையில் பதிந்த சுவடுகளா அவையென..! நான் அழுது பார்க்கிறேன் 'சுனாமி'க்காரன் மனமிரங்கி உன்னை எனக்காக மட்டும்.. ஓம்.. எனக்காக மட்டும் மீளத் தருவானா என..!! அழிவுகளைத் தாங்கி மரங்கூட நம்பிக்கையாய் பூக்கும்போது எந்தன் எண்ணங்களும் நிறைவேறாதா, என்ன?! |
|
|
|
Jul 27 2005, 02:05 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
அமைதியாகி விட்டாயா....... அந்தி மாலைப் பொழுதில் அமைதியாக உறங்கும் கடலே உன்னைக் கேட்கிறேன் எங்கே எம் நாடு எங்கே எம் சொந்தங்கள் எங்கே எம் சொத்துக்கள் தழைய தழைய தாலி தொங்கிய என் தங்கை எங்கே? அன்பு மொழி பேசிய என் தாய் எங்கே? கள்ளப் பார்வை பார்த்து காதல் மொழி பேசிய என் காரிகை எங்கே? எல்லாம் ஆழி அலை கொண்டு அழித்து அமைதியாகி விட்டாயா? ஆண்டவனே அழியா பதிலை நீயா அழிக்கப் போகிறாய்? This post has been edited by shan: Jul 28 2005, 11:05 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 27 2005, 07:49 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
கடல் வேகத்தை
மாற்றியமைத்தேன் அன்று கடலிலே அடித்துச் செல்கின்ற வேரற்ற மரமானேன் இன்று நீரோட்டம் வேகமாய் என் மனம் வேகமாய் போகுது உனைத் தேடி நுரையாய் நீரினிலே கலைந்து போகு முன் வந்து விடு! -------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jul 27 2005, 09:46 AM
Post
#5
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் வேலவன் அண்ணா,லொரேனா,சிந்து, கவிதைகள் நன்றாக அமைந்திருக்கிறது, தொடரட்டும் உங்கள் பணிகள்.
-------------------- |
|
|
|
Jul 27 2005, 10:00 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
அந்தி மாலைப் பொழுது......... அந்தி மாலைப் பொழுதில் அத்தானை தேடி வந்தேன் அங்கும் இங்கும் பார்த்தேன் பூத்த மரத்தடியில் புளுவானான் பூவை ஒருத்தியுடன்......... This post has been edited by shan: Jul 28 2005, 11:07 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 27 2005, 03:07 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் வேலவன், லொரேனா, சிந்து. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 03:08 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
தேடிப் பார்க்கின்றேன்! -------------------------- இந்த மரக்கிளையில் வந்து இளைப்பாறிச் செல்லும் ஆயிரம் பறவைகள் போல்... உன் மனதிலும் ஆயிரம் பறவைகள் இளைப்பாறிச் செல்வதை அறியாதவளாய்... ஓர் பாவப்பட்ட ஜென்மமாய் நீ விரித்த வலையில் விழுந்தேன்! ஓ...! பாழாய்ப் போன மனதிலிருந்து பாவி உன் நினைவுகளை அழிக்கவும் முடியாமல்..... மறக்கவும் முடியாமல்..... உன்னோடு சேர்ந்து விரலோடு விரல் கோர்த்து கால் பதித்த தடையங்களை எல்லாம் இப்போதும் தேடிப் பார்க்கின்றேன்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 03:18 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
கன்னியின் காத்திருப்பு! --------------------------- காத்திருப்பில் ஒரு சுகம்தான்! அதுவும் காதலுக்காய் காத்திருப்பிலும்... காத்திருப்பில் பின் வரும் ஊடலிலும் ஒரு சுகம்தான்! ம்...! காத்திருக்கிறாள் இவள் காதலன் வருகைக்காய் கன்னி இவள் கால் கடுக்க காத்திருக்கிறாள்! காதலன் அவன் வருவானா கன்னி அவள் ஆவல் தீர்க்க...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 04:43 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
அனைவருக்கு வாழ்த்துக்கள்.
நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சத்தியா,வேலவன்,லொரேனா,சிந்து -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 27 2005, 04:45 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நினைவின் எச்சங்கள்.
கடல் மட்டத்தினை கொண்டு மலையை அளக்க முடியும் எதனை கொண்டு அவள் மனதை நானறிவேன் வந்தாள் சேர்த்தாள் பிரிந்து சென்றாள் பாதசுவடு மாத்திரமே நினைவின் எச்சங்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 27 2005, 06:30 PM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
வாழ்வோம் வா!
கடல் கரையில் நாம் நடந்து வந்த சுவடுகள் கூட அழியவில்லை இன்னும் ஆனால்......... நீயோ.... என்னை விட்டு போய் விட்டாய் சுவடுகள் இல்லாத இடத்துக்கு அது உன் மனதால் என்றால் நாம் நடந்து வந்த கடல்கரையை வந்து பார் நம் சுவடுகள் இருக்கிறது அதை பார்த்தாவது உன் மனதை மாற்றிக் கொண்டு வா என்றும் என்னோடு வாழ்வதற்கு -------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Jul 27 2005, 06:31 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
வாழ்த்துக்கள் வேலவன், லொரேனா, சிந்து.றெனி
-------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Jul 27 2005, 09:11 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் றெனி, ராஜி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 09:45 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
மறைந்து கிடக்கும் அறிவை வெளிக்கொண்டு
வருவதற்கு இது நல்லமுயச்சி வாழ்த்துக்கள் சத்தியா.... கவிதை எழுதியவர்களுக்கும், பாராட்டுக்கள் -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 27 2005, 10:49 PM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
ஆதித்ததாஸன்
27-07-2005 ---------------- "துவண்டிடாதே நிலவே!" ------------------------------------ நிலாத்தூறல் இணைந்துவர உலாவரும் நிலாமகளே! உலாவோடு உலாவாக, உன்மனதோடு உலாவரும், இதய நிலா அவன் நினைவுகள், உலாவரும் வேளையிது! கலாராசன் அவன் கவிதை நீ! கவிதையின் கவிதை நீ! கலாரசிகன் அவன் இரசிகைநீ! கலைத்திடாதே அவன் கனவுகளை! கலாச்சாரம் மறந்து காரிகைநீ அவசரத்தில், கனவுகளைக் கலைத்து, கலாரசனை கெட்டு, கவலைகளில் அமிழ்ந்து காலமதைக் கரைத்து, நிலாமகள் அவள் நாண, ஆத்திரத்தில், அவசரத்தில், புத்திபேதலித்து, உலாவரும் உல்லாசம் நிலைத்திடும் என்றெண்ணி, மன உலாப்போகும் மாந்தர்போல், மாய்த்திடாதே உன் வாழ்வை! நிலாமகன் குளிர்சேர்த்து, நிலாமகள் உனை இணைத்து, உலாவரும், நாள் தொலைதூரமில்லை! துவண்டிடாதே நிலவே! நன்றி சுபம்! -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
Jul 28 2005, 05:54 AM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
நீ பதித்த பாதச்சுவடுகள்....... ஆற்றங் கரையோரம் நீ பதித்த பாதச் சுவடு என் நெஞ்சில் நினைவுச் சுவடுகளாக பாண்டி விளையாடும் போது நீ திருடித் தந்த காய்கள் நினைவுச் சின்னங்களாக ஆனால் நீயோ கடந்தகால நினைவுகளை கானல் நீராக்கி விட்டு என்னைக் கடக்கிறாய் மணக் கோலத்துடன்........ This post has been edited by shan: Jul 28 2005, 11:09 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 28 2005, 08:44 AM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், லொரேனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2005, 11:05 AM
Post
#19
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், லொரேனா, நல்ல கவிதைகள், தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Jul 28 2005, 04:18 PM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், லொரேனா.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |