IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
"நிலாத் தூறல்"----- 20
சத்தியா
post Dec 4 2005, 05:14 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





"நிலாத் தூறல்"----- 20


"நிலாத் தூறல் - 20" இல் மீண்டும் இணைந்துள்ளோம். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன் பார்க்கலாம்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 4 2005, 05:18 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




விடிவு வருமா...?


இருட்டறையில் வாழ்ந்த
ஏழை என் மனதின்
இதயத்தில் வெளிச்சம் ஏற்றி...

எழுவதற்கே வாழ்வு என
எனக்குள்ளே நினைத்து
எங்கோ தொலைத்த நம்பிக்கையை
அவசரமாய் தேடத் தொடங்கினேன்!

சுமைகள் அழுத்தி
என்னை விழுத்திய போதும்
உதிரத்தை உப்பாக்கி
உடம்பைச் சாறு பிழிந்து...

அன்றாடம் திண்டாடி
அரை வயிறு நிரப்பி
மீதி அரை வயிற்றை
தண்ணீர் கொண்டு நிரப்பி...

இருப்பையும் இழப்பையும்
இன்று
கணக்கிட்டுப் பார்க்கின்றேன்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்!

ஓ...!
உதிரத்தைச் செலவு செய்து
உறங்கவென அமைத்த
ஓட்டைக் குடிசையும் இங்கே
ஓடமாய் மிதக்கிறது!

திசை தெரியாமல் திண்டாடி
தலைசாய்க்க இடமின்றி
தவித்தலைவதை - என்
தலை விதி என்றிடவா...?

தேய்ந்து போகும்
என் போன்ற ஏழைகளின்
தேவையினை ஈடு செய்ய
இங்கே யார் வருவார்கள்...?

ம்...!
நாளையும் விடியல் வரும்!

ஆனால்
எங்களுக்கு விடிவு வருமா...?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Dec 4 2005, 05:44 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Dec 4 2005, 06:20 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



[COLOR=blue][வருடம் தோறும்வண்டிமிதித்து
வாழ்க்கை பாதையில் சுமைகள்
சுமந்து
ஏழை எந்தன் எழிமை வாழ்வினில்
ஓலைக்குடிசை தனும்
ஒளி வீசியதே,
காலம் தான் கண் பட்டதோ
அவலக் கோலம் தான்
எனக்கென்று,
என் வண்டிப்பிரையாணிகள்
வெயில், மழை தாக்காமல்
நான் வண்டியில் கூடாரம் அமைத்தேன்
நான் வாழ இதுவொன்றே
வசிப்பிடம்
காற்றே நீயும் கோபம்
கொள்ளாதே
இருக்கும் என் இருப்பிடம்
இதுவும் இல்லாமற் போய்விடும்

cry_smile.gif cry_smile.gif cry_smile.gif B]


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 4 2005, 06:46 PM
Post #5


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (Thanimathy @ Dec 4 2005, 06:20 PM)
என் வண்டிப்பிரையாணிகள்
வெயில், மழை தாக்காமல்
நான் வண்டியில் கூடாரம் அமைத்தேன்
நான் வாழ இதுவொன்றே
வசிப்பிடம்
காற்றே நீயும் கோபம்
கொள்ளாதே
இருக்கும் என் இருப்பிடம்
இதுவும் இல்லாமற் போய்விடும்


ஓர் ஏழை இதயத்தின் ஓலத்தை நல்ல கவிவரிக்குள் அடக்கி இருக்கிறீங்கள்.

உங்கள் நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் தனிமதி.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Dec 4 2005, 06:58 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



[COLOR=blue][B]சத்தியா நீங்க ஒரு சரித்திரம்
பத்திரமாய் பல படங்கள்
முத்திரையாய் பதித்த
முற்றத்து கவி வரிகள்
வாழ்த்துக்கள் சத்தியா 41.gif 41.gif 41.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Dec 4 2005, 07:07 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



வாழ்த்துக்கள் சத்தியா வாழ்த்துக்கள் தனிமதி


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post Dec 4 2005, 08:29 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



வாழ்த்துக்கள் சத்தியா, தனிமதி


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Dec 4 2005, 09:58 PM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



நன்றி சத்தியா, தனிமதி.
நேரம் கிடைக்கும் போது நானும் எழுதுகிறேன்.


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
siva
post Dec 5 2005, 03:37 AM
Post #10


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



வாழ்த்துக்கள் சத்தியா, தனிமதி.


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
sivanes
post Dec 5 2005, 11:43 AM
Post #11


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



கூடி வாழ்ந்தோம் நாம்
குதூகலமாய் மகிழ்ந்திருந்தோம்
காலமது செய்த
கோலம் கண்டு
கதறி அழுதோம்
கடவுளையும் நொந்தோம்.

கல்வீட்டில் வாழ்ந்த நாம்
கஞ்சிக்கும் கூழுக்கும்
தெருத்தெருவாய் அலைந்து
சினங்கொண்டு சிந்தித்தோம்.

குஞ்சுகளும் குமருகளும்
கூனிக்குறுகி நிற்க..
மாற்றி உடுப்பதற்குகூட...
உடைகளில்லாப் பஞ்சம்..
கண்டு பயந்தோம்.

அல்லற்படும் எங்களுக்கு
நேசக்கரம் நீட்டி..
நிம்மதியாய் உறங்கவைத்தது
இந்த ஓலைக்குடிசைதான்.

எங்கு போவது
என்று தெரியாமல்
ஏற்று நாம் வாழ்ந்தோம்
நாளை எமக்கும் விடியுமென்று...
நம்பிக்கையும் கொண்டிருந்தோம்

ஆனால் இப்போ....
இயற்கையே நீயுமா...
எங்களை துரத்துகிறாய்....?
நாமெங்கே போவது சொல்....?


சிவனேஸ்வரன்.


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
கலை
post Dec 5 2005, 02:32 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



நிலாத்தூறலில் அருமையான கவிதைகளை வடித்திருக்கும் சத்தியா, தனிமதி, சிவனேஸ் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Dec 5 2005, 06:00 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் தனிமதி,சிவனேஸ் உங்கள் கவிதைகளுக்கு.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 5 2005, 06:37 PM
Post #14


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (sivanes @ Dec 5 2005, 11:43 AM)

எங்கு போவது
என்று தெரியாமல்
ஏற்று நாம் வாழ்ந்தோம்
நாளை எமக்கும் விடியுமென்று...
நம்பிக்கையும் கொண்டிருந்தோம்

ஆனால் இப்போ....
இயற்கையே நீயுமா...
எங்களை துரத்துகிறாய்....?
நாமெங்கே போவது சொல்....?


அல்லல்ப்படும் இதயங்களின் ஆதங்கத்தை அப்படியே இங்கே அற்புதமான கவிவரிக்குள் அடக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சிவனேஸ். தொடர்ந்து
உங்கள் நல்ல கவிதைகளைத் தாருங்கள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 5 2005, 06:50 PM
Post #15


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (சிந் @ Dec 4 2005, 09:58 PM)
நன்றி சத்தியா, தனிமதி.
நேரம் கிடைக்கும் போது நானும் எழுதுகிறேன்.


நன்றி சிந்து. உங்கள் கவிதையையும் காண ஆவல். இணைத்து விடுங்களேன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Dec 5 2005, 10:08 PM
Post #16


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260



நீண்ட நாட்கள்
சேமித்த சந்தோஸங்கள்
நொடிப் பொழுதில்
கரைந்து விட்டதே.


நிம்மதி தேடிய
நெஞ்சங்களின்
நிம்மதி
நீரினுள் உறைந்துவிட்டதே.


வெள்ளை உள்ளம்
கொண்டவள் ..நீ
வெள்ளமாய்
வந்தெம்மை தின்றாயே

பொறுமை இழந்த
பூமி மாதாவே
வெறுமையான
எம் வாழ்வை
வேரோடு பிடுங்கியதால்
வேதனை எம் சொந்தமானது.

நிம்மதி யின்றி
நீண்டதுரம்
பயணித்த நாங்கள்
நிம்மதியாய்
உறங்கும் நேரம்
நீரினுள்
அமிழ்த்தி விட்டாயே

புன்னகையை பறித்த
பூமி மாதாவே
மனித வாழ்வை
மென்றுதான்...உன்
பசி அடங்கு மென்றால்

ஒட்டு மொத்தமாக
உயிரை எடுத்து
உன் பசியை..
தீர்த்துக்கொள்...

தனிமையில்
இருந்து
தவிக்கும் நிலமையை
தந்துவிடாதே....


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 5 2005, 10:53 PM
Post #17


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (லொரே @ Dec 5 2005, 10:08 PM)
நீண்ட  நாட்கள் 
  சேமித்த  சந்தோஸங்கள்
நொடிப்  பொழுதில்
கரைந்து  விட்டதே.

நிம்மதி  தேடிய
  நெஞ்சங்களின்
நிம்மதி
நீரினுள்  உறைந்துவிட்டதே. 


ம்.......... உண்மைதான் நீண்ட நாட்களாக சேமித்து வைத்த சந்தோசங்கள் எல்லாம் இப்போது நாளுக்கு நாள் தொடர்ந்து வரும் மழை, வெள்ளம், புயல் என எல்லாமே வந்து அள்ளிக் கொண்டே போகின்றன. அதை அழகான கவி வரிக்குள் அடக்கி இருக்கிறீர்கள்.

உங்கள் நல்ல கவிதைக்கும் வாழ்த்துக்கள் லொரேனா.


This post has been edited by சத்தியா: Dec 5 2005, 10:54 PM


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
siva
post Dec 6 2005, 02:42 PM
Post #18


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



வாழ்த்துக்கள் சிவனேஸ்,லொரேனா.

This post has been edited by siva: Dec 6 2005, 02:43 PM


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Dec 6 2005, 05:32 PM
Post #19


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE
புன்னகையை பறித்த
பூமி மாதாவே
மனித வாழ்வை
மென்றுதான்...உன்
பசி அடங்கு மென்றால்

ஒட்டு மொத்தமாக
உயிரை எடுத்து
உன் பசியை..
தீர்த்துக்கொள்...


வாழ்த்துக்கள் லொரேனா.
அசத்தி விட்டீர்கள்.
thumbs_up.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 18 2005, 12:39 PM
Post #20


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




"நிலாத் தூறல் - 20" ... இல் நனைந்த அத்தனை அன்பு உள்ளங்களிற்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.


smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 03:45 PM