IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
2 Pages V   1 2 >  
Reply to this topicStart new topic
கண்ணீர் அறுவடை!
சத்தியா
post Apr 11 2004, 04:32 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





கண்ணீர் அறுவடை!
-----------------------


(இது ஓர் உண்மைச் சம்பவம்)

வீடிழந்து, வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து வாழ்க்கை வண்டியை ஓட்டுபவர்களில் இவர்களும் ஒருவர்.

அலையும் மனங்களோடு நிம்மதியைத் தேடிச் சோர்ந்து போயுள்ள முகங்களே இவர்களின் நிலை. ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வாழவில்லை. தம் பிள்ளைகளுக்காக வாழ்கின்றார்கள்.

தனக்கும் தன் கணவன் பாலுவுக்கும் நான்கு, ஐந்து நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் மீனா.

அப்போது....

"மீனா நேரமெல்லே போகுது. இவ்வளவு தூரமும் சயிக்கிலில் போய் சேர வேணுமெல்லே... சீக்கிரம் ரெடியாக வேண்டாமே?"... என்றான் பாலு.

ம்ம்... இதோ நானும் ரெடியாகி விட்டேன். நீங்களும் ரெடிதானே?... என்றாள்.

அப்போது கடைசி மகன் ஓடி வந்து... தாயின் தோளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு....

"அம்மா நானும் வாரனம்மா"... இது மூன்று வயது நிரம்பிய மூன்றாவது மகன் அருண்.

"இல்லையப்பன் அம்மாவும், அப்பாவும் கடைக்குச் சாமான்கள் வாங்கிக் கொண்டு வரவெல்லோ போறம். கனக்கச் சாமான்கள் கடைக்கு வாங்கிக் கொண்டு வர வேணும். நீங்கள் அழாமல், குழப்படி செய்யாமல் நல்ல பிள்ளையாய் அம்மம்மாவோட இருக்க வேணும். சரியோ? ... என்ர செல்லத்துக்கு என்ன வேணுமெண்டு சொல்லுங்கோ. அம்மா வேண்டிக் கொண்டு வாறன்."

"அம்மா எனக்கு கனக்கச் சொக்கா வேண்டிக் கொண்டு வாங்கோ.

ம்ம்... என்ர குட்டிச் செல்லத்துக்கு அம்மா நிறைய சொக்கா வேண்டிக் கொண்டு வாறன்... ஓகே?

அருகில் நின்ற மகளும்....

"அம்மா எனக்கு அச்சாச் சட்டை வேணும்"..... இது ஆறு வயது நிரம்பிய இரண்டாவது மகள் சுருதி.

"அம்மா எனக்குச் சயிக்கில் வேணும்"..... இது ஒன்பது வயது நிரம்பிய மூத்தவன் திவ்வியன்.

"சரி...சரி.... நீங்களெல்லாம் அம்மம்மாவோட குழப்படி செய்யாமல் இருக்க வேணும். அப்பதான் இதெல்லாம் வாங்கித் தருவன் புரியுதோ?"..... என்று குறுக்கிட்டார் தந்தை பாலு.

சரி... அம்மா பிள்ளையளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கோ... என தாயிடம் பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு பாலுவும், மீனாவும் சயிக்கிலில் ஏறி புறப்பட..... வாசல் வரை வந்த பிள்ளைகளும், தாயாரும் கை அசைத்து விடை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

தமது நீண்ட பயணத்தைத் தொடங்கிய இருவரும்... மண்டையைப் பிளக்கும் அந்த வெய்யிலில் அதிக தூரப் பிரயாணம் செய்து, இறுதியில் வவுனியாவிற் குள் செல்வதற்கு அனுமதிக்காக காத்திருந்தனர். ஆனாலும் அவர்களின் காத்திருப்பும் இறுதியில் ஏமாற்றத்தில் முடிந்தது. பாலு மனம் சோர்ந்த நிலையில்.....

மீனா..... எமக்கான அனுமதி தர்ரத்துக்கு இன்னும் இரண்டு நாளாகுமாம் எண்டு சொல்லுறாங்கள். இப்ப என்னதான் செய்யிறது? இஞ்ச எங்கையாவது ரெண்டு நாள் தங்கி அனுமதி எடுத்துக் கொண்டு வவுனியாவுக்கு போவமே? என்று பாலு கேட்கவும்.

"இல்லை அத்தான். இஞ்ச ரெண்டு நாள் நிக்கிற தெண்டால் வேண்டாம். வீட்ட போயிற்று ரெண்டு நாள் கழிச்சு திரும்பி வருவம்"... என்றாள் மீனா.

சரி என்ற பாலுவும் மீனாவை ஏற்றிக் கொண்டு திரும்பி வீடு நோக்கி விரைந் தான். நேரம் காற்றாய்க் கரைந்தது. இரவு எட்டு மணியளவில் இரணைமடு வந்தவனும், நேரத்தோடு வீடு போய் சேர்ந்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் குறுக்குப் பாதையூடாக சயிக்கிலைத் திருப்பி விரைவாக சயிக்கிலை மிதித்தான்.

ம்... இரவு நேரம். எட்டு மணிதான் ஆகியிருந்தது. இருந்தும் இருள் கும் மிருட்டாக எங்கும் சூழ்ந்து பரந்து வியாபித்து இருந்தது. சன நடமாட்டம் எதுவுமே இல்லை. ரோச் லைற்றையும் பிடித்துக் கொண்டு... அவர்கள் பயணம் தொடர்கிறது.

அவர்கள் வந்துகொண்டிருந்த அந்த வழியில் ஓர் குளம். அந்தக் குளத்தில் படையாக யானைகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. இவர்களைக் கண்டதும் யானைகள் எல்லாம் நிலை குலைந்தன. அப்போது ஓர் யானை வேகமாக ஓடி வந்து இருவரையும் சயிக்கிலோடு தூக்கி எறிந்தது. பாலு ஓர் பற்றையினுள் போய் விழுந்தான்.

மீனா "அம்மா" என்று கதறியவாறே ஓர் பக்கம் போய் விழுந்தாள். அத்தோடு இவர்களை அந்த யானைகள் விட்டனவா?.... இல்லையே. ஒரு யானை ஓடிச் சென்று விழுந்து கிடந்த மீனாவின் நெஞ்சில் ஏறி உளக்கவும்...

"அத்தான் என்னைக் காப்பாத்துங்கோ".... என்று கதறினாள் மீனா.

பாவம் பாலு. யானை தூக்கியெறிந்த வேகத்தில் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கிப் பார்க்கின்றான்.... எங்கும் ஒரே இருள் மூட்டம். யானைகளின் நடமாட்டத்தை மட்டும் அவனால் உணர முடிகிறது.

மீனாவின் அவலக் குரல் அவனின் நெஞ்சைப் பிளக்கிறது. மீண்டும் எழுந்து விட முயல்கிறான். முடியவில்லை. அப்படியே தலை சுற்றி மயக்கமடைந்து விட்டான் பாலு.

ஒரு சின்ன குங்குமப் பொட்டாய், கிழக்குத் திசையைக் கீறிக் கொண்டு சூரியன் மெல்ல புலரும் வேளை..... மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தவனும்...

"மீனா!.... மீனா!.... " என்று கத்தியபடி அங்கும் இங்குமாக அவளைத் தேடி
அலைந்தான். அலைந்தவனின் கண்களில் தூரத்தில் ஓர் உருவம் தென்பட்டது. அவன் அந்த உருவம் இடத்தை நோக்கி மெல்ல நடந்தான். அவனின் மேனி லேசாக நடுங்கியது. அருகில் சென்றவனும்.... சிறிது நேரத்தில்.....

"ஐயோ!..... மீனா".......... என அந்தக் காடே அதிரும்படி கத்தினான்.

அவன் உடல் ஆடியது. அலறல் சத்தம் அந்தக் காடெங்கும் எதிரொலியாய்!

என்ன கொடுமை?.... அங்கே மீனா நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தாள். அவளைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு...

"ஐயோ !!!.... அம்மா மீனா என்னைத் தனிய தவிக்க விட்டிட்டு போயிற்றியா?
ஐயோ!... நான் என்ன செய்வேன்? .... கடவுளே இது என்ன கொடுமை?.... நான்
என்ன பாவம் செய்தேன்?.... ஏன் என்னை இப்படிப் பழி வாங்கினாய்?.... ஐயோ
நான் இனி என்ன செய்வேன்?.... என்ர மூண்டு குஞ்சுகளும் வந்து அம்மா எங்கப்பா?.... எண்டு கேட்டால் நான் என்ன பதில் சொல்ல?... என்ர சின்னச் செல்வங்களுக்கு அம்மாவுக்கு இனி நான் எங்கே போவேன்?

ஐயோ! கடவுளே!..... நான் என்ன செய்வேன்?..... தவமாய் தவமிருந்து நான் பெத்த என்ர மகள் எங்கே?..... என்று உன் அம்மா கேட்டால், உன் அம்மா வுக்கு நான் என்ன பதில் சொல்லித் தேற்றுவேன்?

குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொள்ள அவனால் முடியாமல்... தனிமையில் இருந்து கதறிக் கதறி அழுதான் பாலு.

அவ்வேளை அந்த வழியே வந்த ஒருவர் அவனைக் கண்டு, நடந்தவற்றை எல்லாம் அறிந்து... பாலுவையும், மீனாவையும் காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் வீட்டில் சேர்த்தார்.

அந்த வீடே சோகத்தில் மூழ்கியது. தன் மூன்று பிள்ளைகளையும் கட்டிப் பிடித்துக் கொண்டு... பாலு கதறிக் கதறி அழுதான்.

தன் ஒரே ஒரு மகளைப் பறிகொடுத்த தாயோ தலை தலையாய் அடித்து கதறி அழுதாள். தாங்க முடியாத சோகத்தை சுமந்தபடி அந்தக் குடும்பம் கண்ணீரில் தத்தளித்தது.

கண்ணீரை அறுவடை செய்ய இவர்கள் செய்த பாவம் என்ன?

வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது யாரை நொந்து கொள்வது?

இப்படி எத்தனை எத்தனை நெஞ்சை விட்டும் அகலாத அநியாயச் சாவுகள்...?

அழுவதுவும், இறப்பதுவும், அழுது கொண்டே மடிவதுவும் தமிழனாய்ப் பிறந்தமையால் தலை விதியாய் அமைகிறதோ...?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Apr 11 2004, 05:50 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா!
பேச்சு நடையில் எழுதியதால் வாசிக்கும் போது, யாழ் மணமும் யாரோ சொல்லுவதை கேட்டது போலவும் தோன்றுகின்றது. தலையங்கம் நன்றாக அமைந்தது.
வாழ்த்துக்கள்.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Apr 11 2004, 11:10 PM
Post #3


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சத்தியா, உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
asuran
post Apr 12 2004, 10:53 AM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 470
Joined: 18-December 03
Member No.: 6



QUOTE (sathiya @ Apr 11 2004, 04:32 PM)
வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது யாரை நொந்து கொள்வது...???

உண்மை சத்தியா.
கதையை அனுபவத்துடன் தந்தமைக்கு நன்றி.
Go to the top of the page
 
+Quote Post
maxwell
post Apr 12 2004, 11:52 AM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 207
Joined: 22-January 04
Member No.: 47



QUOTE
கண்ணீரை அறுவடை செய்ய இவர்கள் செய்த பாவம் என்ன...???


நான் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி???

நன்றி சத்தியா! எல்லோரும் சராசரியாக புரியும் வகையில் தமிழ் வரிகள் அதைவிட மனதை உருகவைக்கும் சம்பவம்.

மீண்டும் நன்றி வாழ்த்துக்கள்.

அன்புடன் மக்ஸ்.


--------------------
அன்புடன் மக்ஸ்.....
வாழ்க நிலா முற்றம்

Go to the top of the page
 
+Quote Post
roy
post Apr 12 2004, 03:13 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



உலகமெங்கும் வாழும் மக்கள் கண்ணீரில் அறுவடை செய்வதன் வேதனையில் ஒரு பகுதி. பாராட்டுக்கள்.


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
nagules
post Apr 12 2004, 06:12 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 291
Joined: 18-December 03
Member No.: 11



கதையின் கருவில் பொதிந்து கிடக்கும் ஆழமான உண்மை சம்பவத்தில் மறைந்து கிடந்தாலும் அதை உணரக்கூடியதாகவே இருக்கிறது, வாழ்த்துக்கள்.
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Apr 13 2004, 10:43 AM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



உண்மைச் சம்பவத்தைப் பின்னிய கதை எமது கண்களிலும் கண்ணீரை அறுவடை செய்கிறது சத்யா. வாழ்த்துக்கள்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
sOliyAn/ ச...
post Apr 16 2004, 11:59 PM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 102
Joined: 18-December 03
From: Germany
Member No.: 5



பாராட்டுக்கள் சத்தியா.. கண்ணீர் அறுவடை... நல்லதொரு தலைப்பு... பொருத்தமாக வந்து கதையில் அமர்ந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்..


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>பழையன அறிந்து புதியன புகுவோம்!</span>
Go to the top of the page
 
+Quote Post
ramesh
post Apr 17 2004, 05:04 PM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 724
Joined: 18-December 03
Member No.: 9



வாழ்த்துக்கள் சத்தியா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Aug 7 2004, 02:40 PM
Post #11


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




விமர்சனங்களைத் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
biggrin.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post Aug 9 2004, 04:29 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



நன்றி சத்தியா.
நன்றாக கதை எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்.


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post
ajeevan
post Aug 21 2004, 05:19 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 663
Joined: 21-August 04
From: Switzerland
Member No.: 155



வாழ்த்துக்கள் சத்தியா,
தொடர்ந்து எழுதுங்கள்..........................


--------------------
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........

<span style='font-size:7pt;line-height:100%'>கேட்பதற்கு மேலே அழுத்துங்கள்</span>
www.ajeevan.com
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Aug 21 2004, 07:56 PM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



நன்றிகள் சத்தியா


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 21 2005, 02:24 PM
Post #15


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (சத்த @ Apr 11 2004, 04:32 PM)


கண்ணீர் அறுவடை
-----------------------


(இது ஓர் உண்மைச் சம்பவம்)


"அம்மா  எனக்குச்  சயிக்கில்  வேணும்........"  இது  ஒன்பது  வயது  நிரம்பிய
மூத்தவன்  திவ்வியன்.


உங்களுக்குத் தெரியும் இந்தக் கதை உண்மைச் சம்பவம் என்று....

"கண்ணீர் அறுவடை".......... இந்தக் கண்ணீர் அறுவடையில் மீண்டும் ஓர்
கண்ணீர் அறுவடை நடந்து விட்டது. ஆம்..... அன்று ஒன்பது வயது நிறைந்
திருந்த திவ்வியனுக்கு இப்போது 17 வயது. உயர்தர வகுப்பில் படித்துக்
கொண்டிருக்கும் திவ்வியன் நண்பர்களோடு சேர்ந்து குளத்தில் குளிக்கச் சென்று குளத்தில் குதித்திருக்கிறார். ஆழமான பகுதிக்குச் சென்ற இவர் அப்படியே தாண்டு விட்டார். நீச்சல் தெரியாத இவரை பின் பிணமாக மீட்டுள்ளார்கள்.


sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif

QUOTE
கண்ணீரை அறுவடை செய்ய இவர்கள் செய்த பாவம் என்ன...???

வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது யாரை நொந்து கொள்வது...???


பாவம் அந்தத் தந்தை. இளம் வயதிலேயே கட்டிய மனைவியை இழந்தார். இப்போது தன் மூத்த மகனையும் இழந்து நிக்கின்றார். ஓ!....மீண்டும் மீண்டும் கண்ணீரை அறுவடை செய்ய இவர்கள் செய்த பாவம் என்ன...???....

இன்று இந்தச் செய்தியை அறிந்த போது மனம் கனத்து நிற்கின்றது.


cry_smile.gif cry_smile.gif cry_smile.gif cry_smile.gif cry_smile.gif

This post has been edited by சத்தியா: Dec 25 2005, 06:03 PM


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Dec 22 2005, 02:58 PM
Post #16


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



sad.gif sad.gif sad.gif sad.gif மனம் கனக்கிறது சத்தியா.

ஏனோ சிலருக்கு இப்படி அடுத்தடுத்து நடந்து விடுகிறது. பட்ட காலிலே படும் என்பது மாதிரி. இதை வாசிக்கும்போது எனக்கும் இது போன்ற சில நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்போது அதை இங்கே பகிர்ந்து கொள்ள நேரமில்லை. பின்னர் நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
vasanth
post Dec 23 2005, 11:13 AM
Post #17


வேகமானவர்
***

Group: Members
Posts: 30
Joined: 21-November 05
Member No.: 389



"வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது யாரை நொந்து கொள்வது...???"

உண்மையான வார்த்தைகள்....
Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Mar 8 2006, 02:11 PM
Post #18


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



very sad..
sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif
padda kaalilE padum kedda kudiyE kedum!!!!!!...


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Mar 9 2006, 02:05 AM
Post #19


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



sad.gif sad.gif sad.gif sad.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Mar 9 2006, 06:14 PM
Post #20


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE (Thanimathy @ Mar 9 2006, 04:05 AM)
sad.gif sad.gif sad.gif sad.gif

தனிமதி கதை வாசித்ததும் ஊமையாகி விட்டாரோ? tongue_smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post

2 Pages V   1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:54 AM