IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
சார்ந்து விடு
மகுடதீபன்
post Jan 31 2008, 03:23 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



சார்ந்து விடு


ஆணைகொளக் காத்திருக்கும்
அன்பனிவன் மடல்
ஆதரவில் லாததனால்
அழுதவிழிக் கடல்

காணுகிற நாள்எதுவோ
காலம்சொலும் பதில்
காலம்பதில் தரும்வரையும்
கவலைமிக இதில்

ஏன்றவரை பார்த்திருந்தும்
என்னவளின் உரை
இங்குவர வில்லைஇது
எத்தனைநாள் வரை

நோன்றவரை நோற்றிருந்த
நோன்புகளும் சதம்
நூற்றுக்குமேல் ஆயினும்அந்
நூறும்பல விதம்

பித்தன்என ஏளனமாய்
பேசுகிற சகம்
பேச்சில்இரு பொருள்தொனிக்க
பீச்சுகிற ரகம்

கத்தியினை கண்களிலே
காட்டுகிற சகம்
கத்தலுக்கு மத்தியிலே
கரைகிறது யுகம்

எத்தனையோ பௌர்ணமிகள்
ஏகியது மெல
இவ்வருடம் அவ்வருடம்
என்றுயுகம் செல

சித்திரவ தைப்படுதல்
சித்த உள மிசை
செய்வதறி யாதுதவித்
தேன்உயிரை இசை

வரும்வரையும் வடிக்கிறது
வட்டவிழிக் குளம்
வந்துஅமர கவனமுடன்
வடிவமைத்த தளம்

கரும்பனைய எனதுமனம்
களிப்பதுநின் பெயர்
காதவழி தொடருவது
காரிகையின் உயிர்

உச்சரிக்கும் மந்திரத்தில்
உனதுபெயர் வரும்
உழலுகிற தீவினைகன்
ஒருநொடியில் அறும்

பிச்சிமலர் பெய்தகுழல்
பெரியமணம் தரும்
பெரியமண வாசனையில்
பேதைமனம் விழும்

பேதைஇவன் வாய்ப்பரப்பில்
பீடுநடை இடும்
பீடைஎனும் பேய்கள்வ
பிய்ந்துபட அழும்

சாதல்எனும் சங்கதிகள்
சம்பவிக்கும் முனம்
சார்ந்துவிடு சார்ந்துவிடு
தமியனது உளம்

யாருமிலை தனிமையிலே
அலைகிறது தினம்
ஆண்டுகொள அம்பிகைவா
அமர்கிறது மனம்

ஊருமிலை உறவுகளும்
ஒட்டவிலை நமை
உன்னுருவைப் பூரணமாய்
உறிஞ்சுதடி இமை

காட்டவிலை அருள்விளக்கம்
காரணமேன் உரை
கையில்ஒரு கோல்எடுத்தால்
காகிதத்தில் உறை

பாட்டளவில் பரிணமித்து
பாவனையில் நிறை
பாவ வினை யாஉடனே
பறந்துவிடும் குறை

உயிர்துடிக்கும் வாசகங்கள்
ஒலிக்கிறதா செவி
ஒன்றுமிலை என்னில்எமை
உன்இணையில் அவி

மயிர்சிர்க்கும் அவ்வளவு
மகத்துவங்கள் புரி
மங்கைநினை வாய் எரிக
மனவிளக்குத் திரி


- m a g u d a d h e e b a n

This post has been edited by magudadheeban: Feb 1 2008, 03:56 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Feb 1 2008, 03:09 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



அம்பிகையின் புகழ்பாடிய கவிதை நன்று
வாழ்த்துக்கள் மகுடதீபன்


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Feb 1 2008, 04:06 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



அம்பிகையின் புகழ்பாடி
இரசித்த சுகந்தீமா

பாராட்டுக்கு நன்றிகள் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
sainthavi
post Feb 1 2008, 05:04 PM
Post #4


Senior
**********

Group: Advancing Members
Posts: 340
Joined: 27-November 07
Member No.: 2,614



வாழ்த்துக்கள் மகுடதீபன் thumbs_up.gif
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Feb 1 2008, 11:31 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



QUOTE (magudadheeban @ Jan 31 2008, 03:23 AM)
சார்ந்து விடு


ஆணைகொளக் காத்திருக்கும்
அன்பனிவன் மடல்
ஆதரவில் லாததனால்
அழுதவிழிக் கடல்

காணுகிற நாள்எதுவோ
காலம்சொலும் பதில்
காலம்பதில் தரும்வரையும்
கவலைமிக இதில்

பித்தன்என ஏளனமாய்
பேசுகிற சகம்
பேச்சில்இரு பொருள்தொனிக்க
பீச்சுகிற ரகம்

கத்தியினை கண்களிலே
காட்டுகிற சகம்
கத்தலுக்கு மத்தியிலே
கரைகிறது யுகம்

யாருமிலை தனிமையிலே
அலைகிறது தினம்
ஆண்டுகொள அம்பிகைவா
அமர்கிறது மனம்

ஊருமிலை உறவுகளும்
ஒட்டவிலை நமை
உன்னுருவைப் பூரணமாய்
உறிஞ்சுதடி இமை


ஆதித்ததாஸன்
1-2-2008

மடலுக்குள் மடல்விரிக்கும்!விழி
மடலுக்குள் படம்பிடிக்கும்!மொழிக்
கடலுக்குள் முத்தெடுக்கும்!கவிக்
கடலுக்குள் முத்திருக்கும் மகுடம்!

வாழ்த்துக்கள் ஐயா! thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif
தொடரட்டும் கவி முத்துக்கள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Feb 1 2008, 11:31 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



தம்ஸ் அப்
வாழ்த்துக்கு நன்றி ஷைந்தவி,

உங்கள் கவிதைகள்தான்
வாமன அவதாரம் மாதிரி
மூன்றடிக்குள் அளந்து முடிக்கிறது,

வாழ்த்துக்களுமா ?

- m a g u d a d h e e b a n


--------------------
Go to the top of the page
 
+Quote Post
நவன்
post Feb 2 2008, 06:46 AM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 284
Joined: 12-January 08
From: Malaysia
Member No.: 2,674



சார்ந்துதான் இருக்கிறேன் என்னவனின் கிருபையினால்
கவிதை பக்திப் பரவசத்தை தருகின்றது. நன்றி...


rolleyes.gif


--------------------


பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு!

என் கவிப்பூ - பனித்துளிகள்
என் சிந்தனைப் பூ - நவன் உலகம்
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Feb 2 2008, 09:34 AM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



அம்பிகையின் அருள்
அன்பன் இவனை ஆட்கொண்டு
அருளட்டும் ஆசிகள்

வாழ்த்துக்கள் நண்பர் மகுடதீபன்.


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Feb 2 2008, 01:08 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



கட்டிமணிச் சொற்களினால் வாழ்த்துச் சொன்ன
கவிமணியே ஆதித்த தாசா மற்றும்
நட்பார்க்கும் கலைஅரசே புதிதாய் சேர்ந்த
நவன் என்ற நனி நட்பே என் வணக்க்ம !

அனைவரின் வாழ்த்துக்கும் நன்றிகள். . .

- m a g u d a d h e e b a n


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:55 AM