தூறலில் உன் நினைவு! |
![]() ![]() |
தூறலில் உன் நினைவு! |
Mar 10 2008, 12:00 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() தூறலில் உன் நினைவு! மழை தூறத் தொடங்கும் போதே நான் நனைய ஆரம்பித்து விடுகிறேன் உன் நினைவுகளில்! சிறு சிறு தூறலாய் ஆரம்பித்து பெரும் மழையாய் பொழிகிறது உன் உண்மையான ஸ்நேகங்கள்! ம்... என் கற்பனைச் சதுக்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கனவுகள் எல்லாம் அத்து மீறிப் பிரவேசம் பெற்றது எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்! ஓ!... என் கண்ணுக்குள் ஒளியுமிழும் ஒரு வண்ணப் பூச்சியாய் நீ! என் நெஞ்சுக்குள் இராகம் பாடும் ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ! ம்ம்... நீயும் உன் நினைவுகளும் நிஜமாய் என்னுள் நிறைந்திருக்கும் ஆத்ம திருப்தியோடு நம் நேசிப்புக் காலங்கள் நித்தமும் தொடர... பனித்துளிபோல் பரிசுத்தமான உன் அன்பில் இதுவரை நனைந்த நினைவுகளோடும்... இனி நனையப் போகும் ஈர நினைவுகளோடும்... நனைந்து கொண்டிருக்கிறது இந்த மனசு! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 10 2008, 12:07 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
மிகவும் அழகான படம்...
அப்படியே மழையில் நனைந்தது போல ஓர் பிரமை.. தூறலில் நிலாத்தூறலில்... கவிதை நன்றாகவுள்ளது...வாழ்த்துக்கள் சத்தியா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Mar 10 2008, 12:56 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
மழைத்தூறலில் நனைந்ததால்
மனத்தூறலாய் வந்து... மனமினிக்க வைத்ததோ மங்கையுன் நினைவுகள்.. வாழ்த்துக்கள் சத்தியா.. -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Mar 10 2008, 01:56 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
காய ஆரம்பித்தால்தான் கஷ்டம்,
நனையத்தானே ஆரம்பித்திருக்கிறது. நன்றாக நனையட்டும் நனையட்டும் வாழ்த்துக்கள் சத்தியா, சத்தியா இன்னென்று சொல்லட்டா ? படம் கவிதையை அமுக்க முனைகிறது. படிப்பவர்களின் மனோதததுவம் பளீர் என எது தெரிகிறதோ, அதைப் பார்ப்பது. பாதி அளவாக சிறிதாக்கினால் கவிதை இன்னும் தூக்கலாகத் தெரியும், இதை நான் சொல்லலாம் அல்லவா, ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற அணுகுமுறையில் . . .? -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 10 2008, 02:04 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... சொல்லலாம் மகுடதீபன்... நானும் இந்தப் படத்தை பல வழிகளில் சிறிதாக்க முயற்சி செய்தேன். ஆனால் பலன் கிடைக்கவில்லை. animated gif படமாகையால் சிறி்தாக்க முடியவில்லையோ தெரியவில்லை. யாராவது முடிந்தால் சிறிதாக்கித் தாருங்கள். அதுதான் எனக்கும் விருப்பம். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 10 2008, 02:08 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஆமாம் சத்தியா இதை நான் யோசிக்கவே இல்லை
இது animated gif ஆயிற்றே, கொஞ்சம் சிரம ம் என்றாலும் முயலலாம்தான் ! This post has been edited by மகுடதீபன்: Mar 10 2008, 02:08 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 10 2008, 02:23 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
இந்தாருங்கள் சத்தியா
உங்கள் மழைப்படம் சிறிதாக்கி இருக்கிறேன் COPY & PASTE செய்து கொள்ளுங்களேன் . . .! ![]() 3 MB க்கு மேல் இருந்த படம் 0.8 KB ஆகச் சுருக்கி இருக்கிறேன் -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 10 2008, 03:30 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 284 Joined: 12-January 08 From: Malaysia Member No.: 2,674 |
சத்தியா,
கவிதை வரிகள் அனைத்தும் கவர்ந்திருக்கின்றன. அனிமேஷன் படமும் அதன் கீழுள்ள கவிதையும் கவியுணர்வின் இன்னொரு பரிணாமமாக உங்களால் அற்புதமாக நிலாமுற்றத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் சத்தியா.. அடுத்த கட்டம் ஒலியிணைப்புத்தான் மகுடதீபன் அண்ணா, நீங்கள் படத்தைச் சிறிதாக்குவதற்கு உபயோகித்த software எது என்று அறியத்தாருங்களேன்.. This post has been edited by நவன்: Mar 10 2008, 03:32 PM -------------------- ![]() பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு! என் கவிப்பூ - பனித்துளிகள் என் சிந்தனைப் பூ - நவன் உலகம் |
|
|
|
Mar 10 2008, 05:47 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (மகுட @ Mar 10 2008, 02:23 PM) இந்தாருங்கள் சத்தியா உங்கள் மழைப்படம் சிறிதாக்கி இருக்கிறேன் COPY & PASTE செய்து கொள்ளுங்களேன் . . .! ![]() 3 MB க்கு மேல் இருந்த படம் 0.8 KB ஆகச் சுருக்கி இருக்கிறேன் நன்றி நன்றி மிக்க நன்றிகள் மகுடதீபன். இப்போதுதான் கவிதைக்கு ஏற்ப அளவான அழகான படமாக இருக்கிறது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 10 2008, 06:43 PM
Post
#10
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா, தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Mar 11 2008, 12:11 AM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நவன்,
ANIMATED GIF வகைப் படங்களைச் சாதாரண IMAGE EDITING SOFTWARE கொண்டு சிறிதாக்க முயன்றால் முதல் ப்ரேமை மட்டும் பண்ணும் - அல்லாமல் அனிமேஷன் எபக்ட்டை இழக்க வேண்டி வரும் நாம். . . எனவே இதற்கு என்று அமைந்துள்ள EASY GIF ANIMATOR, ULEAD GIF ANIMATOR முதலியவற்றை நாடலாம். ஆனால் எனது சாய்ஸ் என்ன என்றால் JASC Animation Shop ! ஆதைப் பயன் படுத்துவது இதுவே ! உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் . . . This post has been edited by மகுடதீபன்: Mar 11 2008, 12:12 AM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 11 2008, 01:13 PM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 284 Joined: 12-January 08 From: Malaysia Member No.: 2,674 |
தகவலுக்கு நன்றி மகுடதீபன் அண்ணா.
-------------------- ![]() பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு! என் கவிப்பூ - பனித்துளிகள் என் சிந்தனைப் பூ - நவன் உலகம் |
|
|
|
Mar 11 2008, 01:19 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
கடவுட் காதலனின் அருள் மழையில்
ஆன்மக் காதலி நனைகிறாள் காதல் கவிதையில் எனக்கு ஆன்மீகமும் தெரிகிறது வாழ்த்துக்கள் சத்தியா -------------------- |
|
|
|
Mar 11 2008, 03:00 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
இதைத்தான் நானும் சொல்லமுயன்று
நிறையத் தரம் தோற்றேன். சத்தியா, புரிந்து கொண்டீர்களா நாகராசன் சொல்வதை ? ஆடிமுடித்தவனும் சரி இறுதி நிலைக் கவிஞனும் சரி வருவது இங்கேதான் . . . -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 11 2008, 03:05 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 340 Joined: 27-November 07 Member No.: 2,614 |
நல்ல கவிதை சத்தியா
|
|
|
|
Mar 11 2008, 04:17 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
இதுவரை
நனைந்த நினைவுகளோடும்... இனி நனையப் போகும் ஈர நினைவுகளோடும்... நனைந்து கொண்டிருக்கிறது இந்த மனசு! இந்த வரிகள் மிகவும் நன்றாக உள்ளது. கவிதையும் பிரமாதம்; படமும் பிரமாதம். பாராட்டுக்கள் சத்தியா -------------------- |
|
|
|
Mar 11 2008, 07:23 PM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 303 Joined: 15-December 07 Member No.: 2,659 |
ஒவ்வொரு வார்த்தையும் ஈரமாக்க,ஈரமாக்க. மொத்தமாய்
நனைந்துவிடுகிறது மனசு. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Mar 11 2008, 10:15 PM
Post
#18
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
நல்ல கவிதை சத்தியா.
வர வர தங்கள் கவிதைகளில் சொற் தேர்வுகள் அருமையாக இருக்கின்றன. எனக்கு நேரங் கிடைக்காமையினால் உடனுக்குடன் ஊக்கம் கொடுக்க முடிவதில்லை. -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Mar 12 2008, 02:31 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (iamnaagaraa @ Mar 11 2008, 01:19 PM) கடவுட் காதலனின் அருள் மழையில் ஆன்மக் காதலி நனைகிறாள் காதல் கவிதையில் எனக்கு ஆன்மீகமும் தெரிகிறது வாழ்த்துக்கள் சத்தியா QUOTE (மகுட @ Mar 11 2008, 03:00 PM) இதைத்தான் நானும் சொல்லமுயன்று நிறையத் தரம் தோற்றேன். சத்தியா, புரிந்து கொண்டீர்களா நாகராசன் சொல்வதை ? ஆடிமுடித்தவனும் சரி இறுதி நிலைக் கவிஞனும் சரி வருவது இங்கேதான் . . . ம்... நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... நன்றிகள். சரி... உங்கள் பார்வைக்கு அப்படி இருந்தாலும்... நான் இந்தக் கவிதை பற்றி உண்மையைச் சொல்வதாயின் உண்மையான ஒரு உள்ளத்தின் நேசனையை என் உணர்வில் நிறுத்தி எழுதிய கவிதையே இது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 13 2008, 06:02 AM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (சத்த @ Mar 12 2008, 02:31 PM) QUOTE (iamnaagaraa @ Mar 11 2008, 01:19 PM) கடவுட் காதலனின் அருள் மழையில் ஆன்மக் காதலி நனைகிறாள் காதல் கவிதையில் எனக்கு ஆன்மீகமும் தெரிகிறது வாழ்த்துக்கள் சத்தியா நான் இந்தக் கவிதை பற்றி உண்மையைச் சொல்வதாயின் உண்மையான ஒரு உள்ளத்தின் நேசனையை என் உணர்வில் நிறுத்தி எழுதிய கவிதையே இது. உமது நேசத்தின் இந்த உண்மையே எனக்கு அந்த ஆன்மீக உண்மையையும் உணர்த்தியிருக்கிறது. நன்றி சத்தியா -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:36 PM |