IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
நீ !
சத்தியா
post Jun 26 2009, 12:43 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53






அதிராத சிரிப்பு
உன் அனிச்சப் பேச்சு
உதிரும் வார்த்தையில்
உண்மையும் நேர்மையும்
என் உயிரோடு உறைய...

மயிலிறகாய் மனசு வருடி
உயிர் வரை ஊடுருவும்
உன் வார்த்தைகளால்
என் நாட்கள் நகர...

ஒருமுறை கண்டு
மறவாது துடித்து
மறுமுறை கண்டு
முக்குளித்து எழுந்து...

உள்நெஞ்சில் அப்பிப்போய்
உறைந்து கிடந்த
படிமங்களை எல்லாம்
உரித்தெறிந்து...

உன் பாதியில்
நான் நிறைந்து
என் பாதியில்
நீ நிறைந்து...

மழை நனைந்த பூவாய்
திகழும் என் மனசில்
நிறைந்த அழகாய்
கொஞ்சம் ஈரமாய்...

உயிரிலே நினைவுகள் தழும்ப
துயில்கொள்ளா இரு விழியும்
ரகசியமாய் எரிய...

அறுகம் புல்லில்
உறங்கும் பனித் துளியாய்
உயிரோடு உயிராகி - என்னுள்
உறைந்து கிடக்கிறாய் நீ!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
jeyaraman
post Jun 26 2009, 05:57 PM
Post #2


Senior
**********

Group: Advancing Members
Posts: 303
Joined: 15-December 07
Member No.: 2,659



உறைநிலை எட்டவேன்டுமென்றால் சும்மாவா? ஒவ்வொரு வரியிலும் உறைதல் தொடர்ந்து முடிவில் உறைந்தே விடுகிறது.


--------------------


-உரப்புளி நா.ஜெயராமன்
Go to the top of the page
 
+Quote Post
சின்னா
post Jun 28 2009, 03:28 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 2,927
Joined: 1-February 07
Member No.: 848



QUOTE (சத்த @ Jun 26 2009, 12:43 PM) *
அறுகம் புல்லில்
உறங்கும் பனித் துளியாய்
உயிரோடு உயிராகி - என்னுள்
உறைந்து கிடக்கிறாய் நீ!


உன்னுள் உறைந்து கிடப்பது அவன் மட்டும் அல்ல
உறைந்து உருகி வழியும் உன் கவிதைகளுந்தான்....
இப்படி அடிக்கடி உருக வாழ்த்துக்கள் சத்தியா....

அன்புடன் சின்னா... smile.gif


This post has been edited by சின்னா: Jun 28 2009, 03:29 PM


--------------------
உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
Go to the top of the page
 
+Quote Post
meera
post Jun 28 2009, 08:11 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 977
Joined: 25-July 06
From: germany
Member No.: 589




ஆழகான கவிதை சத்தியா… !!
உள்ளத்தில் உறைந்த காதலை...
உயிரோடு கலந்த காதலை....
உயிருள்ள கவிதையாக வடித்துள்ளீர்கள்…
நல்ல கவிதை என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…
உங்கள் அடுத்த கவிதையை எதிர்பார்த்தவண்ணம் ...
காத்திருக்கிறேன் நானும் ஆவாலுடன்…
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Jul 2 2009, 05:54 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



நல்ல கவிதை!
வாழ்த்துக்கள் சத்தியா! smile.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
iamnaagaraa
post Jul 7 2009, 06:32 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 1,131
Joined: 9-March 08
Member No.: 2,724



காதலின் அத்வைத உறைதலைச்
சில்லென உரைக்கும் உம் கவிதையால்
என்னெஞ்சம் உருகுகிறதே சத்தியா

அருமையான காதல் கவிக்கு வாழ்த்துக்கள் உமக்கு


--------------------
Go to the top of the page
 
+Quote Post
யாழ்_அகத்தியன்
post Jul 8 2009, 08:45 AM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 915
Joined: 3-January 07
Member No.: 809



QUOTE (சத்த @ Jun 26 2009, 01:43 PM) *




அறுகம் புல்லில்
உறங்கும் பனித் துளியாய்
உயிரோடு உயிராகி - என்னுள்
உறைந்து கிடக்கிறாய் நீ!




அழகான வரிகள் வாழ்த்துக்கள் சத்தியாக்கா


--------------------
தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்

என் ஒவ்வொரு
துணிவிலும் நீ


-யாழ்_அகத்தியன்


புதுப் பொலிவுடன் என் வலைப்பூ

பகல் நிலா
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 12 2009, 11:57 AM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (jeyaraman @ Jun 26 2009, 05:57 PM) *
உறைநிலை எட்டவேன்டுமென்றால் சும்மாவா? ஒவ்வொரு வரியிலும் உறைதல் தொடர்ந்து முடிவில் உறைந்தே விடுகிறது.


நீங்கள் தொடர்ந்து தரும் கருத்துக்களால்...
என்னுள்ளம் பூரிப்படைகின்றது.

ம்ம்... என்றும் என் நன்றிகள் ஜெயராமன். smile.gif



QUOTE (சின் @ Jun 28 2009, 03:28 PM) *
உன்னுள் உறைந்து கிடப்பது அவன் மட்டும் அல்ல
உறைந்து உருகி வழியும் உன் கவிதைகளுந்தான்....
இப்படி அடிக்கடி உருக வாழ்த்துக்கள் சத்தியா....

அன்புடன் சின்னா... smile.gif


எங்கே சின்னா உங்களைக் காணோமே...? rolleyes.gif
அடிக்கடி நீங்களும் வரவேண்டும்... ஓகே ...? biggrin.gif

ம்ம்... உங்கள் வாழ்த்துக்கும் நன்றி சின்னா. smile.gif




--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 12 2009, 12:02 PM
Post #9


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (meera @ Jun 28 2009, 08:11 PM) *
ஆழகான கவிதை சத்தியா… !!
உள்ளத்தில் உறைந்த காதலை...
உயிரோடு கலந்த காதலை....
உயிருள்ள கவிதையாக வடித்துள்ளீர்கள்…
நல்ல கவிதை என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…
உங்கள் அடுத்த கவிதையை எதிர்பார்த்தவண்ணம் ...
காத்திருக்கிறேன் நானும் ஆவலுடன்…


ம்ம்...
உங்கள் வாழ்த்திற்கும்...
உங்கள் பாராட்டிற்கும்...
உங்கள் காத்திருப்பிற்கும்...

என்றும் என் நன்றிகள் மீரா. smile.gif


QUOTE (rathiDevi_u @ Jul 2 2009, 05:54 AM) *
நல்ல கவிதை!
வாழ்த்துக்கள் சத்தியா! smile.gif


ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றி ரதி. smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 12 2009, 12:08 PM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




QUOTE (iamnaagaraa @ Jul 7 2009, 06:32 AM) *
காதலின் அத்வைத உறைதலைச்
சில்லென உரைக்கும் உம் கவிதையால்
என்னெஞ்சம் உருகுகிறதே சத்தியா

அருமையான காதல் கவிக்கு வாழ்த்துக்கள் உமக்கு


உங்கள் நெஞ்சமும் உருகியதில்
என் மனமும் சந்தோசப்படுகின்றது.

ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் என் நன்றிகள் நாகராஜன். smile.gif



QUOTE (யாழ்_ @ Jul 8 2009, 08:45 AM) *
அழகான வரிகள் வாழ்த்துக்கள் சத்தியாக்கா


ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் என் நன்றிகள் அகத்தியன். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:39 PM