IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
நீ விடை தருவாயா...?
சத்தியா
post Jul 12 2009, 12:16 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





நீ விடை தருவாயா...?


இந்த வேளை
நீ எங்கே இருப்பாய்...
என்ன செய்து கொண்டிருப்பாய்...
எதை நினைத்து தனியாய் தவித்துப் போயிருப்பாய்...

இப்படியே
இன்றைய பொழுது முழுவதுமாய்
உன்னைப் பற்றிய நினைவில் மூழ்கிமூழ்கி
சுற்றிச் சுழன்றடித்துச் சுக்குநூறாகி
துவண்டு போகிறது இந்த மனசு!

ஓ...!
நீ நினைப்பது...
நீ சொல்வது...
நீ சொல்ல நினைப்பது...
இப்படி எல்லாமே நடக்கிறது
அப்படியே நடந்தும் இருக்கிறது!

ஆனால்
இது மட்டும் ஏன் முடியாது போகிறது...?

ம்...
மறுமுறை
உனைக் காணும் போது...

என் இரு கரம் கொண்டு
உன் முக மலர் ஏந்தி
உன் இரு விழி பார்த்து...

இதே கேள்வி கேட்பேன்
நீ விடை தருவாயா...?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Jul 22 2009, 05:12 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



QUOTE
மறுமுறை
உனைக் காணும் போது...

என் இரு கரம் கொண்டு
உன் முக மலர் ஏந்தி
உன் இரு விழி பார்த்து...

இதே கேள்வி கேட்பேன்
நீ விடை தருவாயா...?


நல்ல வரிகள்!
படமும் கவிதைக்கு ஏற்றார் போல் வந்ததும் அருமை!
வாழ்த்துக்கள் சத்தியா! rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 03:46 PM