IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
சுகமான நினைவுகள்..
Thanimathy
post Sep 21 2009, 05:54 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



சுகமான நினைவுகள்..



வாசலில் பார்த்திருப்பேன்..
அவன் வருகை கண்டு
உள்ளம் உவகை கொள்வேன்..

சுற்றவர நீலமும் சிவப்பும் கொண்ட...
கவரை அவன் கையில் கண்டவுடன்..
துள்ளிக் குதித்து ஓடிச்சென்று பெற்றிடுவேன்..

பரவசமாக படித்திடுவேன்..
பக்கத்து தோழியிடம் கொண்டே காட்டிடுவேன்..
கண்டவர் நின்றவர் எல்லோரிடமும்..

சந்தோசமாகச் சொல்லிடுவேன்..
என் அவர் எனக்கு அனுப்பிய கடிதம்..என்று..
ஓடி ஓடி உரக்கச் சொல்லுவேன்...

அன்பான முத்தங்கள் அதில் நிறையவுண்டு..
அள்ளி மணந்திடும் மல்லிகையும் அதிலுண்டு..
எண்ணங்கள் யாவும் எண்ணிலடங்கா சேதிகள் அதிலுண்டு..

குறைந்தது 8 பக்கங்கள் ஒரு கடிதத்திலுண்டு..
ஓரவிழிப் பார்வையில் பார்க்கும் போது..
யாரும் பார்க்கிறார்களோ என்ற எண்ணமுமுண்டு..

ஆயிரம் முத்தங்கள் அதிலிடுவேன்..
இரவுப் பொழுதினில் இருட்டினிலும் படித்திடுவேன்..
இருவிழி கண்ணீர் வழிந்தோட..இருபது தரம் படித்திடுவேன்..

நெஞ்சோடு அனைத்தபடி..
நிலவு மட்டும் விழித்திருக்க..
நினைவுகளால் விழி நீரால் நிறைந்திருக்கும்...

கனவுகள் மட்டும் வாழ்க்கையாய்..
நினைவுகளில் கதைகள் பல சொல்லி..
காலங்கள் கடிதஉறவில் மலர்ந்திருக்கும்..

நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்.. smile.gif


This post has been edited by Thanimathy: Sep 22 2009, 01:00 AM


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
meera
post Sep 21 2009, 07:50 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 977
Joined: 25-July 06
From: germany
Member No.: 589



படமாக காட்சிகள் மனக்கண்முன்னே ஓடுகிறது
உங்கள் கவிதையை படிக்கும் போது…
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்…
உள்ளம் தொடரும் உறவுகளின் வடிவங்கள் மாறலாம்…
உண்மையான அன்பு என்றும் மாறாது…
உயிருள்ளவரை தொடரும்... உணர்வுகளில் வாழும்…
அழகான கவிக்கு வாழ்த்துக்கள்…
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Sep 27 2009, 05:31 AM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (meera @ Sep 21 2009, 08:50 AM) *
படமாக காட்சிகள் மனக்கண்முன்னே ஓடுகிறது
உங்கள் கவிதையை படிக்கும் போது…
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்…
உள்ளம் தொடரும் உறவுகளின் வடிவங்கள் மாறலாம்…
உண்மையான அன்பு என்றும் மாறாது…
உயிருள்ளவரை தொடரும்... உணர்வுகளில் வாழும்…
அழகான கவிக்கு வாழ்த்துக்கள்…


உள்ளன்பால் நிறைந்த நன்றிகள் மீரா..... smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Sep 30 2009, 06:50 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



QUOTE
நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்..


உண்மைத் தான் தோழி!
கவிதை மிகவும் அருமை!

வாழ்த்துக்கள் தனிமதி! smile.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Oct 1 2009, 05:46 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (rathiDevi_u @ Sep 30 2009, 07:50 AM) *
உண்மைத் தான் தோழி!
கவிதை மிகவும் அருமை!

வாழ்த்துக்கள் தனிமதி! smile.gif


நன்றி ரதிதேவி... smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM