IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
வாழ்ந்து பாரு...
Thanimathy
post Oct 10 2009, 09:44 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்ந்து பாரு... smile.gif



ஓடும் வரை ஓடு..
ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு..
தேடும் வரை தேடு..
தேடிய யாவும்
நேர்மைதானா என்று பாரு..

வாழும் வரை வாழு..
வாழும் போது
நல்லதை மட்டும் செய்து வாழு..
கூறுவதைக் கூறு..
அடுத்தவரைக் குறை கூறாது கூறு..

உன்னை நீ முதலில்
உணர்ந்து கொள்ளு..
பிறருக்கு..
உண்மையாக நடந்து கொள்ளு.

நாளைய நாளில்
நம்பிக்கை கொள்ளு..
நான் நான் என்ற அகங்காரத்தை
விட்டுத் தள்ளு.


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Oct 11 2009, 03:35 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



QUOTE
ஓடும் வரை ஓடு..
ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு..
தேடும் வரை தேடு..
தேடிய யாவும்
நேர்மைதானா என்று பாரு..

வாழும் வரை வாழு..
வாழும் போது
நல்லதை மட்டும் செய்து வாழு..
கூறுவதைக் கூறு..
அடுத்தவரைக் குறை கூறாது கூறு..



மிக அருமையான கவிதை வரிகள்!
வாழ்த்துக்கள் தனிமதி! rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Oct 13 2009, 09:28 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



சந்த வகைக் கவிதை முயற்சிக்குப்
பாராட்டுக்கள் தனிமதி . . .

இப்படி முயன்றால் ஓசை உள் வாங்கி எழுதலாம்தானே ?

-------------------------------
உன்னை முதலில்
உணர்ந்தே கொள்
உண்மை யாக
நடந்தே கொள்


நாளைய நாளை
நம்பிக் கொள்
நான் எனும் அகந்தை
விட்டுத் தள் !

--------------------------------

இதே போல் முதல் மூன்று பத்திகளையும்
மாற்றினால் இன்னும் மேலே ஒரு படி ஏறலாம் !

வாழ்த்துக்களோடு . . .


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Oct 14 2009, 05:41 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (மகுட @ Oct 13 2009, 09:28 PM) *
சந்த வகைக் கவிதை முயற்சிக்குப்
பாராட்டுக்கள் தனிமதி . . .

இப்படி முயன்றால் ஓசை உள் வாங்கி எழுதலாம்தானே ?

-------------------------------
உன்னை முதலில்
உணர்ந்தே கொள்
உண்மை யாக
நடந்தே கொள்


நாளைய நாளை
நம்பிக் கொள்
நான் எனும் அகந்தை
விட்டுத் தள் !

--------------------------------

இதே போல் முதல் மூன்று பத்திகளையும்
மாற்றினால் இன்னும் மேலே ஒரு படி ஏறலாம் !

வாழ்த்துக்களோடு . . .


மிக்க நன்றி மகுடதீபன் அண்ணா..
முயன்றால் முடியாதது எதுவுமில்லை...
முயற்சி செய்கிறேன்...உங்கள் வாழ்த்துகளோடு.. biggrin.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:55 AM