நிலா முற்றம்: இனி என்று நிறைவேறும்???? - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

இனி என்று நிறைவேறும்????

#1 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 12 June 2010 - 09:33 AM

வானத்தில் சிறகடித்துப்பறக்கும் பறவை போல் தானும் எண்ணச்சிறகை விரித்து இந்த உலகமே தனக்கு மட்டும்தான் சொந்தம் என பறந்து திரிந்து கொண்டு இருந்தாள் பிரியா. ஆனால் இன்றும் கண்ணீரால் உடல் கழுவி, விடும் பெருமூச்சு வெப்பத்தால் காய்ந்து வெந்து துடித்துக் கொண்டிருக்கிறாள்.

இன்றோடு அவளின் வயது 28. இதனை சந்தோசமாகக் கொண்டாட யாருமே அவளின் அருகில் யாரும் இல்லை!!!

பிரியா அவளுடைய சிறு வயதில் அவளுடைய தாயான உமையாளுடன் மட்டும் தான் பிரியா ஒட்டி பழகுவாள். அவள் தான் அவளுக்கு எல்லாமே செய்ய வேண்டும். தந்தை மணி, அவளோடு பேசவதே கிடையாது. அவளுடைய தாயாரை தவிர வேறு ஒருவரும் அவளிடம் சரியாக பேச மாட்டார்கள். தன் கூட பிறந்தவர்கள் கூட இவளை கேலிசெய்வார்கள். ஏனென்றால் அவர்களை விட இவளின் அழகு சற்று கம்மிதான். ஆகையால் இவளிடம் அவர்கள்கூட சரியாக பேச மாட்டார்கள். வெளியே கடைக்கு சென்றாலும் இவளை விடுத்துதான் செல்வார்கள். பேசும்பொழுதும் இவளை ஒதுக்கிவைத்துத்தான் பேசுவார்கள்.

ஒரு முறை மணி வேலைக்கு செல்லும்போது எதிர்ச்சியாக கடந்த பிரியாவை அடித்து தள்ளிவிட்டான், பழைய நிலைமைக்குத் திரும்ப கிட்டத்தட்ட மூன்று நாட்கள் எடுத்தது.பிரியா பிறந்த அதிர்ஷ்டம் தான் தன் நிலை தாழ்ந்ததாக நினைக்கும் மணியின் நினைப்பு இன்றுவரை துரத்திக் கொண்டுதானிருக்கிறது.

மணி பிரியாவின் மனதை நோகடிக்கும் வார்த்தைகளைக் கொட்டும் போது அவள் மனதால் எவ்வளவோ பாதிக்கப்பட்டு உடைந்தும் போகிறாள். தன்னை நேசிக்க, தன்னை அன்பாய்க் கவனிக்க ஓர் அன்பான உள்ளம் கிடைக்காதா என மனம் நொந்து அதை வெளியே தேடவும் முனைகின்றாள்.

அவளின் தேடல் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.. ஆம் இவளின் வாழ்கையில் முதல் திருப்பம். இவளின் திருமண நிகழ்வுதான் அது. இவளின் தந்தை இவளுக்கு அவசர அவசரமாக திருமணத்தை முடிவு செய்கிறார் ஒரு psycho விற்கு. இது யாருக்கும் தெரியாது. யாதுமறியா பாவம் இவளின் கனவு, ஆசை, எதிர்காலம் எல்லாமே அவளின் முதலிரவு அன்றே முற்றுப் பெற்றுவிட்டது.

மறுநாள் அவளின் தாயின் முகத்தை பார்த்தால், அவள் தாயின் மகிழ்ச்சியான அந்த முகத்தை ஏமாற்ற வேண்டாம் என்று எதுவும் சொல்லவில்லை. பிரியாவின் கணவனின் கொடுமை தொடர்ந்தது, அவள் சகித்துக் கொண்டால், கணவனின் கொடுமை எல்லையை மீறியது. யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

தோழிகளிடமும் சொல்லமுடியவில்லை. அவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மணம் முன்வரவில்லை. அவள் கணவனின் கொடுமையும், சந்தேகமும் அதிகரித்துக் கொண்டே போனது. இவளின் பேச்சும் குறைந்துக் கொண்டேயிருந்தது. அவளின் தாய்க்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது பிரியாவின் கணவன்மீது. இதற்கு முடிவு கட்ட ஒரு முடிவு எடுத்தாள், தன் மகளை காப்பாற்ற தன்னுடனே அழைத்து செல்ல முடிவு செய்தாள். ஆனால் நம்ம பிரியாவின் தந்தை மணியோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், பிரியாவை தன் வீட்டிற்கு கூட்டிவரக் கூடாது என்று தன் மனைவிக்கு ஆனையிட்டான் மணி. பிரியா திக்காடி போனாள். ஆனால் உமையாலோ அதை ஏற்கவில்லை.

கடைசியில் பல போரட்டங்களுக்கு பிறகு அவளுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் இவளின் மனதில் ஏதோ வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை.. எத்தனை தடைகளை தாண்டவேண்டும் என்று நினைவு மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. இன்றுவரை தடைகளையும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள். ஆயினும் மனம் தளராமல் வேலைக்கு சென்றுகொண்டு தன்னை பார்த்துக்கொள்கிறாள்.

இவளுடன் இருப்பவர்கள் இவளை வற்புறுத்தி மறுமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தார்கள். இவளும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை அமைந்தது. ஓர்நாள் அவளுக்கு திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போயிற்று. மறுநாள் காலை எழுந்தவுடன் டாக்டரிடம் பரிசோதனை செய்ய ஆயுத்தமானாள். இடிவந்து விழுந்தது அவளுக்கு இரத்த புற்றுநோய் என்று!!

கலங்கினாள், உள்ளுக்குள்ளே குமுரினாள், யாரிடம் சொல்வதென்று தெரியாமல் திகைத்தாள், அவளின் தாயிடம் சொன்னாள், தாயோ என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள், தன் சகோதரனிடம் அறிவித்தால் அவனோ ஈவு இறக்கமற்றவன், நீ இங்கிருந்தால் எங்களுக்கும் தொற்றிக்கொள்ளும், எங்களுக்கும் வீணாக செலவுதான் என்றான், தாயோ மறுத்தாள் நான் பெற்ற மகள் அவள், நானே பார்த்துகொள்கிறேன் என்றாள், அவர்களுகிடையே சண்டை மூண்டது, கடைசியில் பிரியா அவர்களை விடுத்து தனியே வௌதயேறினாள்.

அந்த கடவுள் எழுதிய தீர்ப்பை யாரலும் தப்பமுடியாது. இது இவள் வாழ்க்கையில் விதிவிலக்கா என்ன?? நண்பர்களிடம் உதவி நாடினாள், ஆனால் இவளுக்கு முன்வர யாருமேயில்லை!! பெற்றவர்களுமில்லை, சுற்றத்தாரும் உதவ முன்வரவேயில்லை. இவளின் உதவியை சுரண்டியவர்கள் கூட இவளின் பக்கத்திலில்லை.

அதன்பின் இவளுக்கு என்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டால். தனித்தே நின்று தன்னால் இயன்றவரை முடியாதவர்களுக்கு செய்துக்கொண்டு, தனித்தே வாழ்கிறாள்.. இவளும் ஒரு பெண்தானே!! இவளின் தாகம் இனி என்று நிறைவேறும்????

This post has been edited by சத்தியா: 12 June 2010 - 02:49 PM

புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#2 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 12 June 2010 - 02:57 PM


பெண்ணாய்ப் படைத்து
பெரும் துன்பத்தையும் கொடுத்து
பேதை அவளை ஆடுடா ஆடு என்று
ஆட்டுவித்துப் பார்க்கிறான் அவன்.

ம்ம்... வாழ்த்துக்கள் pushpa. smile.gif

வணக்கம் pushpa.

புதிய உறவான உங்களையும் அன்போடு வரவேற்றுக் கொள்கின்றேன்.

உங்களைப் பற்றிய சிறியதோர் அறிமுகத்தை அறிமுகப் பகுதிக்குச் சென்று
அறிமுகம் செய்து விடுங்களேன். இது நிலா முற்றத்தின் சார்பாக அன்பான வேண்டுகோள். smile.gif

0

#3 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 12 June 2010 - 03:23 PM

மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு.. இதுவே எனது புதியகதை .

This post has been edited by pushpa: 12 June 2010 - 03:39 PM

புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#4 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 12 June 2010 - 03:33 PM

QUOTE (pushpa @ Jun 12 2010, 03:23 PM) <{POST_SNAPBACK}>
மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு.. இதுவே எனது புதிய கட்டுரை..


இது கட்டுரையா...? அல்லது கதையா pushpa...? rolleyes.gif

0

#5 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 12 June 2010 - 03:36 PM

மன்னிக்கவும் இதுவே எனது புதிய கதைதான்..

புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#6 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 12 June 2010 - 03:38 PM

QUOTE (pushpa @ Jun 12 2010, 04:36 PM) <{POST_SNAPBACK}>
மன்னிக்கவும் இதுவே எனது புதிய கதைதான்..


ம்ம்... ஓகே ஓகே... smile.gif

0

#7 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 13 June 2010 - 03:08 AM

QUOTE
அதன்பின் இவளுக்கு என்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டால். தனித்தே நின்று தன்னால் இயன்றவரை முடியாதவர்களுக்கு செய்துக்கொண்டு, தனித்தே வாழ்கிறாள்.. இவளும் ஒரு பெண்தானே!! இவளின் தாகம் இனி என்று நிறைவேறும்????


பெண்ணாய் பிறந்தாலே பாவம் தான் போல...
வாழ்த்துக்கள் புஷ்பா! smile.gif
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு


Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#8 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 14 June 2010 - 02:48 PM

QUOTE (rathiDevi_u @ Jun 13 2010, 08:38 AM) <{POST_SNAPBACK}>
பெண்ணாய் பிறந்தாலே பாவம் தான் போல...
வாழ்த்துக்கள் புஷ்பா! smile.gif


பாவம் தான் ரதிதேவி...
புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#9 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,018
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 17 June 2010 - 03:34 AM

ப்ரியாவின் வாழ்க்கையில்
திருமணத்தின் பின்பு ஏதாவது வசந்தம் என்று நினைத்தால்..
வந்தவனும் சரியில்லை..
மறு மணத்திலாவது வாழ்வு மலரும் என்றால்..
அதுவும் இரத்தப் புற்று நோயாகிவிட்டது...
இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கை கண்ணீரில் கரைந்து செல்லுகின்றது..
பெற்ற அன்னை என்பதால் பாவம் அவரும் துடியாய் துடிக்கிறார்..

கதைவாசிக்கும் போது உண்மைச் சம்பவம் ஒன்றை படிப்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது..

வாழ்த்துக்கள் புஷ்பா thumbs_up.gif
உங்கள் ஆக்கங்கள் யாவும் பிரமாதம்.. smile.gif



கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#10 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 18 June 2010 - 09:09 AM

QUOTE (Thanimathy @ Jun 17 2010, 09:04 AM) <{POST_SNAPBACK}>
ப்ரியாவின் வாழ்க்கையில்
திருமணத்தின் பின்பு ஏதாவது வசந்தம் என்று நினைத்தால்..
வந்தவனும் சரியில்லை..
மறு மணத்திலாவது வாழ்வு மலரும் என்றால்..
அதுவும் இரத்தப் புற்று நோயாகிவிட்டது...
இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கை கண்ணீரில் கரைந்து செல்லுகின்றது..
பெற்ற அன்னை என்பதால் பாவம் அவரும் துடியாய் துடிக்கிறார்..

கதைவாசிக்கும் போது உண்மைச் சம்பவம் ஒன்றை படிப்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது..

வாழ்த்துக்கள் புஷ்பா thumbs_up.gif
உங்கள் ஆக்கங்கள் யாவும் பிரமாதம்.. smile.gif


தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. இது அனைத்தும் உண்மை கதையே! இது என் சொந்த கதைதான்... இங்கு கதையாக பதித்திருக்கிறேன்...
புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#11 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,018
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 19 June 2010 - 01:04 AM

QUOTE (pushpa @ Jun 18 2010, 09:09 AM) <{POST_SNAPBACK}>
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. இது அனைத்தும் உண்மை கதையே! இது என் சொந்த கதைதான்... இங்கு கதையாக பதித்திருக்கிறேன்...



ohmy.gif
உண்மையாகவா சகோதரி..... sad.gif

இதில் தாயாகவா.....அல்லது......ப்ரியாகவா....?

அறியத்தருவதில் தாங்கள் ஏதும் வேதனையடைந்தால் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்...
குறையேதும் எண்ணமாட்டேன்....தங்கள் நலன் காக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#12 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 19 June 2010 - 06:22 AM

QUOTE (Thanimathy @ Jun 19 2010, 06:34 AM) <{POST_SNAPBACK}>
ohmy.gif
உண்மையாகவா சகோதரி..... sad.gif

இதில் தாயாகவா.....அல்லது......ப்ரியாகவா....?

அறியத்தருவதில் தாங்கள் ஏதும் வேதனையடைந்தால் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்...
குறையேதும் எண்ணமாட்டேன்....தங்கள் நலன் காக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...


"பிரியா" வாக
புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#13 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 19 June 2010 - 10:58 AM



புஷ்பா... இது உங்கள் சொந்தக் கதை என்றதும்
என் நெஞ்சம் பதைபதைத்து வேதனையைப் பிழிகிறது.
உங்களுக்கு எப்படி ஆறுதல் வார்த்தை சொல்லது என்றே தெரியவில்லை.
ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதனைகளையும், வேதனைகளையும் தந்து
வாட்டி வதைக்கிறானோ என்று நினைத்து அவன் மேல்த்தான் கோபம் வருகிறது.

மனதைத் தளர விடாதீர்கள் புஷ்பா. எல்லாவற்றையும் அந்த ஆண்டவன் தலையில் போட்டுவிட்டு
முடிந்தவரை மனதுக்கு சந்தோசம்தரும் பாதையிலே உங்கள் பயணத்தைத் தொடரப் பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் அருகில் நான் இருப்பேனேயானால் என்றும் உங்களுக்கு ஆறுதலாய், துணையாய் இருப்பேன்.
ஆனால் நான் இருப்பதோ வெகு வெகு தொலைவில். உங்களுக்கு வார்த்தைகளால் ஒத்தடம் தருவதைத் தவிர
இங்கிருந்து கொண்டு என்னால் வேறு என்னதான் செய்ய முடியும் புஷ்பா...? sad.gif

0

#14 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 19 June 2010 - 11:55 AM

QUOTE (சத்த @ Jun 19 2010, 04:28 PM) <{POST_SNAPBACK}>


புஷ்பா... இது உங்கள் சொந்தக் கதை என்றதும்
என் நெஞ்சம் பதைபதைத்து வேதனையைப் பிழிகிறது.
உங்களுக்கு எப்படி ஆறுதல் வார்த்தை சொல்லது என்றே தெரியவில்லை.
ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதனைகளையும், வேதனைகளையும் தந்து
வாட்டி வதைக்கிறானோ என்று நினைத்து அவன் மேல்த்தான் கோபம் வருகிறது.

மனதைத் தளர விடாதீர்கள் புஷ்பா. எல்லாவற்றையும் அந்த ஆண்டவன் தலையில் போட்டுவிட்டு
முடிந்தவரை மனதுக்கு சந்தோசம்தரும் பாதையிலே உங்கள் பயணத்தைத் தொடரப் பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் அருகில் நான் இருப்பேனேயானால் என்றும் உங்களுக்கு ஆறுதலாய், துணையாய் இருப்பேன்.
ஆனால் நான் இருப்பதோ வெகு வெகு தொலைவில். உங்களுக்கு வார்த்தைகளால் ஒத்தடம் தருவதைத் தவிர
இங்கிருந்து கொண்டு என்னால் வேறு என்னதான் செய்ய முடியும் புஷ்பா...? sad.gif


மிக்க நன்றி உங்களிடம் என் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டதே என் சகோதரியிடம் பகிர்ந்துகொண்டது போலுள்ளது... நன்றி சத்தியா... உங்களின் ஆறுதல் என்னை மிகவும் பலபடுத்துகிறது....

This post has been edited by pushpa: 19 June 2010 - 11:56 AM

புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#15 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,018
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 19 June 2010 - 02:01 PM

QUOTE (pushpa @ Jun 19 2010, 07:22 AM) <{POST_SNAPBACK}>
"பிரியா" வாக


பிரியாகவா......?
புஷ்பா உங்கள் நிலையை எண்ணிவேதனையடைகின்றேன்....
நிறைய நிறைய எழுதவேணும் என்று வந்தேன்....ஆனால் துக்கம் தொண்டைவரை வந்து கண்ணீரைத்தருகிறது..இரத்தப்புற்று நோயானால், அதற்கான சிகிச்சை எந்தளவில் பயனளிக்கின்றது...? டாக்டர் என்ன சொல்லியிருக்கிறார்....?

மனம் திறந்து என்ன எழுதுவருகிறீர்களோ அத்தனையும் எழுதிவாருங்கள்.....நிலா அவர்களின் ஏற்பாட்டினால் இந்த முற்றம் ஆதரவாகவும், ஆறுதலாகவும் எப்பொழுதும் இருக்கும். மனத் தைரியத்துடன் வாழுங்கள்..புஷ்பா..கடவுளை வழிபடுங்கள். அப்பொழுதாவது மனம் சிறு மனச்சாந்தியடையும்.

QUOTE
நண்பர்களிடம் உதவி நாடினாள், ஆனால் இவளுக்கு முன்வர யாருமேயில்லை!! பெற்றவர்களுமில்லை, சுற்றத்தாரும் உதவ முன்வரவேயில்லை. இவளின் உதவியை சுரண்டியவர்கள் கூட இவளின் பக்கத்திலில்லை.


உங்கள் கூடவே பிறக்காவிடினும், கூடப்பிறந்த சகோதரியாக நினைத்து கேட்கிறேன்....உங்களுக்கு ஏதும் சிறு உதவியாவது செய்ய வேண்டுமாயின் எழுதுங்கள் புஷ்பா. அன்புடன் கேட்டு எழுதுகிறேன்..

யாருமில்லையே என அழவேண்டாம். சந்தோசமாகயிருங்கள் புஷ்பா..

நான் கேட்டவுடன் உடனே பதில் தந்தமைக்கு என் ஆத்மார்த்தமான நன்றி...சகோதரி..


கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#16 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 20 June 2010 - 03:05 PM

QUOTE (Thanimathy @ Jun 19 2010, 07:31 PM) <{POST_SNAPBACK}>
பிரியாகவா......?
புஷ்பா உங்கள் நிலையை எண்ணிவேதனையடைகின்றேன்....
நிறைய நிறைய எழுதவேணும் என்று வந்தேன்....ஆனால் துக்கம் தொண்டைவரை வந்து கண்ணீரைத்தருகிறது..இரத்தப்புற்று நோயானால், அதற்கான சிகிச்சை எந்தளவில் பயனளிக்கின்றது...? டாக்டர் என்ன சொல்லியிருக்கிறார்....?

மனம் திறந்து என்ன எழுதுவருகிறீர்களோ அத்தனையும் எழுதிவாருங்கள்.....நிலா அவர்களின் ஏற்பாட்டினால் இந்த முற்றம் ஆதரவாகவும், ஆறுதலாகவும் எப்பொழுதும் இருக்கும். மனத் தைரியத்துடன் வாழுங்கள்..புஷ்பா..கடவுளை வழிபடுங்கள். அப்பொழுதாவது மனம் சிறு மனச்சாந்தியடையும்.



உங்கள் கூடவே பிறக்காவிடினும், கூடப்பிறந்த சகோதரியாக நினைத்து கேட்கிறேன்....உங்களுக்கு ஏதும் சிறு உதவியாவது செய்ய வேண்டுமாயின் எழுதுங்கள் புஷ்பா. அன்புடன் கேட்டு எழுதுகிறேன்..

யாருமில்லையே என அழவேண்டாம். சந்தோசமாகயிருங்கள் புஷ்பா..

நான் கேட்டவுடன் உடனே பதில் தந்தமைக்கு என் ஆத்மார்த்தமான நன்றி...சகோதரி..


நன்றி தனிமதி... உங்களின் வாழ்த்துக்களும், பிராத்தனைகளும் என்னை வாழ வைக்கட்டும்..இன்றளவும் நான் எதையும் யாரிடமும் எதிர்ப்பார்த்ததில்லை.. ஆனால் இன்றோ.. என் நிலைமையே வேறு... எனக்கு ஆறுதலாக நீங்கள் தரும் இந்த உற்சாகம் தரும் இந்த உண்மையான வார்த்தைகளே போதும் சகோதரி... என் கண்ணீருடன் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

#17 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,018
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 20 June 2010 - 09:50 PM

QUOTE (pushpa @ Jun 20 2010, 04:05 PM) <{POST_SNAPBACK}>
நன்றி தனிமதி... உங்களின் வாழ்த்துக்களும், பிராத்தனைகளும் என்னை வாழ வைக்கட்டும்..இன்றளவும் நான் எதையும் யாரிடமும் எதிர்ப்பார்த்ததில்லை.. ஆனால் இன்றோ.. என் நிலைமையே வேறு... எனக்கு ஆறுதலாக நீங்கள் தரும் இந்த உற்சாகம் தரும் இந்த உண்மையான வார்த்தைகளே போதும் சகோதரி... என் கண்ணீருடன் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..



நன்றி புஷ்பா...
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#18 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 04 July 2010 - 05:21 PM

நான் வழமை போல ஏதோ ஒரு கதை தானே ...நேரம் கிடைக்கையில் பார்ப்போம் என்று பாராதிருந்து இன்று படித்தேன், அந்தோ...இதயம் கசிந்து அழுகின்றது..ஒரு அண்ணனாக ஆறுதல் சொல்ல முனைகின்றேன்..

இறைவன் படைத்த இந்த உலகிலே ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக உண்டு சகோதரி, துன்பங்கள் நேர்கையில் சிலவேளைகளில் அந்த இறைவனையே நாம் திட்டுவதுண்டு, பின்னர் தான் நடந்தது ஏதோ ஒருவிதத்தில் நன்மைக்கே என எம்மை நாமே தேற்றிக் கொள்வோம்..
எனினும் எமக்கு இருக்கும் எத்தனையோ எதிர்பார்ப்புகளும் ஒரு சில காரணங்களால் இடிந்து போவது தாங்க முடியாத ஒன்றே, ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை உதறித் தள்ளும் போது சிலவேளைகளில் எம்மை நாடி நற் செய்தி வந்தடையும், அப்போது எமக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் வந்துவிடும்.....இதுதான் நியதி, இதுதான் இறைவன் எமக்கு விட்ட வழி...

வேறு ஒருவனுக்கு ஆரோக்கிய வாழ்வும், கை நிறைய காசும் கொடுக்கும் அதே கடவுள் ஏன் சிலரை சோதிக்கின்றார் என்றால் அதற்கு நிறைய அர்த்தம் உண்டு....நாம் இந்த உலகில் செய்யவென ஒரு பணி உண்டு அதனை நாம் தேர்ந்தெடுக்கும் வரை இறைவன் விட்டு வைப்பதில்லை...நிச்சயமாக உள்ளன்புடன் இறைவனை அணுகுங்கள்...பின்பு ஏற்படும் மாற்றங்களைப் பாருங்கள்...இறைவன் மீது சந்தேகம் வேண்டாம்.....

இரத்தப் புற்றுநோய் என்பது பலவகை உண்டு, அதில் எந்த வகை என்று உங்களுக்குத் தெரியுமா? எந்த மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்கின்றீர்கள்?

யாருமில்லை என்று மட்டும் வருந்த வேண்டாம்...உங்களுக்காக சகோதரிகள், சகோதரர்கள் உண்டு என்பதை மறக்கவேண்டாம்..இறைவன் உங்களுக்கு தந்திருக்கும் திறமையை சற்று பெரிதாக பயன்படுத்துங்கள்..எழுதுங்கள் கவிதைகளை....உங்கள் ஆக்கம் மிகவும் நன்று...உங்களுக்கென்று ஒரு இணையம் உருவாக்க ஆர்வமெனில் நான் உதவுகின்றேன்..

ஆண்டவன் அருளால் உங்கள் உடல் நலம் பெற அந்த எல்லாம் வல்லவனை நானும் பிரார்த்திக்கின்றேன்..

medphoenix@x10email.com

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!


Posted Image

0

#19 User is offline   pushpa 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 35
  • Joined: 12-June 10
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 10 July 2010 - 01:28 PM

QUOTE (பாரத @ Jul 4 2010, 10:51 PM) <{POST_SNAPBACK}>
நான் வழமை போல ஏதோ ஒரு கதை தானே ...நேரம் கிடைக்கையில் பார்ப்போம் என்று பாராதிருந்து இன்று படித்தேன், அந்தோ...இதயம் கசிந்து அழுகின்றது..ஒரு அண்ணனாக ஆறுதல் சொல்ல முனைகின்றேன்..

இறைவன் படைத்த இந்த உலகிலே ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக உண்டு சகோதரி, துன்பங்கள் நேர்கையில் சிலவேளைகளில் அந்த இறைவனையே நாம் திட்டுவதுண்டு, பின்னர் தான் நடந்தது ஏதோ ஒருவிதத்தில் நன்மைக்கே என எம்மை நாமே தேற்றிக் கொள்வோம்..
எனினும் எமக்கு இருக்கும் எத்தனையோ எதிர்பார்ப்புகளும் ஒரு சில காரணங்களால் இடிந்து போவது தாங்க முடியாத ஒன்றே, ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை உதறித் தள்ளும் போது சிலவேளைகளில் எம்மை நாடி நற் செய்தி வந்தடையும், அப்போது எமக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் வந்துவிடும்.....இதுதான் நியதி, இதுதான் இறைவன் எமக்கு விட்ட வழி...

வேறு ஒருவனுக்கு ஆரோக்கிய வாழ்வும், கை நிறைய காசும் கொடுக்கும் அதே கடவுள் ஏன் சிலரை சோதிக்கின்றார் என்றால் அதற்கு நிறைய அர்த்தம் உண்டு....நாம் இந்த உலகில் செய்யவென ஒரு பணி உண்டு அதனை நாம் தேர்ந்தெடுக்கும் வரை இறைவன் விட்டு வைப்பதில்லை...நிச்சயமாக உள்ளன்புடன் இறைவனை அணுகுங்கள்...பின்பு ஏற்படும் மாற்றங்களைப் பாருங்கள்...இறைவன் மீது சந்தேகம் வேண்டாம்.....

இரத்தப் புற்றுநோய் என்பது பலவகை உண்டு, அதில் எந்த வகை என்று உங்களுக்குத் தெரியுமா? எந்த மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்கின்றீர்கள்?

யாருமில்லை என்று மட்டும் வருந்த வேண்டாம்...உங்களுக்காக சகோதரிகள், சகோதரர்கள் உண்டு என்பதை மறக்கவேண்டாம்..இறைவன் உங்களுக்கு தந்திருக்கும் திறமையை சற்று பெரிதாக பயன்படுத்துங்கள்..எழுதுங்கள் கவிதைகளை....உங்கள் ஆக்கம் மிகவும் நன்று...உங்களுக்கென்று ஒரு இணையம் உருவாக்க ஆர்வமெனில் நான் உதவுகின்றேன்..

ஆண்டவன் அருளால் உங்கள் உடல் நலம் பெற அந்த எல்லாம் வல்லவனை நானும் பிரார்த்திக்கின்றேன்..

medphoenix@x10email.com


நன்றி பாரதி

This post has been edited by சத்தியா: 10 July 2010 - 01:46 PM

புஷ்பா

இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users