இன்றோடு அவளின் வயது 28. இதனை சந்தோசமாகக் கொண்டாட யாருமே அவளின் அருகில் யாரும் இல்லை!!!
பிரியா அவளுடைய சிறு வயதில் அவளுடைய தாயான உமையாளுடன் மட்டும் தான் பிரியா ஒட்டி பழகுவாள். அவள் தான் அவளுக்கு எல்லாமே செய்ய வேண்டும். தந்தை மணி, அவளோடு பேசவதே கிடையாது. அவளுடைய தாயாரை தவிர வேறு ஒருவரும் அவளிடம் சரியாக பேச மாட்டார்கள். தன் கூட பிறந்தவர்கள் கூட இவளை கேலிசெய்வார்கள். ஏனென்றால் அவர்களை விட இவளின் அழகு சற்று கம்மிதான். ஆகையால் இவளிடம் அவர்கள்கூட சரியாக பேச மாட்டார்கள். வெளியே கடைக்கு சென்றாலும் இவளை விடுத்துதான் செல்வார்கள். பேசும்பொழுதும் இவளை ஒதுக்கிவைத்துத்தான் பேசுவார்கள்.
ஒரு முறை மணி வேலைக்கு செல்லும்போது எதிர்ச்சியாக கடந்த பிரியாவை அடித்து தள்ளிவிட்டான், பழைய நிலைமைக்குத் திரும்ப கிட்டத்தட்ட மூன்று நாட்கள் எடுத்தது.பிரியா பிறந்த அதிர்ஷ்டம் தான் தன் நிலை தாழ்ந்ததாக நினைக்கும் மணியின் நினைப்பு இன்றுவரை துரத்திக் கொண்டுதானிருக்கிறது.
மணி பிரியாவின் மனதை நோகடிக்கும் வார்த்தைகளைக் கொட்டும் போது அவள் மனதால் எவ்வளவோ பாதிக்கப்பட்டு உடைந்தும் போகிறாள். தன்னை நேசிக்க, தன்னை அன்பாய்க் கவனிக்க ஓர் அன்பான உள்ளம் கிடைக்காதா என மனம் நொந்து அதை வெளியே தேடவும் முனைகின்றாள்.
அவளின் தேடல் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.. ஆம் இவளின் வாழ்கையில் முதல் திருப்பம். இவளின் திருமண நிகழ்வுதான் அது. இவளின் தந்தை இவளுக்கு அவசர அவசரமாக திருமணத்தை முடிவு செய்கிறார் ஒரு psycho விற்கு. இது யாருக்கும் தெரியாது. யாதுமறியா பாவம் இவளின் கனவு, ஆசை, எதிர்காலம் எல்லாமே அவளின் முதலிரவு அன்றே முற்றுப் பெற்றுவிட்டது.
மறுநாள் அவளின் தாயின் முகத்தை பார்த்தால், அவள் தாயின் மகிழ்ச்சியான அந்த முகத்தை ஏமாற்ற வேண்டாம் என்று எதுவும் சொல்லவில்லை. பிரியாவின் கணவனின் கொடுமை தொடர்ந்தது, அவள் சகித்துக் கொண்டால், கணவனின் கொடுமை எல்லையை மீறியது. யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
தோழிகளிடமும் சொல்லமுடியவில்லை. அவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மணம் முன்வரவில்லை. அவள் கணவனின் கொடுமையும், சந்தேகமும் அதிகரித்துக் கொண்டே போனது. இவளின் பேச்சும் குறைந்துக் கொண்டேயிருந்தது. அவளின் தாய்க்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது பிரியாவின் கணவன்மீது. இதற்கு முடிவு கட்ட ஒரு முடிவு எடுத்தாள், தன் மகளை காப்பாற்ற தன்னுடனே அழைத்து செல்ல முடிவு செய்தாள். ஆனால் நம்ம பிரியாவின் தந்தை மணியோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், பிரியாவை தன் வீட்டிற்கு கூட்டிவரக் கூடாது என்று தன் மனைவிக்கு ஆனையிட்டான் மணி. பிரியா திக்காடி போனாள். ஆனால் உமையாலோ அதை ஏற்கவில்லை.
கடைசியில் பல போரட்டங்களுக்கு பிறகு அவளுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் இவளின் மனதில் ஏதோ வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை.. எத்தனை தடைகளை தாண்டவேண்டும் என்று நினைவு மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. இன்றுவரை தடைகளையும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள். ஆயினும் மனம் தளராமல் வேலைக்கு சென்றுகொண்டு தன்னை பார்த்துக்கொள்கிறாள்.
இவளுடன் இருப்பவர்கள் இவளை வற்புறுத்தி மறுமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தார்கள். இவளும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை அமைந்தது. ஓர்நாள் அவளுக்கு திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போயிற்று. மறுநாள் காலை எழுந்தவுடன் டாக்டரிடம் பரிசோதனை செய்ய ஆயுத்தமானாள். இடிவந்து விழுந்தது அவளுக்கு இரத்த புற்றுநோய் என்று!!
கலங்கினாள், உள்ளுக்குள்ளே குமுரினாள், யாரிடம் சொல்வதென்று தெரியாமல் திகைத்தாள், அவளின் தாயிடம் சொன்னாள், தாயோ என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள், தன் சகோதரனிடம் அறிவித்தால் அவனோ ஈவு இறக்கமற்றவன், நீ இங்கிருந்தால் எங்களுக்கும் தொற்றிக்கொள்ளும், எங்களுக்கும் வீணாக செலவுதான் என்றான், தாயோ மறுத்தாள் நான் பெற்ற மகள் அவள், நானே பார்த்துகொள்கிறேன் என்றாள், அவர்களுகிடையே சண்டை மூண்டது, கடைசியில் பிரியா அவர்களை விடுத்து தனியே வௌதயேறினாள்.
அந்த கடவுள் எழுதிய தீர்ப்பை யாரலும் தப்பமுடியாது. இது இவள் வாழ்க்கையில் விதிவிலக்கா என்ன?? நண்பர்களிடம் உதவி நாடினாள், ஆனால் இவளுக்கு முன்வர யாருமேயில்லை!! பெற்றவர்களுமில்லை, சுற்றத்தாரும் உதவ முன்வரவேயில்லை. இவளின் உதவியை சுரண்டியவர்கள் கூட இவளின் பக்கத்திலில்லை.
அதன்பின் இவளுக்கு என்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டால். தனித்தே நின்று தன்னால் இயன்றவரை முடியாதவர்களுக்கு செய்துக்கொண்டு, தனித்தே வாழ்கிறாள்.. இவளும் ஒரு பெண்தானே!! இவளின் தாகம் இனி என்று நிறைவேறும்????
This post has been edited by சத்தியா: 12 June 2010 - 02:49 PM

Help





இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.














