Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

உலகிலேயே அழகான அம்மா!


  • You cannot start a new topic
  • Please log in to reply
18 replies to this topic

#1 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 01 August 2011 - 06:05 AM

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன்,  பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான். உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்!

:ty: அம்புலிமாமா

Edited by K.Sounder, 01 August 2011 - 06:08 AM.

அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#2 கோமதி

கோமதி

    விவேகமானவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPip
  • 363 posts
  • Joined 1 Year, 10 Months and 26 Days
  • 36 topics

Posted 01 August 2011 - 10:59 AM

உலகிலேயே அன்பு மட்டும்தான் அழகு என்று அன்பை உணர்ந்தவர்களுக்கு தெரியும் சௌந்தர். அம்புலிமாமா இதழில் சிறுவர்களுக்கான நல்ல பண்படுத்தும் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, முதன்முதலில் படித்தது அம்புலிமாமாதான். ரொம்ப வருஷங்களுக்கு அது என்னுடைய ஃபேவரிட் புத்தகமாக இருந்தது. இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. குழந்தைகள், போகோ, சுட்டி போன்ற தொலைக்காட்சி  சானல்களைத்தான் அதிகம் பாரக்கிறார்கள். நல்ல கதையை கொண்டு வந்து முற்றத்தில் சேர்த்ததற்க்கு நன்றி!

#3 ரதிதேவி

ரதிதேவி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 19,820 posts
  • Joined 5 Years, 3 Months and 28 Days
  • 2,957 topics

Posted 01 August 2011 - 03:14 PM

அன்புக்கு ஏது அழகு என்பதை உணர்த்திய கதை!
நன்றி செளந்தர்
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#4 ரோஜா

ரோஜா

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,432 posts
  • Joined 2 Years, 5 Months and 6 Days
  • 52 topics

Posted 02 August 2011 - 04:28 AM

எல்லாக் குழந்தைக்கும் உலகிலேயே அழகான பெண் அதன் தாய் தான். அதே போல் எல்லா தாய்க்கும் உலகிலேயே அழகு அவளது குழந்தைதான்.
அன்பின் அழகைப் பற்றி கூறிய அழகான கதை:arumai:
பனி விழுந்த மலர்வனமாய் சிலிர்த்திடும் மனது
பைந்தமிழ் கவிதைகளின் சுவையறியும் பொழுது.

Posted ImagePosted Image

http://rojamanjari.blogspot.com

#5 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 09 August 2011 - 07:46 AM

நன்றி கோமதி
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#6 உடையார்

உடையார்

    விவேகமானவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPip
  • 464 posts
  • Joined 1 Year, 9 Months and 18 Days
  • 19 topics

Posted 09 August 2011 - 08:36 AM

நன்றி பதிவிற்கு, அழகு or அன்பு - வார்த்தையால் அளவிட முடியா
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

#7 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 11 August 2011 - 09:57 AM

View Postரதிதேவி, on 01 August 2011 - 03:14 PM, said:

அன்புக்கு ஏது அழகு என்பதை உணர்த்திய கதை!
நன்றி செளந்தர்
நன்றி ரதி
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#8 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 11 August 2011 - 10:05 AM

View PostRoja, on 02 August 2011 - 04:28 AM, said:

எல்லாக் குழந்தைக்கும் உலகிலேயே அழகான பெண் அதன் தாய் தான். அதே போல் எல்லா தாய்க்கும் உலகிலேயே அழகு அவளது குழந்தைதான்.
அன்பின் அழகைப் பற்றி கூறிய அழகான கதை:arumai:
:ty:
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#9 Caucilia Nandakumar

Caucilia Nandakumar

    வேகமானவர்

  • மலர்கள்
  • PipPipPip
  • 54 posts
  • Joined 1 Year, 9 Months and 22 Days
  • 7 topics

Posted 11 August 2011 - 12:05 PM

100% உண்மையான கருத்து. நன்று.
வாழ்க!வளர்க!                                                                                                                 அன்புடன் கௌசல்யா நந்தகுமார்

#10 செல்வி

செல்வி

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,868 posts
  • Joined 1 Year, 9 Months and 20 Days
  • 349 topics

Posted 11 August 2011 - 02:38 PM

எந்த குழந்தைக்கும் அம்மாதான் அழகு!
சிறிய, சிறப்பான கதை.
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image

#11 kutty

kutty

    வேகமானவர்

  • மலர்கள்
  • PipPipPip
  • 90 posts
  • Joined 1 Year, 9 Months and 21 Days
  • 33 topics

Posted 12 August 2011 - 01:37 AM

View PostK.Sounder, on 01 August 2011 - 06:05 AM, said:

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன்,  பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான். உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்!

:ty: அம்புலிமாமா
அறுமையான படைப்பு, மிக்க நன்றி. தொடரட்டும் தங்களின் ஆக்கம். :goodpost:
என்றும் அன்புடன்

#12 தனிமதி

தனிமதி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 29,560 posts
  • Joined 7 Years, 5 Months and 20 Days
  • 3,526 topics

Posted 12 August 2011 - 01:56 AM

முதுமை தழுவினாலும்..
முதுகு வளைந்தாலும்..
முகம், சுருங்கினாலும்..
என்றும் அம்மா அழுகுதான்.....

சிறப்பான கதை.......:arumai:
இணைப்பிற்கு நன்றி சௌந்தர்............:)
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#13 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 16 August 2011 - 09:03 AM

View Postஉடையார், on 09 August 2011 - 08:36 AM, said:

நன்றி பதிவிற்கு, அழகு or அன்பு - வார்த்தையால் அளவிட முடியா
நன்றி உடையார்
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#14 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 16 August 2011 - 09:30 AM

View PostCaucilia Nandakumar, on 11 August 2011 - 12:05 PM, said:

100% உண்மையான கருத்து. நன்று.
நன்றி
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#15 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 16 August 2011 - 09:35 AM

View PostSelvi Muniandy, on 11 August 2011 - 02:38 PM, said:

எந்த குழந்தைக்கும் அம்மாதான் அழகு!
சிறிய, சிறப்பான கதை.
நன்றி
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#16 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 16 August 2011 - 09:39 AM

View Postkutty, on 12 August 2011 - 01:37 AM, said:

அறுமையான படைப்பு, மிக்க நன்றி. தொடரட்டும் தங்களின் ஆக்கம். :goodpost:
:ty:  :ty:
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#17 srikavithaiyaalini

srikavithaiyaalini

    வளர்பிறை

  • மலர்கள்
  • PipPip
  • 30 posts
  • Joined 1 Year, 9 Months and 13 Days
  • 8 topics

Posted 16 August 2011 - 11:31 AM

:goodpost:
ஸ்ரீகவிதையாழினி..

#18 சௌந்தர்

சௌந்தர்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 832 posts
  • Joined 2 Years, 4 Months and 24 Days
  • 63 topics

Posted 29 September 2011 - 08:11 AM

View Postsrikavithaiyaalini, on 16 August 2011 - 11:31 AM, said:

:goodpost:
:ty:   :ty:
அன்புடன்
சௌந்தர்

மனதில் ஒரு மழைக்காலம்!
வெளியில் சுடும் வெயில்காலம்!

http://soundaryan.blogspot.com

Posted Image

#19 f.nihaza

f.nihaza

    விவேகமானவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPip
  • 343 posts
  • Joined 1 Year, 8 Months and 13 Days
  • 56 topics

Posted 02 October 2011 - 10:08 PM

வாவ்...
நல்ல கதை....




0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users


This topic has been visited by 0 user(s)