சொல்லிவிடு !
#1
Posted 02 January 2012 - 04:35 PM
என் செய்ய.. ஏறிட்டு மட்டும் பார்க்கிறேன்
எடுத்தெறிந்துவிட்டாய்..
எதைச் செய்ய.. ஏரியோரம் ஒதுங்கிவிட்டேன்
சுழற்சியின் போக்கில் ஒரு பாதியில்
சுட்டெரிக்கிறான் சூரியன் - மறுபாதியில்
சுருண்டு விழச் செய்கிறான் - ஏன்
சுமந்து செல்ல மறுக்கிறான் ..?
திறந்திருக்கும் விழிகளூடே - நான்
திணித்துக்கொள்ளும் அழகெலாம்
திரை கலையும் சாமத்தில்
திசை கலைந்து செல்கிறது..
ஒட்டிக்கொள்ளும் திவலைகள்
ஒய்யாரமெல்லாம் விட்டகலும் வரை
ஒடுங்கிக் கொள்ளும் ஒக்கல்கள் எல்லாம்
ஒழுங்கானதோர் தருணம் வரை
விட்டகலா வினைத் தெளிவுடன்
விடியலோ விரசமோ விகாரமோ விகிதமோ
விக்கலடைந்தும் விக்கித் தவித்தும் - அந்த
விண்ணைத் தாண்டியுந் தொடரச் சித்தங்கொண்டு
கட்டுண்ட கன்றெனக் கொட்டுண்ட சிந்தனை
கடப்பாரை கொண்டகழ்ந்து கண்ணாலகல்ந்து
கடுப்பண்டிய சொற்கலைந்து கடுவிலை தந்து
கட்புலம் தருவதெல்லாம் இச்சுகம் எனக் கொண்டு
மண்டி நான் மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் தள்ளிவிட்டாய் ..
மனம் வலிக்கிறது.. மறைக்கவில்லை
மடு கண்ட வடு துளிர்க்கிறது தடுக்கவும் இல்லை
மண்டை வெடிக்கிறது - சொல்லிவிடு !
மண்டி நான் மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் ?
மண்டி நான்.. மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் !?
#2
Posted 04 January 2012 - 08:24 AM
Quote
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் ?
மண்டி நான்.. மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் !?
இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கு என்றுதானோ!!
இருங்க இருங்க என்ன அவசரம்..?
வேதனைகளும், சோதனைகளும், இன்பங்களும், துன்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை..
நீண்ட நாட்களின் பின்னர் அருமையான கவிதை
வாழ்த்துகள் நிலா.....
#3
Posted 19 January 2012 - 04:15 PM
வாழ்த்துகள் நிலா
#4
Posted 29 January 2012 - 06:31 PM
Quote
மறுபடியும் தள்ளிவிட்டாய் ..
மனம் வலிக்கிறது.. மறைக்கவில்லை
மடு கண்ட வடு துளிர்க்கிறது தடுக்கவும் இல்லை
மண்டை வெடிக்கிறது - சொல்லிவிடு !
அழகான அருமையான கவிதை
வாழ்த்துகள் நிலா.
Edited by Suganthe, 29 January 2012 - 06:32 PM.
#5
Posted 29 January 2012 - 07:10 PM
நீண்ட நாட்களாக முற்றத்தில் உங்கள் படைப்புகள் எதுவும் வரலையே..
உங்களையும் காணவில்லையே..? நலந்தானே நிலா..
#6
Posted 31 January 2012 - 10:37 AM
#7
Posted 01 February 2012 - 06:03 AM
நிலா, on 31 January 2012 - 10:37 AM, said:
நன்றி நிலா..
நேரத்தை மிச்சப்படுத்தி வாருங்கள்......
#8
Posted 26 February 2012 - 09:59 AM
வலிகள் தான் வாழ்க்கையா?..
வாழ்த்துகள்..!
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

செம் மை கொண்டு உடமை காப்போம்!
http://www.palkalaikazhakam.com/
http://www.enthamil.com
#9
Posted 09 March 2012 - 01:48 PM
திணித்துக்கொள்ளும் அழகெலாம்
திரை கலையும் சாமத்தில்
திசை கலைந்து செல்கிறது..
..அழகான வரிகள். வாழ்த்துகள் நிலா.
என்றும் பண்புடன்.
#10
Posted 22 March 2012 - 04:18 PM
சுட்டெரிக்கிறான் சூரியன் - மறுபாதியில்
சுருண்டு விழச் செய்கிறான் - ஏன்
சுமந்து செல்ல மறுக்கிறான் ..?
அதுதானே இயற்கை நமக்கு சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்?!!!!..........வாழ்த்துகள் நிலா.
#11
Posted 02 April 2012 - 06:42 AM
#12
Posted 04 April 2012 - 09:04 AM
சோர்ந்து துவண்டுவிட்டால் பின் மீள வழியேது?
அனுபவமாய் எடுத்துக்கொண்டு மீள முயல்வது தான் சிறந்தவழி...
அருமையான வரிகள் நிலா....
அன்பு வாழ்த்துகள்...
#13
Posted 20 April 2012 - 04:03 AM
சொல்லுது காதலின் பெருமை ,
சொல்லிவிடு என்று சொல்லிவிட்டு
சொல்லாமலே போனது ..
#14
Posted 31 August 2012 - 06:50 AM
#15
Posted 16 November 2012 - 09:10 AM
தேடிச் சென்றால் விலகிச் செல்லும்-விலகிச் சென்றால் தேடிவரும். that's all.
#17
Posted 06 February 2013 - 10:09 AM
#18
Posted 25 April 2013 - 09:27 AM
வாக்கியங்களின் கோர்வையும், எழுத்து நடையும் அருமை.
#19
Posted 25 April 2013 - 09:57 AM
http://koomagan.blogspot.fr/
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/
0 user(s) are reading this topic
0 members, 0 guests, 0 anonymous users
















