என் வானில் ஓர் நிலா!, 14 - 12 - 2005 |
![]() ![]() |
என் வானில் ஓர் நிலா!, 14 - 12 - 2005 |
Dec 14 2005, 10:16 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
என் வானில் ஓர் நிலா! அந்தக் கடற்கரை மணலில் தனிமையில் இருந்து கொண்டு கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் நிலவன். அழகான அந்தப் பொழுதில் அதுவும் கடற்கரையில்… ரசிப்பதற்கு எத்தனையோ அழகுகள் கொட்டிக் கிடந்தும்… அன்று எதையுமே ரசிக்கும் அளவிற்கு அவனின் மனம் அமைதியாக இருக்கவில்லை. சோகம் ததும்பி வழிய… மனம் கனத்துப் போய் இருந்தது. அன்று அவன் காதல் தேவதை நிலாவின் பிறந்த நாள். அவளின் நினைவுகளாய்… அவனுள்ளே வருஷங்களாய் அடங்கிக் கிடந்து அழிக்க முடியாமல் அழுத்தும் அந்தக் குமுறல்கள் கண்ணீராய் வெளிப்பட்டு கடல் நீருடன் கலந்து கரைந்தது. கண்களில் துளிர்த்த கண்ணீரை கை விரலினால் சுண்டி விட்டபடி எழுந்து நடந்தான் நிலவன். அன்றைய இரவு போலவே இன்றும் இரவு. அன்றைய நிலவு போலவே இன்றும் நிலவு… வானம் மாற வில்லை… நிலமும் மாறவில்லை… அலைகள் ஓய வில்லை… எதுவுமே மாறவில்லை… ஆனால் நானும் அவளும் கட்டிய காதல் கோட்டை மட்டும் எவர் இட்ட சாபத்தால் இடிந்து போனது….? கட்டிய காதல் கோட்டை சிதைந்து போனாலும்… அந்தப் பருவ வயதிலேயே… காதல் பயிரை மனதில் வளர் த்து… கண்ணிலும் நெஞ்சிலும் நிறைந்து…. இன்றும் என் நெஞ்சோடு நிறைந்து வாழும் உன்னையும், உன் நினைவுகளையும் எப்படி நான் மறப்பேன்…? ஓ!… அன்று… அன்று… அதை எப்படி மறப்பேன்?… நிலவன்!… என்னைக் காப்பாத்தடா!… என கதறிய வாறே… கண்ணீர் வழிந்தோட என் மார்பில் சாய்ந்தாயே?… அதை எப்படி மறப்பேன்?…. அந்தக் கடற்கரை மணலில் கால்கள் புதையப் புதைய நடந்தான் நிலவன். அவன் மனதில் புதைந்து போய்க் கிடந்த பசுமை நினைவுகள் அவனுள் பீறிட்டுக் கிளம் பின. இன்றைய தடம் மாறிப் போன வாழ்க்கையின் வரண்டு போன நிஜங்களுக்குமிடையில்… அவளுட னான இறந்த கால நினைவுகளை அசை போட்டபடி நடக்கின்றான் நிலவன். ம்… அப்போது நிலவன் உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். படிப்பில் மட்டுமல்ல இசைத் துறையில் பாடுவதில், இசைக்கருவிகள் மீட்டுவதில், நடிப்பில் எல்லாம் நல்ல கெட்டிக்காரன். அவனுள்ளே அத்தனை கெட்டித்தனங்களும் கொட்டிக் கிடக்க… அந்த வகுப்பில் அவன் ஓர் ஹீரோவாகவே இருந்தான். அப்போது அதே வகுப்பில் புதிதாய் வந்து சேர்ந்தாள் நிலா. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. நிலவனுடன் போட்டி போட்டு புள்ளிகள் எடுக்கும் அளவிற்கு படிப்பில் கெட்டிக்காரி யாக இருந்தாள் நிலா. போட்டிகள் இருந்ததே தவிர ஒரு சிறு பொறாமை கூட அவள் மனதில் ஒருபோதும், எள்ளளவும் இருந்ததே இல்லை. எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம். யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாது உதவி செய்யும் குணம். இடக்கையால் முத்து முத்தாய் எழுதும் அழகு. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் அழகு. தலை சாய்த்து சாந்தமாய்ப் பூக்கும் அந்தப் புன் முறுவல்… இப்படியான அவளின் செய்கைகள் ஒவ் வொன்றும் நிலவனைக் கொள்ளை கொண்டன. நாட்கள் நகர்ந்தன. நிலவனும், நிலாவும் நல்ல நண்பர் களாகினர். ஆனாலும் என்னவோ ஏதோ தெரிய வில்லை. நிலா வந்த நாளிலிருந்து அவனுக்குள் ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தியை கொடுத்து, அவள் பக்கம் ஓர் பிடிப்பை ஏற்படுத்திய வண்ணமே இருந்தாள். அவனும் புரியாத ஏதோவோர் உணர்வில் அகப்பட்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான். கனவுகள் இரவைத் தத்தெடுத்துக் கொண்டன. அது காதலா? இல்லை வேறெதுவுமா?… என்பதைக் கூட அவனால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை. எத்தனை பெண்களோடு பேசிப் பழகி மகிழ்ந்தாலும்… பார்த்துச் சிரித்தாலும்… நிலாவின் பார்வை தந்த சுகம் மட்டும் இதுவரை அவனுக்கு எவரிடமும் கிடைத்த தில்லை. நாட்கள் நகர நகர அவனுள்ளே பலத்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவள் பார்த்தாலே போதும் போதும் என அவனின் தேகம் பற்றி எரியத் தொடங் கியது. அவனின் அசைவுகளெங்கிலும் எப்போதும் அந்தத் தேவதையின் முகம் வந்து எட்டிப் பார்த்தது. படம் —- அன்பே உன் வசம் பாடல்—-அசர வைத்தாய் அன்பே…….. நாட்கள் செல்லச் செல்ல நிலா முழுமையாகவே அவ னுள் நிறைந்து கொண்டாள். அவன் மனதில் காதல் அரும்பியது. அவன் மன வானில் தினம் தினம் காதல் தேவதையாய் நிலா பவனி வந்தாள். முற்றாகவே அவன்…. அவள் நினைவில் மூழ்கிய போதும் தன் மனதில் எழுந்த காதலை சொல்ல முடியாது தவியாய் தவித்தான் நிலவன். சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஓர் தயக்கம் வந்து அவனைத் தடுத்தது. தன் காதலை அவள் ஏற்றுக் கொள்வாளா? தன் காதலை சொல்லப் போய் அப்படி எதுவும் இல்லை… எனச் சொல்லி தன்னை வெறுத்து விட்டால்?… என்ற பயம் அவனை ஆட்டிப் படைத்தது. காதல் அவஸ்தையை தன்னுள் சுமந்தபடி அதைச் சொல்லச் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவனுக்கும், அதற்குச் சாதகமாய் ஓர் நாள் அமைந்தது. அன்று நிலாவின் பிறந்த நாள். அந்த நல்ல நாளில் எப் படியாவது தன் காதலைச் சொல்லி விடத் துணிந்தான் நிலவன். இனியும் என்னுள் இந்தக் காதலை மறைத்து வைத்து அவஸ்தைப்பட முடியாது. இதை எப்படியாவது இன்று அவளிடம் சொல்லி விட வேண்டும் என முடி வெடுத்தவனாய்… நிலாவுக்கு ஓர் பரிசுப் பொருளையும் வாங்கிக் கொண் டான். காதல் கண்ணை மறைத்தது. கடிதம் எழுதத் தூண்டியது. அவன் துணிந்து விட்டான். எழுதினான்… தைரியத்துடன் தன் உள்ளத்தில் உள்ள காதலை கடிதத்தில் எழுதினான். எழுதிய கடிதத்தை அந்தப் பரிசுக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். அன்று வகுப்பில் சின்னதாய் ஓர் பார்ட்டி. எல்லோரும் அன்பாக அவளை வாழ்த்தினார்கள். அவனும் தன் வாழ்த்தை அன்போடு சொல்லிக் கொண்டான். பாட சாலை முடிந்து போகும் வேளை… நிலா! …. ஒரு நிமிடம். ஓ!……….. என்ன நிலவன்? உங்கட பிறந்த நாளுக்காய் ஓர் சின்னப் பரிசு வாங்கி னன்… இந்தாங்கோ. ஓ!………. ராங்ஸ் நிலவன். நிலா!… ஆனால் ஒன்று… இந்தப் பரிசை இங்க வைச்சுப் பிரிச்சுப் பாக்காமல் வீட்டுக்குக் கொண்டு போய் பிரிச்சுப் பாருங்கோவன். ஓ!… அப்படியா? ஏன் நிலவன்?… ஒன்று கேக்கலாமா?… உள்ள வெடி குண்டு, கிண்டு எதுவும் இல்லையே?… என தனக்கே உரித்தான அந்த கலகலப்பான பாணியில் சிரித்தபடி கேட்டாள் நிலா. சீச்சீ… அப்படி எல்லாம் நான் தருவனா? அதுவும் உங்க ளுக்கு நான் தருவனா என்ன?… அப்பாடா!… அப்படி எண்டா சரிதான். ஓகே நிலவன்!… நாளை சந்திப்போம்… எனக் கூறி விட்டு விடை பெற்றாள் நிலா. அவன் தைரியமாக ஒருவாறு கடிதத்தை கொடுத்த போதும் அன்று அவன் அவனாகவே இல்லை. வீடு சென்றவனின் மனது அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நின்றது. புத்தகத்தை விரித்தால் படிக்கவும் முடிய வில்லை. படுப்போம் என்று படுத்தாலும் அன்று இரவு அவனை நித்திராதேவி அணைத்துக் கொள்ளவும் இல்லை. அன்று அவனுக்கு தூக்கம் வரவே இல்லை. மனதில் ஏதோ இனம் புரியாத ஓர் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. கடிதத்தை அவள் வாசிப்பாளா? தன் காதலை அவள் ஏற்றுக் கொள்வாளா? என எண்ணி எண்ணியே கொட்டக் கொட்ட முழித்துக் கிடந்தான் நிலவன். பொழுதும் மெல்லப் புலர்ந்தது. அவன் அயர்ச்சியுடன் எழுந்தான். இரவு முழுவதும் தூக்கமே இல்லாததால் தலை விண் விண் என்று வலித்தது. காலை எழுந்து பாடசாலைக்கு வெளிக்கிட்டவனும் அம்மா கொடுத்த சாப்பாட்டை ஏதோ அரையும் குறையுமாய் விழுங்கி விட்டு பாடசாலைக்குச் சென்றான். அவன் கண்கள் சுற்றும் முற்றும் நிலாவையே தேடின. அவளை எங்குமே காணவில்லை. சற்று நேரத்தில்… அப்போதுதான் பூத்த புது மலாராக அங்கே வந்தாள் நிலா. அவளைக் கண்டதும் அவனுக்கு “குப்” என்று வேர்த்தது. ஆனால் அவளிலோ எந்த மாற் றமும் இருக்கவில்லை. வழமை போலவே அவனின் அருகில் வந்தவளும் எந்தச் சலனமும் இல்லாமல்… ஹாய்!… வணக்கம் நிலவன் … என்றாள். அவனும் பதிலுக்கு… வணக்கம் நிலா…. என்றான். அவன் மனதுள் ஒரே போராட்டம். என்ன இவள்? … எப்போதும் போலவே இருக்கிறாள்?… என் கடிதத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் போகின்றாளே?.. அப்படி யானால் என் கடிதத்தை அவள் பார்க்கவில்லையோ? சீச்சீ…. அப்படி இருக்காது. கட்டாயம் என் பரிசு என்ன வென்று உடைத்துப் பார்த்திருப்பாள். ஒருவேளை… கடிதத்தை அவள் காணவில்லையோ? சீ… அப்படியும் இருக்காது. தெரியும்படிதானே அந்தக் கடித்தத்தை மேலே வைத்தேனே? இப்படி கேள்விகள் அவனுள் எழ… கேள்வியும் கேட்டு பதிலையும் அவனே தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். மதியம் இடை வேளை நேரம். அப்போது அவனின் அருகில் வந்த நிலா… நிலவன்!…. என்றாள். அவளின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். நிலவன்!… உங்கள் லெற்றர் பாத்தன். ம்… என்ன சொல் வது? … இப்போது நாம் கவனமாகப் படிக்க வேண்டிய காலகட்டம். பரீட்சை வேற நெருங்குது. இந்த வேளை யில… உங்க மனசைக் குழப்பி காதல்…. கீதல் என்று குழம்பி படிப்பை கோட்டை விட்டு விடாதீங்கோ. எமக்கு அதுக்கெல்லாம் இன்னும் கன காலம் இருக்கு. இப்ப எங்களுக்கு படிப்புத்தான் ரொம்ப முக்கியம். இந்தப் பொல்லாத காதல் கனவுக்குள் விழுந்து உங்களையும் குழப்பி என்னையும் குழப்பாதீங்கோ. எனக்கு அப்படி ஓர் எண்ணமே மனதில் இல்லை நிலவன். எனக்கு என் படிப்புத்தான் இப்ப ரொம்ப முக்கியம். என் பெற்றோர் களின் எதிர்பார்ப்பும் அதுதான். வீணாக மனதைப் போட் டுக் குழப்பாமல் கவனமாகப் படியுங்கோ நிலவன். நாம் இருவரும் இப்போது இருப்பது போலவே… எப்போதும் நல்ல நண்பர்களாகவே இருப்போம்… ஓகே…? என மிகவும் அன்பாக… அமைதியாகக் கூறி விட்டுச் சென்றாள் நிலா. அவள் அப்படி நடந்து கொண்ட விதம் கூட அவனுக்கு இன்னமும் அவளின் மேல் பிடிப்பை ஏற்படுத்தியது. ம்… வேறு யாரும் என்றால் துள்ளிக் குதித்து, கடிதத் தை கிழிச்சு, மூஞ்சையில் எறிஞ்சு எத்தனை ஆர்ப் பாட்டம் எல்லாம் செய்து திமிராக நடந்திருப்பார்கள்?… பாரேன்… எவ்வளவு அமைதியாய்… பண்பாய்… எனக்குப் புத்தி கூறி விட்டு செல்கிறாள்… என தனக்குள் தானே அவளை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டவனும்… நிலா!… இன்றில்லாவிடிலும் என்றாவது ஓர் நாள் உன்னை நான் என் மன வானில் என் நிலாவாக்காமல் விடவே மாட்டேன். நீதான் என் காதலி… என தனக்குள் ஓர் திடசங்கர்ப்பத்தை எடுத்துக் கொண்டான். மாதங்கள் நகர்ந்து நகர்ந்து வருடத்தை விழுங்கிக் கொண்டன. பரீட்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுள் புதிதாய் ஓர் சோகம் வாட்டத் தொடங்கியது. பரீட்சை முடிய பாடசாலை முடிந்து விடும். அதன் பிறகு நிலாவை எங்கு?… எப்படிச் சந்திப்பது?.. இவள் இப்படியே போய் விட்டால் என் காதல் என்னாவது?.. என்ற யோசனை நாளும் அவனை வாட்டத் தொடங்கி யது. ஓர் நாள்…… நிலா!… உங்களோடு கொஞ்சம் மனம் விட்டுக் கதைக் கலாமா? ம்… தாராளமாகக் கதைக்கலாமே?… என்ன சொல்லுங்கோ நிலவன். பரீட்சை முடிய… பாடசாலை முடிந்துவிடும்… நீங்களும் போய் விடுவீங்கள். அதுக்குப் பிறகு உங்களை நான் எப்படி?… எங்கு சந்திப்பது? ஓ!… ஏன்? … எதற்கு?… என்னை நீங்க சந்திக்க வேணும்? நிலா!.. நீங்க நடிக்காதீங்கோ. நேராகவே கேக்கிறன். உங்கட மனச் சாட்சியை தொட்டு உண்மையைச் சொல்லுங்கோ பாப்பம்… என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா இல்லையா? ம்… ஓர் நல்ல நண்பானாய் உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இல்ல… நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நான் இதை நம்ப மாட்டன். எங்க நிலா… உங்க மனசில நான் இல்ல… உன்மேல எனக்கு காதலே இல்ல… என்று என் மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்கோ பாப்பம்… நிலா தயங்கியபடி மௌனமாய் நின்றாள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 14 2005, 10:41 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
வாழ்த்துக்கள் சத்தியா
-------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Dec 14 2005, 10:45 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாத்தீங்களா?… பாத்தீங்களா?… எதுக்கு சும்மா வெளி யில வேசம் போட்டு நடிக்கிறீங்கள்?… ஓம் உன்னையும் எனக்குப் பிடிச்சிருக்கடா… நானும் உன்னைக் காதலிக் கிறன்… என்று ஓரு வார்த்தை சொல்லுங்கோ. அது போதும் எனக்கு. அதுக்குப் பிறகு உங்கள் படிப்பு முடி யும் வரையும் நான் உங்கள தொந்தரவு பண்ணவே மாட்டன். இது தெரியாமல் என்னால் படிக்கவே முடியவில்லை நிலா… என்றான். அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டும்… எதுவுமே பேசாமல் அமைதியாய் அவனையே வைத்த கண் வாங்காமல் சில நிமிடம் பார்த்துக் கொண்டு நின்ற வளும் … வெட்கம் அவளை ஆட்கொள்ள… முகத்தை மறு பக்கம் திருப்பி … எனக்கும் உன்னை பிடிச்சிருக்கடா… என்று சொன்ன போது வெட்கத்தால் அவள் கன்னம் சிவந்து புன்னகை விரிந்தது. அவள் கூறியதைக் கேட்டதும் தன்னையே மறந்து… தாங்க முடியாத சந்தோசத்தில் அவளை இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டான் நிலவன். சீ… என்னடா இது?… அதுக்குள்ள இப்படியா?… நீ ரொம்ப மோசம்டா. இதுக்குத்தான் இதுநாள் வரை நான் எனக் குள்ளேயே மறைச்சு வச்சிருந்தன்… சீ… விடடா என்னை… என சிணுங்கியவளாய் அவனின் பிடியில் இருந்து விடுபடத் துடித்தாள் நிலா. ம்… இந்த விருப்பத்தை மறைச்சு வைச்சுக் கொண்டா என்னை வருடக் கணக்காய் தவிக்க வைத்தாய்?… பொறடி கள்ளி… இதுக்கெல்லாம் என்ன செய்யிறன் என்று பாரன். சரிதான் போடா… என்னதான் செய்யப் போறாய்?… நீ செய்யிறதை செய்யடா… எனச் சொல்லிவாறு அந்த இடத்தை விட்டு ஓடிச் சென்றாள் நிலா. அன்று முதல் இருவரும் காதல் பறவைகளாய் நாளும் வலம் வந்தனர். நாளும் சந்திப்புக்கள். சின்ன சின்ன பரிசுகள். செல்ல முத்தங்கள்… இப்படி இன்ப உலகத்தில் காதலர்கள் இருவரும் சஞ்சரித்தார்கள். இருப்பினும் இந்தக் காதல் கட்டுக்கடங்குமா என்ன?… அன்று… நிலா!… இன்று ஓரு இடத்துக்கு என்னோட நீ வரவேணும். ஆ!… என்னடா நீ? … எங்க வரச் சொல்லுறாய்? கடற்கரைக்குப் போய் வருவோம் வா. ம்கூம்… மாட்டன்… மாட்டன்… உன்னோட நான் அங்கெல்லாம் வரவே மாட்டன். ஏன்டி வரமாட்டாய்? யாரும் கண்டா என்னடா செய்யிறது? யாரும் காணாமல் நான் அல்லவா கூட்டிப் போவன். நீ பயப்படாம என்னோட வாடி. போடா… உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல… நீதான் சொன்னியே படிப்பு முடியும் வரை தொந்தரவு பண் ணவே மாட்டன் என்று.. இப்ப பாரேன்… ம்… சொன்னன்தான். நான் என்ன நெடுகவா கேட்கப் போறன்? ஒருக்காத் தானேடி வரச் சொல்லி கேக்கிறன். பிறகு இதுக்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரி யாது. ஆசையாய் இருக்கடி… ஒரே ஒரு தடவை ப்ளீஸ்… நிலா… என்று கெஞ்சலாய்க் கேட்டான். “என்னோடு பேசாதே”… நான் கோவமாய் இருக்கிறேன்.. எனக் கூறி திரும்பி உட்கார்ந்தாள் நிலா. “ஏய்… ஏய்… என்னோட கோவமா?… எதுக்கு கோவம்?… சரியான காரணமில்லாமல் என்மேல் கோபம் காட்டு வது என்னடி நியாயம்?… என்று கேட்டபடி அவளுக்கு எதிரில் தரையில் மண்டியிட்டான் நிலவன். ஓ!… சரியான காரணம் ஏன் இல்லை?.. நீ இப்படி கேப்பது சரியாடா? … நான் உனக்காக உருகி உருகி நிற்பது உனக்கு எங்கேடி தெரியப் போகுது? எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கும் தானேடி? அதை புரிஞ்சு கொள்ளாமல் என் மேல இப்படி கோவிக்கலாமாடி?… உன்னிடம் கேட் காமல் நான் வேறு யாரிடமுமா இதைப் போய் கேக்க முடியும்? … கொஞ்சம் இரக்கம் காட்டேண்டி. போடா… என்னைத் தொடாதே… நான் ரொம்பக் கோப மாய் இருக்கிறேன்… என்று முகத்தைத் திருப்பினாள் நிலா. உன் கோபத்தை எப்படிக் கரைக்க வேணும் என்று எனக்குத் தெரியும்டி… என்று சொல்லியவாறு தன் இரு கையாலும் அவள் முகத்தை பிடித்து அவள் கண் ணோடு தன் கண்ணை உற்று நோக்கி சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றவனும்.. அப்படியே அவளை இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டபடி…. நிலா!… இதுக்கு முதல் உன்னை நான் இப்படி ஏதும் கேட்டனா?… இல்லையே. ஒரே ஒரு தடவை உன்னை என் மோட்டபைக்கில் ஏத்திக் கொண்டு போக ஆசைப் படுறன். ஓம் என்று சொல்லடி… என்று கெஞ்சினான். அவனின் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் கரைந்த நிலாவும் சரி என சம்மதித்து… மாலை ரியூசனைக் கட் பண்ணி அவனுடன் புறப்பட்டாள். படம் ——– அன்பே உன் வசம் பாடல்——- என்றாவது எங்காவது……… கடற்கரையை அடைந்த காதல் பறவைகள் இருவரும் அந்தக் கடற்கரை மணலில் … அந்த அழகான மாலைப் பொழுதின் இதமான காற்றின் தழுவலில்… அந்த அழகை எல்லாம் ரசித்தபடியே இருந்தார்கள்… அவனின் நெஞ்சினில் அவளும் கொடியாகப் படர்ந்திருக்க… காதல் ஜோடிகள் தம்மையே மறந்திருந்த அந்த வேளை… எங்கிருந்தோ பாய்ந்து வந்த அந்த துப்பாக்கிக் சூடு அவள் நெஞ்சில் பாய்ந்தது. கண் மூடி முழிக்கு முன்னே அடுத்து வந்த துப்பாக்கிச் சூடு நிலவனின் கையைக் குறி பார்த்தது. மீண்டும் பாய்ந்து வந்த குண்டு நிலாவின் நெஞ்சில் பாய… நிலவன்!… ப்ளீஸ்… ஹெல்ப் மீடா…. என கத்தியவாறே அவனின் நெஞ்சில் சோர்ந்து விழுந்தாள் நிலா. மறுநாள் கண் விழித்துப் பார்த்த போது நிலவன் மருத்துவமனையில் கிடந்தான். அவனைச் சுற்றி அவனின் நண்பர்கள் சோகமாய் நின்று கொண்டிருந் தார்கள். கண் விழித்தவனும்….. டேய் என்னடா நடந்தது?… நான் எப்படி இங்க? … எங்கடா என் நிலா?… என பதறினான். நிலவன்!… ஒன்றுமில்லடா… நீ கொஞ்சம் அமைதியாய் படு. அப்புறம் எல்லாம் கதைக்கலாம் என நண்பர்கள் சொன்ன போதும் அவன் எதையும் கேட்காதவனாய்… நண்பன் ஒருவனின் சேட் கொலரை இழுத்துப் பிடித்துக் கொண்டு… எங்கடா நிலா?… சொல்லு?… எங்கடா என் நிலா?… எனக் கத்தினான். நண்பனிடம் இருந்து பதில் ஏதும் வராமல் கண்ணீர் மட்டுமே பதிலாய் வந்தது. அவனின் மூளை அவசரமாய் வேலை செய்யத் தொடங்கியது. கடற்கரையில் இருவரும் தமை மறந்து இருந்ததுவும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வந்ததும், நிலா கதறிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்ததுவும் படமாய் ஓடியது. கட்டிலில் இருந்து எழுந்தவனும் வேகமாய் வெளியில் ஓடினான். அவனை நண்பர்கள் தடுத்தும் அவன் நிற்க வில்லை. அவனின் பின்னால் ஓடி வந்த நண்பர்கள் அவனை மறித்து… வேண்டாம் நிலவன். நாங்கள் சொல்வதைக் கேள். இப்போ எங்கும் போகாதே. என இடை மறித்து… குளுக்களுகிடையிலான மோதல் ஒன்றில் ஆள் மாறி உன்னை சுட்டதாகவும், அந்தச் துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே நிலா இறந்து விட்டதாகவும் கூறினார்கள். “நிலா … ஐயோ… நான் என் செய்வேன்?… மாட்டேன் மாட்டேன் என்று மறுத்த உன்னை… கெஞ்சிக் கூத்தாடி கூட்டிச் சென்று சாகடித்த பாவி நான் ஆகி விட்டேனா?… நானே உன் உயிருக்கு உலை வைத்த பாவியாகி விட்டேனே?… ஐயோ!… இனி நான் என் செய்வேன்?… உன்னைப் பிரிந்து எப்படி நான் வாழ் வேன்?… என அந்த வானமே பிளக்கும் படி கதறினான் நிலவன். நண்பர்கள் அவனை ஆறுதல் படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் அவன் இல்லை. தன் தலையில் அடித்து அடித்து அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். அதைப் பார்த்து நண்பர் கள் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட… அவர்களும் செய்வ தறியாது தவித்துப் போய் நின்றார்கள். தன் மனம் ஆறும்வரை அழுதவனும் சிறிது அமைதி யானான். சிறிது நேர அமைதியின் பின்னர் அவனை யும் அழைத்துக் கொண்டு நிலாவின் வீட்டிற்குச் சென்றார்கள்… அங்கே… அழுகையின் ஓலம் காதைப் பிளந்தது. அந்த வீட்டின் ஒரே ஒரு செல்ல மகாராணி அவள். நான்கு அண்ணன் களுக்கு அவள் ஒரே ஒரு செல்லத் தங்கை. எல்லோரின் அழுகையிலும் அந்த வீடே சோகத்தில் முழ்கி இருந் தது. தன் காதல் தேவதையின் அழகு முகத்தை அந்தக் கோலத்தில் பார்த்தவனுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. அழுகையை அடக்க முடியாமல் அழுபவர்களோடு சேர்ந்து ஓ…வென அவனும் அழுது விட்டான். இதைப் பார்த்த நண்பர்கள் அவனைத் தேற்றியவாறு அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு அவனின் வீட்டுக்குச் சென்றார்கள். அவனைக் கண்டதும் அவனின் தாய், சகோதரிகள் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறத் தொடங் கினார்கள். நடந்தவற்றை எல்லாம் அவர்களுக்கு விபரமாகச் சொல்லி இனி அவனை எங்கும் வெளியே விட வேண்டாம் என வீட்டாருக்கும் கட்டளையிட்டு விட்டு, அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லி அவர்களை ஒருவாறு அமைதியாக்கி விட்டு நண்பர்கள் எல்லோரும் கிளப்பிச் சென்றார்கள். நாட்கள் சில நகர்ந்தன. பெற்றோரின் கட்டுப்பாட்டிலும், நண்பர்களின் கட்டுப்பாட்டிலும் நிலவன் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்தான். அவனை வெளியே விட்டால் நிலாவின் இழப்பின் கோபத்தில் அந்தக் குளுக்களோடு ஏதும் மோதல் எற்பட்டு இவனின் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று எல்லோரும் அஞ்சினார்கள். நிலாவின் இழப்பு அவனை வெகுவாக பாதித்தது. யாருடனும் மனம் விட்டுப் பேசாமல் மௌனமாக இருந்தான் நிலவன். எப்பொழுதும் அவனின் சோகம் படிந்த கண்களில் ஒருவித ஏக்கம் கலந்திருக்கும். தன் துணையை இழந்து விட்ட பறவையைப் போன்று சோர்ந்தே இருந்தான் நிலவன்.அவனின் அந்த நிலமை யைப் பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிந்தது. அவனின் கோலத்தைப் பார்த்துத் தாங்க முடியாத அவனின் தாய் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விடத் திட்டமிட்ட வளாய்… துயரம் கவிந்த முகமாக அவனின் அறைக்குள் நுழைந் தாள். அவளின் உள் மனதை அவளின் முகம் படம் போட்டுக் காட்டியது. நிறையப் பயந்து போய்க் காணப் பட்டாள். தாயைக் கண்டும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். என்ன நிலவன்?… அம்மா வந்து எவ்வளவு நேரமாச்சு?வந்ததிலிருந்து எதுவுமே பேசாமல் ஆழ்ந்த சிந்தனை யில் இருக்கிறாய்?… என மௌனத்தைக் கலைத்தாள் தாய். நிலவன் அப்போதும் அமைதியாகவே இருந்தான். நிலவனின் அருகில் போய் இருந்தவளும் தன் மடியில் அவனைப் படுக்க வைத்து அவனின் தலையைத் தடவியவாறு… வெளிநாட்டுத் திட்டம் பற்றி நிலவ னுக்குக் கூறிய போது… அவன் மறுத்தான். தான் எங்குமே செல்ல மாட்டேன் என மறுப்புச் சொன்னான். அதை கேட்டு தாய் துடியாய்த் துடித்தாள். ஒரு மௌனம் வெடித்து அழுகை விசும்பலாய் வெளிப்படுகிறது. அவளின் மூடிய இமைகளின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் வழிந்து முகத்தில் கோடு கிழித்தது. தாயின் கண்களிலிருந்து வடிந்த நீர் அவனின் அவன் கன்னத் தில் விழுந்தது. தன் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளிகளைக் கையால் தேய்த்துத் துடைத்த படி நிமிர்ந்து பார்த்தான் நிலவன்.தன் தாயின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவன் துடித்தே போனான். அம்மா!….என்ன அம்மா?… எதுக்கு நீங்கள் அழுகிறீங்கள்?… அழுத விழிகளுடன் எதுவும் பேசாமல் நீண்ட பெரு மூச்சை மட்டும் உதிர்த்து விட்டு… தாய் எதுவுமே பேசாது கண்களை மூடி… இரு கை கூப்பி நிற்கிறாள். அந்தக் கோலத்தைக் கண்டு அவனின் நெஞ்சு கலங் கியது. தன் தாயின் இரு கரங்களையும் இறுகப் பற்றியவாறு அன்போடு…. சரி அம்மா.. நீங்கள் சொல்வது போல… நான் வெளி நாட்டுக்குப் போறன்… அழாதீங்கோ. நீங்கள் பயணத் திற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கோ… என்று கூறியவாறு தாயின் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டான். நிலவன்!… உன் வேதனை எனக்குப் புரிகிறது மகனே!.. ஆனாலும் இப்படியே இங்கிருந்து என்னதான் செய்யப் போறாய்?….என்றாள் பரிதாபம் இழையும் குரலில். அவனை அங்கு வைத்திருக்கப் பயந்த பெற்றோர்கள் அவனை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவதற்காய்.. அவசர அவசரமாய் தாம் இருந்த வீட்டையும், தம்மிடம் இருந்த நகைகளையும் அடமானம் வைத்து அவனின் பயண ஏற்பாடுகளைத் துரிதமாய் செய்து முடித்தனர். அம்மா, அப்பா, இரண்டு சகோதரிகளும் எயாப்போர்ட் வரை வந்து அவனைப் பயணம் அனுப்பி வைத்தார்கள். அழுத விழிகளுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று வெளி நாட்டுக்கு வந்து சேர்ந்தான் நிலவன். வெளிநாடு வந்து இறங்கியதும் … திக்குத் திசை தெரியாமல்… பாசை புரியாமல் அகதி முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு… தவித்து அகதி யாய் அந்நிய தேச வாழ்வு. இப்படியே ஆறு நீண்ட வருசங்கள் ஓடி முடிந்து விட்டன. இப்போது இழந்த அனைத்தும் கிடைத்தன. பணம் பொருள், நகை, வீடு, எல்லாமே மீண்டும் கிடைத்தன. ஆனால் அவள் மட்டும் இல்லை. அவள் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருந்தது. இன்று என் தேவதை நிலாவின் பிறந்த நாள். ம்… இதே போல் அவளின் ஓர் பிறந்த நாளின் போதுதான் முதன் முதலாய்… அவளிடம் என் உள்ளத்தைத் திறந்து காதலைச் சொன்னேன். இன்று அதனை எல்லாம் எண்ணிப் பார்த்தாலும் நெஞ்சம் சுடுகிறது. முதன் முதலாய் என் மனதில் பூத்த காதல் கவிதை அல்லவா அவள் ? முழுமையாய் மனதில் நிறைந்த அவளைக் காலங்கள் பல காத்திருந்து அல்லவா பெற்றேன்… எப்படி என்னால் அவளை மறக்க முடியும்? அவளுக்கு என் இதயத்தில் நான் கோயில் அல்லவா கட்டி வைத்திருக்கிறேன். எப்படி அவளை நான் மறப்பேன்? என்று அவன் மனம் அழுது புலம்பியது. வாழ்க்கையில் இழக்கக் கூடாத எதை நாம் இழந்து விடுகிறோமோ அதை சாகும் வரை மறந்து விட முடிவதில்லை. இது உண்மை. நான் இழந்தது உன்னை. எனக்குள் இருந்த உன்னை. என்னையே மறக்க வைத்து…. இரவெல்லாம் கனவாக… கனவெல்லாம் இரவாக… புதியதோர் உலகுக்குள் என்னைக் கொண்டு செல்ல வைத்த உன்னை எப்படி மறக்க முடியும்? அவள் நினைவுகளில் தத்தளித்தபடி… தன் சேட் பொக் கற்றுக்குள் இருந்த பேர்சை எடுத்து அதற்குள் இருந்த நிலாவின் படத்தை எடுத்துப் பார்த்தவனும்… அதை நெஞ்சோடு அணைத்தபடி அருக்கில் இருந்த மரத்தோடு சாய்ந்து கொண்டான் நிலவன். படம் ----- வைதேகி காத்திருந்தாள் பாடல் ---- காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி......... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 14 2005, 11:33 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
அருமையான கதை நிலவன் தான் பாவம்
-------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Dec 15 2005, 06:20 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (siva @ Dec 14 2005, 11:33 PM) அருமையான கதை நிலவன் தான் பாவம் ம்... ம்... பாவம்தான். என்ன செய்வது? விதி அவனோடு விளையாடி விட்டதே. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 01:39 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
நன்றி சத்தியா
இனி என்ன செய்வது ? இன்னொரு காதலியை தேடி கொடுத்து விடுங்களேன் சத்தியா This post has been edited by Suganthe: Dec 16 2005, 01:43 AM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Dec 16 2005, 04:03 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சத்தியா. நிலவனை நினைக்க பாவமாக இருக்கு.... சிலவேளை அவர் திருமணம் செய்திருந்தால் இந்தக் கதை வந்திருக்காது. என்ன சத்தியா.?
ஒருவேளை அவர் திருமணம் செய்திருந்தால் நான் சந்தோசப்படுவேன். கேட்டுவிட்டு அதையும் அறியத்தாருங்களேன். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 16 2005, 12:36 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
நல்ல இசையும் கதையும். வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Dec 16 2005, 02:10 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (siva @ Dec 14 2005, 10:41 PM) வாழ்த்துக்கள் சத்தியா நன்றி சிவா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 02:15 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Suganthe @ Dec 16 2005, 01:39 AM) நன்றி சத்தியா இனி என்ன செய்வது ? இன்னொரு காதலியை தேடி கொடுத்து விடுங்களேன் சத்தியா காதலியை நான் தேடிக் கொடுப்பதா?ம்..... காதல்!.. அது தானாக வர வேண்டும் நாம் ஒருவரைக் காட்டி அவளைக் காதலி என்று சொன்னால் அங்கே நிஜக் காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நன்றி சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 02:28 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Dec 16 2005, 04:03 AM) வாழ்த்துக்கள் சத்தியா.  நிலவனை நினைக்க பாவமாக இருக்கு....  சிலவேளை அவர் திருமணம் செய்திருந்தால் இந்தக் கதை வந்திருக்காது. என்ன சத்தியா.? ஒருவேளை அவர் திருமணம் செய்திருந்தால் நான் சந்தோசப்படுவேன்.  கேட்டுவிட்டு அதையும் அறியத்தாருங்களேன். நன்றி தனிமதி. இல்லையே அவர் இன்னமும் திருமணம் செய்யவில்லையே. பெற்றோர் எத்தனையோ தடவை கேட்டும் அவர் மறுத்து விட்டார். அவளின் நினைவில் இருந்து அவரால் இன்னமும் மீளமுடியவில்லை. அவரை அந்தச் சம்பவம் நன்றாகப் பாதித்து விட்டது என்பதுதான் உண்மை. தன் நெஞ்சிலேயே தன் காதலியின் மரணம் என்பது தாங்கிக் கொள்ள முடியாததொன்று... இல்லையா? அவள் நினைவுகளுடனேயே தான் வாழ்ந்து விடுவதாக சொல்கின்றார். ஆனாலும் பிந்திக் கிடைத்த தகவலின் படி... எங்கோ ஓர் மின்னல் தாக்கி இருப்பதாகக் கேள்வி. நல்ல சேதி வந்தால் சொல்கின்றேனே.... This post has been edited by சத்தியா: Dec 16 2005, 02:32 PM -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 02:31 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 415 Joined: 30-August 05 Member No.: 326 |
உங்கள் உருக்கமான உண்மைக் கதை நெஞ்சை தொட்டுவிட்டது.
வாழ்த்துக்கள் சத்தியா -------------------- குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
|
|
|
|
Dec 16 2005, 02:33 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (கலை @ Dec 16 2005, 12:36 PM) நல்ல இசையும் கதையும். வாழ்த்துக்கள் சத்தியா. நன்றி கலை. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 02:35 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Rasikai @ Dec 16 2005, 02:31 PM) உங்கள் உருக்கமான உண்மைக் கதை நெஞ்சை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள் சத்தியா ஆ!........ நீங்கள் இருக்கிறீங்களா? நன்றி ரசிகை. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 03:37 PM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
QUOTE (சத்த @ Dec 16 2005, 04:28 PM) ஆனாலும் பிந்திக் கிடைத்த தகவலின் படி... எங்கோ ஓர் மின்னல் தாக்கி இருப்பதாகக் கேள்வி. நல்ல சேதி வந்தால் சொல்கின்றேனே.... தாக்கியிருந்தால் அவரது வாழ்வுக்கு நல்லது. வாழ்த்துக்கள். -------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Dec 16 2005, 03:59 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (கலை @ Dec 16 2005, 03:37 PM) QUOTE (சத்த @ Dec 16 2005, 04:28 PM) ஆனாலும் பிந்திக் கிடைத்த தகவலின் படி... எங்கோ ஓர் மின்னல் தாக்கி இருப்பதாகக் கேள்வி. நல்ல சேதி வந்தால் சொல்கின்றேனே.... தாக்கியிருந்தால் அவரது வாழ்வுக்கு நல்லது. வாழ்த்துக்கள். ம்......... ம்......... உண்மைதான் கலை. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 16 2005, 09:57 PM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
மிகவும் அருமையாக இசையும் கதையும் எழுதி இருக்கிறீர்கள் நல்ல கதை
ஒலி வடிவில் கேட்பதட்கு அருமையாக இருக்கும். கேட்டுபாப்போம். வாழ்த்துக்கள் சத்தியா. -------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Dec 16 2005, 10:42 PM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (சிந் @ Dec 16 2005, 09:57 PM) மிகவும் அருமையாக இசையும் கதையும் எழுதி இருக்கிறீர்கள் நல்ல கதை ஒலி வடிவில் கேட்பதட்கு அருமையாக இருக்கும். கேட்டுபாப்போம். வாழ்த்துக்கள் சத்தியா. ஓ!....... அப்படியா?.... நன்றி சிந்து. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 17 2005, 04:49 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 415 Joined: 30-August 05 Member No.: 326 |
QUOTE (சத்த @ Dec 16 2005, 02:35 PM) ஆ!........ நீங்கள் இருக்கிறீங்களா? நன்றி ரசிகை. ஆகா முடிவே கட்டி விட்டீர்களா நான் இல்லை என்று. எனக்கு பரீட்சை நடந்ததால் கொஞ்ச காலம் களத்துக்கு வர முடியவில்லை. அதுக்காக இப்படியா? -------------------- குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
|
|
|
|
Dec 17 2005, 05:09 PM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Rasikai @ Dec 17 2005, 04:49 PM) ஆகா முடிவே கட்டி விட்டீர்களா நான் இல்லை என்று. எனக்கு பரீட்சை நடந்ததால் கொஞ்ச காலம் களத்துக்கு வர முடியவில்லை. அதுக்காக இப்படியா? ஓ!.... அப்படியா? சரி சரி..... இது எல்லாம் ஒரு தமாசுக்குத்தானே? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:38 PM |