IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
மாலைப்பொழுதே..
sivanes
post Aug 18 2007, 08:00 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



மனதை மயக்கிடும்
மாலைப் பொழுதே..
மவுசு கொஞ்சம்
அதிகம் உனக்கு.

மாலை என்றதும்
மனதை மயக்குகிறாய்.
மணிக் கணக்காய்
மனங்களை கவர்கிறாய்.

கற்பனைக் குதிரைக்கும்
கடிவாளம் இடுகிறாய்.
காத்து இருப்பதும்
தொடர்கதை என்கிறாய்.

காதலர் மனங்களை
களிப்புற வைக்கிறாய்.
கசக்காமல் இருந்திட
நாளையும் வருகிறாய்.

நம்பிக்கை உடன்தான்
நாடுது உன்னை.
நாயகி நீயென்று
நம்புது மனங்கள்.

காலைச் சூரியனும்
காதலிக்கிறான் உன்னை.
மாலை என்றதும்
அவன் முகமும்
வெட்கத்தால் சிவக்குது.

அந்தி நேரத்தில்
அந்தரங்கம் தொங்கிடும்.
வந்திறங்கி மனதுள்..
தொந்தரவும் செய்திடும்.

மனித அவலங்கள்
சங்கிலித் தொடர்தான்.
சங்கடங்கள் வருவதும்
போவதும் நிகழ்வுதான்.

மாய வலைக்குள்
மனிதர்கள் நடமாட்டம்
மனம்விட்டுச் சிரிப்பாய்
மாலையே நீயும்.

ஆனாலும் நீயோ..
வரவேண்டும் தினமும்
காத்திருக்கும் மனங்களை
களிப்புற வைப்பதற்கு.

...சிவனேஸ்...


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Aug 18 2007, 08:26 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




மாலைப் பொழுதில் மதி மயங்கி
மகிழ்வாய் நீயும் கவி தந்தாய்!

மாலைப் பொழுது மட்டுமல்ல
மனதை மயக்குது உன் கவியும்!

ம்ம்..வாழ்த்துக்கள் சிவனேஸ்... அழகான கவிதை!
smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Aug 19 2007, 01:11 AM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



வாழ்த்துக்கள் சிவனேஸ்


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Aug 19 2007, 03:21 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



மாலை வேளையின்
ரம்மியத்தை இரசித்து
கவிதை தந்தாய் நீ

மாலையின் மயக்கம்
எல்லொருக்குமே ஏக்கம்....


வாழ்த்துக்கள் சிவனேஷ்.


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
விஜிதன்
post Aug 19 2007, 07:38 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 631
Joined: 30-April 07
Member No.: 1,015



QUOTE (sivanes @ Aug 18 2007, 08:00 PM)
மாய வலைக்குள்
மனிதர்கள் நடமாட்டம்
மனம்விட்டுச் சிரிப்பாய்
மாலையே நீயும்.


...சிவனேஸ்...

நன்றிகள் சிவனேஸ்

உண்மையின் கீறல்கள் smile.gif

மேல்வரி பிடித்து விட்டது


--------------------
உன் முற்பிறப்பின் ஊழ்வினை இப்பிறப்பு
உன் மறு பிறப்பழித்து பரம்பொருள் காண்


அன்புடன் விஜிதன்
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Aug 20 2007, 11:39 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் சிவனேஸ்... thumbs_up.gif

QUOTE
காதலர் மனங்களை
களிப்புற வைக்கிறாய்.
கசக்காமல் இருந்திட
நாளையும் வருகிறாய்.

நம்பிக்கை உடன்தான்
நாடுது உன்னை.
நாயகி நீயென்று
நம்புது மனங்கள்.

காலைச் சூரியனும்
காதலிக்கிறான் உன்னை.
மாலை என்றதும்
அவன் முகமும்
வெட்கத்தால் சிவக்குது.

அந்தி நேரத்தில்
அந்தரங்கம் தொங்கிடும்.
வந்திறங்கி மனதுள்..
தொந்தரவும் செய்திடும்.


மகத்தான மாலைப் பொழுதொன்றில்..
மல்லிகை மலர்கள் மணம் பரப்புவது போல்..
கவி மலர்களால் மாலைக்கு நீ கவி மாலையிட்டாய். smile.gif

QUOTE
காலைச் சூரியனும்
காதலிக்கிறான் உன்னை.
மாலை என்றதும்
அவன் முகமும்
வெட்கத்தால் சிவக்குது.


கற்பனை வடிவம் சிறப்பாகயிருக்கிறது...பாராட்டுக்கள் சிவனேஸ் smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM