IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
மௌனம் ஏன்…?
sivanes
post Sep 25 2007, 11:34 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



மௌனமாய் அழும் மல்லிகையே
உன்மனதை பறித்தது யார்…?
வாசம் அறியாத வண்டு..
மனவானை சுற்றி பறந்ததனாலா…?

முகம் அறியாமல் உன்னோடு
பழகிய சில நாட்களில்..
புரிந்ததனால் உன் சோகம்
தவிக்கிறது மனமோ தினமும்.

கோடையில் மழை தூறுமென்கிறாய்
மாரியில் வெயிலென்று வேதனைப்படுகிறாய்.
வெளியில் சொல்ல வெட்கப்படுகிறாய்..
வேதனைகளை உனக்குள்ளே சுமக்கின்றாய்.

ஏக்கங்கள் தந்த தாக்கங்களினால்
சேர்ந்தது உனக்குள் சோகங்களா…?
சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்…?
வர்ணிக்க முடியாமல் வாடுவது ஏன்…?

வாய் விட்டு அழத்தோன்றியும்
உனக்குள்ளே சமாதானம் செய்து..
அமைதிப்படுத்தியும் முடியாமல் நீ..
முகவரியை தினம் தேடுகிறாய்.

முடிந்துபோன கதைகளை எண்ணி
மனம் நொந்து தேய்கிறாய்.
இன்று நீ தேய்பிறையானால்…
நாளை நீ வளர்பிறையல்லவா.

வாடாத மலர் நீ
வசந்தம் உன்னை தாலாட்டும்
மகிழ்ந்து மனம் மகிழும்
மலரே கலைத்துவிடு மௌனத்தை.


This post has been edited by sivanes: Sep 25 2007, 11:22 PM


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
பு...
post Sep 25 2007, 04:01 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 1,010
Joined: 6-May 06
Member No.: 507



QUOTE
முடிந்துபோன கதைகளை எண்ணி
மனம் நொந்து தேய்கிறாய்.
இன்று நீ தேய்பிறையானால்…
நாளை நீ வளர்பிறையல்லவா.

வாடாத மலர் நீ
வசந்தம் உன்னை தாலாட்டும்
மகிழ்ந்து மனம் மகிழும்
மௌனமே கலைத்துவிடு மௌனத்தை.


வாழ்த்துக்கள் சிவனேஸ் biggrin.gif biggrin.gif thumbs_up.gif

வசந்த காலத்தில் சுகந்தம் வீச
மனதை திறந்து மகிழ்ச்சி நிறைந்து
மௌனம் கலைத்து உறவைத் தேட
சிறந்த கவிதை வரைந்தாயோ....
உறவைத் தேடி விரைந்தாயோ.


--------------------
என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன்
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Sep 25 2007, 04:56 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் சிவனேஸ்... thumbs_up.gif
QUOTE
வாடாத மலர் நீ
வசந்தம் உன்னை தாலாட்டும்
மகிழ்ந்து மனம் மகிழும்
மௌனமே கலைத்துவிடு மௌனத்தை.
பல கண்ணாடி முன் நின்று
சொன்னாலும் சொல்லாத மனமாறாத வடுக்கள்
உன் எண்ணமதில் சிறகடித்து சிந்தையை தட்டியதுவோ
முகம் தெரியாத உயிரின் உணர்வு, உன் அகம் கண்டுதவிக்கின்றதோ
எது எப்படியிருப்பினும், உன் விருப்படி மெளனம் கலைந்து மணம் பரப்பட்டும்.


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 25 2007, 10:28 PM
Post #4


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (sivanes @ Sep 25 2007, 11:34 AM)

முகம்   அறியாமல்    உன்னோடு
பழகிய    சில    நாட்களில்..
புரிந்ததனால்   உன்   சோகம்
தவிக்கிறது    மனமோ    தினமும்.



முகம் அறியாத பூவையின்
அகத்தின் வேதனை புரிந்து
நீ தவித்து...
கவி வடித்தது கண்டு
என் கண்களும் குளமாகின்றன.

ம்ம்... கவிதை நன்றாக இருக்கின்றது... நல்ல மனம் வாழ்க! thumbs_up.gif

வாழ்த்துக்கள் சிவனேஸ்.
smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Sep 26 2007, 02:47 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



QUOTE
முகம் அறியாமல் உன்னோடு
பழகிய சில நாட்களில்..
புரிந்ததனால் உன் சோகம்
தவிக்கிறது மனமோ தினமும்.


வாழ்த்துக்கள் சிவனேஸ்
கவிதை நன்றாக இருக்கின்றது


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Sep 26 2007, 03:09 AM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



QUOTE (sivanes @ Sep 25 2007, 11:34 AM)
முகம்  அறியாமல்    உன்னோடு
பழகிய    சில    நாட்களில்..
புரிந்ததனால்  உன்  சோகம்
தவிக்கிறது    மனமோ    தினமும்.


முடிந்துபோன    கதைகளை    எண்ணி
மனம்  நொந்து    தேய்கிறாய்.
இன்று    நீ  தேய்பிறையானால்…
நாளை  நீ    வளர்பிறையல்லவா.

.

எதிர் பார்ப்புடன் காத்திருக்கும் அழகிய சோக கவிதைக்கு என் வாழ்த்துக்கள் sad.gif


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Sep 26 2007, 02:53 PM
Post #7


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சிவனேஸ், நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Sep 28 2007, 10:28 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



QUOTE (sivanes @ Sep 25 2007, 11:34 AM)
கோடையில்    மழை  தூறுமென்கிறாய்
மாரியில்    வெயிலென்று  வேதனைப்படுகிறாய்.
வெளியில்  சொல்ல  வெட்கப்படுகிறாய்..
வேதனைகளை    உனக்குள்ளே    சுமக்கின்றாய்.

ஏக்கங்கள்  தந்த  தாக்கங்களினால்
சேர்ந்தது  உனக்குள்  சோகங்களா…?
சொல்ல  முடியாமல்  தவிப்பது  ஏன்…?
வர்ணிக்க  முடியாமல்    வாடுவது  ஏன்…?


ஆதித்ததாஸன்
28-9-2007

கனவுகளை வளர்க்கிறோம்!
நினைவுகளில் தவிக்கிறோம்!
கனவுகளாயான பின்பு
மனவுலகில் தகிக்கிறோம்!

காதல் இரணங்களுக்கு
காதல்தான் கட்டுப்போடும்!மனக்
காலக்கணக்கினிற்கு கவிக்
கோலந்தான் மெட்டுப்போடும்!

வாழ்த்துக்கள் சிவனேஸ்வரா! thumbs_up.gif thumbs_up.gif
இனிமைக்கவிதைகள் தொடரட்டும்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


This post has been edited by aathithathashan: Sep 30 2007, 11:59 AM


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:39 PM