நிலா முற்றம்: எழுதாத பக்கங்கள்! - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

எழுதாத பக்கங்கள்!

#1 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 08 November 2007 - 10:26 PM



எழுதாத பக்கங்கள்!


பருவம் தெரிந்த
நாள் முதலாய்
நாட்கள் தவறாது
நாட் குறிப்புக்கள்
எழுதிக் கொள்வது
என் பழகங்களில் ஒன்று!

அது என்ன மாயமோ
மந்திரமோ தெரியவில்லை!

உன்னோடு பேசத் தொடங்கிய
நாள் முதலாய்
பக்கங்கள் எல்லாம்
உன்னைப் பற்றிய
புராணங்களாகவே நிறைந்து போனதும்...

என் பக்கத்திலிருப்போரிடமும்
உன்னைப் பற்றிய பல்லவியாய்
கதைகள் நீண்டு போனதும்
எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்!

உன்னோடு
உயிர் கலந்த பொழுதுகள்...
சின்னச் சின்னச் சண்டைகள்...
செல்ல ஊடல்கள்...
மௌனப் போராட்டங்கள்...
கண்ணீரால் கரைந்த இரவுகள்...
இப்படி எல்லாமே
உன்னைப் பற்றியே நீளும்!

ம்!...
புத்தகத்திற்கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல...

நானும் உன் நினைவுகளை
பக்கம் பக்கமாக
பதுக்கியே வைத்திருந்தேன்!

இந்தப் பூமியெங்கும்
கங்குல் கவிழ்ந்திருக்கும் போதும்
ஊசலாடும் உன் நினைவுகளால்
என் உயிரை உடைத்து உடைத்து
உனக்கு ஓலை அனுப்பத் துடிப்பேன்!

சரி
அதை எல்லாம் விடு
இவை எல்லாம்
உனக்கெங்கே புரியப் போகிறது?

ம்...
உனக்கும் எனக்கும் இடையே
இடைவெளிகள் கூடியபோதுதான்
நாட்குறிப்பு எழுதுவதையே
நிறுத்திக் கொண்டேன் நான்!

ஆனாலும்
இப்போது நாட்குறிப்பின் பக்கங்கள்
திறக்கும் போதெல்லாம்
பவனி வரும் உன் நினைவுகளை
பேனா மை கொண்டு எழுதாமல்
கண்ணீர்த் துளிகளை மட்டும்
காணிக்கையாக்கிச் செல்கின்றேன்!

அங்கே சிதறி விழுந்த
கண்ணீர் துளிகள்தான்
கறைபடிந்து கிடக்கின்றன!

ம்!...
அந்த நிலவில் கூட
களங்கம் சொல்கிறார்கள்!

என்னால் உன் நிழலுக்குக் கூட
களங்கம் வராமல்
இன்றும் பத்தியமாய் நான்!

உன்மேலான இந்த நேசிப்பு
காதலென்று சொல்லுவதற்கில்லை
அதற்கும் பலபடி மேலாய்
பரிசுத்தமாய்...
தொடரும் இந்த நேசிப்பு
என் நெஞ்சிருக்கும் வரை நீடிக்கும்!

0

#2 User is offline   Suganthe 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 5,207
  • Joined: 05-September 05
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 08 November 2007 - 11:48 PM

QUOTE
உன்மேலான இந்த நேசிப்பு
காதலென்று சொல்லுவதற்கில்லை
அதற்கும் பலபடி மேலாய்
பரிசுத்தமாய்...
தொடரும் இந்த நேசிப்பு
என் நெஞ்சிருக்கும் வரை நீடிக்கும்!


உங்கள் நேசிப்பு என்றென்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள்
உன்னையே நீ உணர்
0

#3 User is offline   anchu 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 3,875
  • Joined: 13-September 05

Posted 09 November 2007 - 12:57 AM

QUOTE
உன்னோடு
உயிர் கலந்த பொழுதுகள்...
சின்னச் சின்னச் சண்டைகள்...
செல்ல ஊடல்கள்...
மௌனப் போராட்டங்கள்...
கண்ணீரால் கரைந்த இரவுகள்...
இப்படி எல்லாமே
உன்னைப் பற்றியே நீளும்!


உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் சத்தியா sad.gif sad.gif
http://tbn0.google.c...HikeSecrets.jpg
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
0

#4 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 09 November 2007 - 05:23 AM

வாழ்த்துக்கள் சத்தியா... thumbs_up.gif

QUOTE
ஆனாலும்
இப்போது நாட்குறிப்பின் பக்கங்கள்
திறக்கும் போதெல்லாம்
பவனி வரும் உன் நினைவுகளை
பேனா மை கொண்டு எழுதாமல்
கண்ணீர்த் துளிகளை மட்டும்
காணிக்கையாக்கிச் செல்கின்றேன்!


வேதனைகளைச் சுமந்த கவிதை..
வரிகள் நன்று.



கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#5 User is offline   சின்னா 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 2,933
  • Joined: 01-February 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 09 November 2007 - 02:00 PM

யார் சொன்னது உன்னை
நான் மறந்துவிட்டேன் என்று... mad.gif

நீதான் என்னை மறந்து
டைரியை திறந்து என்னை நினைக்கிறாய்... sad.gif

நான் உன்னை நினைத்து நம் நினைவுகளை
இன்றும் என் டைரியில் எழுதிவருகிறேன்... tongue_smile.gif

ஒருநாள் இல்லையென்றாலும் ஒருநாள் புரிந்துகொள்வாய் என்று
இன்றும் உன்நினைவில் நான்... emot-dance.gif emot-dance.gif biggrin.gif



இயல்பான வரிகள் கொண்டு இனிமையான சோகக்கவிதைக்கு

வாழ்த்துக்கள் சத்தியா...
41.gif 41.gif 41.gif

This post has been edited by சின்னா: 09 November 2007 - 02:06 PM

உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
0

#6 User is offline   sooryakumar 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 1,035
  • Joined: 16-November 06

Posted 09 November 2007 - 02:18 PM

வர வர ..தங்கள் கவிப்புனைவு செழுமையடைகிறது.

நல்ல சொல் கொண்டு வாழ்வை நினைக்கும் தூய்மை புரிகிறது.

வாழ்க நீ.
......................
பத்தியமாய்...என்று ஒரு சொல் வருகிறது...
அது பெளவியமாய்(பக்குவமாய்), அல்லது பத்திரமாய் என்று வரவேண்ட்டும்.

தமிழில் மெள, பெள,ஒள.................இந்த எழுத்துகள் போதுமளவிருந்தும் இவற்றை நாம் பாவிப்பதில்லை. இதனால்..தமிழுக்குத்தான் நட்டம்.

உணர்வு ஆழமாக இருந்தது. எனினும் இன்னும் குறுக்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
thumbs_up.gif smile.gif
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
0

#7 User is offline   சின்னா 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 2,933
  • Joined: 01-February 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 09 November 2007 - 02:31 PM

QUOTE (sooryakumar @ Nov 9 2007, 02:18 PM)
வர வர ..தங்கள் கவிப்புனைவு செழுமையடைகிறது.

நல்ல சொல் கொண்டு வாழ்வை நினைக்கும் தூய்மை புரிகிறது.

வாழ்க நீ.
......................
பத்தியமாய்...என்று ஒரு சொல் வருகிறது...
அது பெளவியமாய்(பக்குவமாய்), அல்லது பத்திரமாய் என்று வரவேண்ட்டும்.

தமிழில் மெள, பெள,ஒள.................இந்த எழுத்துகள் போதுமளவிருந்தும் இவற்றை நாம் பாவிப்பதில்லை. இதனால்..தமிழுக்குத்தான் நட்டம்.

உணர்வு ஆழமாக இருந்தது. எனினும் இன்னும் குறுக்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
thumbs_up.gif  smile.gif

சூர்யகுமார் பத்தியம் என்பது சரி என்று நான் நினைக்கிறேன் தமிழகத்தில் அப்படியான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் சத்தியா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்... நன்றி

This post has been edited by சின்னா: 09 November 2007 - 02:34 PM

உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
0

#8 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 09 November 2007 - 02:44 PM


0

#9 User is offline   சின்னா 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 2,933
  • Joined: 01-February 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 09 November 2007 - 02:59 PM


உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
0

#10 User is offline   sooryakumar 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 1,035
  • Joined: 16-November 06

  Posted 09 November 2007 - 03:03 PM


காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
0

#11 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 09 November 2007 - 03:12 PM

QUOTE (sooryakumar @ Nov 9 2007, 03:03 PM)
பத்தியம் என்பது ஒரு வழக்குச் சொல்.
அதனைப் பயன்படுத்தக் கூடாதென்ற எந்த நிபந்தனையும் கிடையாது.

அது தங்கள் அர்த்தத்தில் அப்படியே பயன்படுத்தலாம்.

ஆனால்,
பொதுவாக எல்லார்க்கும் புரியும் தமிழ் என்றால் பரந்த வீச்சுக் கிடைக்குமல்லவா.

எனது அறிவிற்கெட்டியபடி...
பெளவ்வியம், பவித்திரமா மாறி....பின் பத்திரம் என்றுபோய்...ஈற்றில் பத்தியம்
ஆக மாறியிருக்கும்.

பத்திரமா பார்த்துக் கொள், என்று சொல்வதில்லையா..,
அதுபோலத்தான்
என்றாலும் கவிதயின் ஓட்டத்தில்...அந்தப் பத்தியம் என்ற சொல் எனக்கு உறுத்தியது.
அதுவே சிலவேளயில் கவிதைக்குச் சிறப்பையும் நல்கியிருக்கும்.
இது அவரவர் இரசனையயும் வேண்டி நிற்கிறது.

நன்றி.


ஓகே... ஓகே... தங்கள் பதிலுக்கு மிக்க நன்றிகள் சூரியகுமார். smile.gif

0

#12 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 09 November 2007 - 09:37 PM

QUOTE (Suganthe @ Nov 8 2007, 11:48 PM)
QUOTE
உன்மேலான இந்த நேசிப்பு
காதலென்று சொல்லுவதற்கில்லை
அதற்கும் பலபடி மேலாய்
பரிசுத்தமாய்...
தொடரும் இந்த நேசிப்பு
என் நெஞ்சிருக்கும் வரை நீடிக்கும்!


உங்கள் நேசிப்பு என்றென்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள்


ம்ம்... உங்கள் வாழ்த்திற்கு நன்றி சுகந்தி.
smile.gif
0

#13 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 09 November 2007 - 09:37 PM

QUOTE (அஞ்ச @ Nov 9 2007, 12:57 AM)
QUOTE
உன்னோடு
உயிர் கலந்த பொழுதுகள்...
சின்னச் சின்னச் சண்டைகள்...
செல்ல ஊடல்கள்...
மௌனப் போராட்டங்கள்...
கண்ணீரால் கரைந்த இரவுகள்...
இப்படி எல்லாமே
உன்னைப் பற்றியே நீளும்!


உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் சத்தியா sad.gif sad.gif


ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றி அஞ்சு.

0

#14 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 09 November 2007 - 09:39 PM

QUOTE (Thanimathy @ Nov 9 2007, 05:23 AM)
வாழ்த்துக்கள் சத்தியா... thumbs_up.gif

QUOTE
ஆனாலும்
இப்போது நாட்குறிப்பின் பக்கங்கள்
திறக்கும் போதெல்லாம்
பவனி வரும் உன் நினைவுகளை
பேனா மை கொண்டு எழுதாமல்
கண்ணீர்த் துளிகளை மட்டும்
காணிக்கையாக்கிச் செல்கின்றேன்!


வேதனைகளைச் சுமந்த கவிதை..
வரிகள் நன்று.




ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றி தனிமதி.
smile.gif
0

#15 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 09 November 2007 - 09:43 PM


0

#16 User is offline   chandrathi 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Advancing Members
  • Posts: 399
  • Joined: 16-October 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 11 November 2007 - 05:32 AM

QUOTE
என் பக்கத்திலிருப்போரிடமும்
உன்னைப் பற்றிய பல்லவியாய்
கதைகள் நீண்டு போனதும்
எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்!

உன்னோடு
உயிர் கலந்த பொழுதுகள்...
சின்னச் சின்னச் சண்டைகள்...
செல்ல ஊடல்கள்...
மௌனப் போராட்டங்கள்...
கண்ணீரால் கரைந்த இரவுகள்...
இப்படி எல்லாமே
உன்னைப் பற்றியே நீளும்!

ம்!...
புத்தகத்திற்கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல...

நானும் உன் நினைவுகளை
பக்கம் பக்கமாக
பதுக்கியே வைத்திருந்தேன்!


நானும் டைரி எழுதறத நிறுத்திட்டேன் சத்தியா!!
ஆனா, முற்றத்துல எழுத ஆரம்பிச்சுட்டேனே!!!
ரொம்ப நல்ல கவிதை.. வலிகளும் ரொம்ப அதிகமா இருக்கு!!
அன்புடன் சந்திரதி
0

#17 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 11 November 2007 - 10:41 PM

QUOTE (chandrathi @ Nov 11 2007, 05:32 AM)
QUOTE
என் பக்கத்திலிருப்போரிடமும்
உன்னைப் பற்றிய பல்லவியாய்
கதைகள் நீண்டு போனதும்
எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்!

உன்னோடு
உயிர் கலந்த பொழுதுகள்...
சின்னச் சின்னச் சண்டைகள்...
செல்ல ஊடல்கள்...
மௌனப் போராட்டங்கள்...
கண்ணீரால் கரைந்த இரவுகள்...
இப்படி எல்லாமே
உன்னைப் பற்றியே நீளும்!

ம்!...
புத்தகத்திற்கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல...

நானும் உன் நினைவுகளை
பக்கம் பக்கமாக
பதுக்கியே வைத்திருந்தேன்!


நானும் டைரி எழுதறத நிறுத்திட்டேன் சத்தியா!!
ஆனா, முற்றத்துல எழுத ஆரம்பிச்சுட்டேனே!!!
ரொம்ப நல்ல கவிதை.. வலிகளும் ரொம்ப அதிகமா இருக்கு!!


சரி சரி... டைரி எழுதுறதை நிறுத்தினாலும் பறவாயில்லை.
முற்றத்தில் எழுதுவதை நிறுத்தாதீங்கோ என்ன... ஓகே வா? biggrin.gif

ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சந்திரதி. smile.gif

0

#18 User is offline   sivanes 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 951
  • Joined: 17-December 03
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 13 November 2007 - 12:13 AM

நெஞ்சுக்குள் நிழலாடிய நினைவுகளை கவிவரிகளாய் தொடுத்தாயோ... ? வாழ்த்துக்கள் சத்தியா.
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

0

#19 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 15 November 2007 - 09:01 PM

QUOTE (sivanes @ Nov 13 2007, 12:13 AM)
நெஞ்சுக்குள் நிழலாடிய நினைவுகளை கவிவரிகளாய் தொடுத்தாயோ... ? வாழ்த்துக்கள் சத்தியா.


ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றிகள் சிவனேஷ். smile.gif

0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users