பேச மறுத்த இதயம். |
![]() ![]() |
பேச மறுத்த இதயம். |
Nov 16 2007, 12:08 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
கேட்காமல் தந்தாய்..
மறுக்காமல் ஏற்றேன். மறுபடியும் மௌனம் மனதை குழப்புமா…? காதல் என்பது முன்றெழுத்து மந்திரமா…? மூடி மறைத்து இதயங்கள் தவிக்க…? குழப்பமா உனக்குள் கோபமா என்னோடு…? வார்த்தைகளால் என்னை வசமாக்கினாய் உனக்குள். நம்பினேன் நாளும் தேங்கியது நினைவுகள். தேங்கிய நினைவுகளை சேர்ந்தே சுவைத்தோம். அன்பை வளர்த்தோம். ஆனந்தம் அடைந்தோம். ஆசைகளை சேர்த்து காதலுக்கு இறைத்தோம். என்ன சுகங்கள் எத்தனை எதிர்பார்ப்பு. இப்படியே இருக்க எவ்வளவு போராட்டம்…! இறைவனிடமும் கேட்டோம் இணையவேண்டும் நாமென்று. இத்தனையும் நொடிப்பொழுதில் இடிந்துபோனது ஏன்…? மௌனமாய் ஏனானாய் மங்கையே சொல்லிவிடு.. பேசமறுக்கும் இதயத்தை புரிந்திடவும் முடியவில்லை. போவென்று சொன்னாலும் பொய்யுரைக்க முடியவில்லை. நல்ல மனங்களுக்கு நாளும் தொல்லைதான். நீயன்று சொன்னது பொருந்துதுபார் எனக்கு.. பொருந்தாத உள்ளங்கள் புரியாது காதலை இருந்தாலும் உன்னை இன்றுவரை நேசிக்கிறேன். -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Nov 16 2007, 04:46 PM
Post
#2
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ், கவிதை நன்றாக அமைந்திருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்.
-------------------- |
|
|
|
Nov 16 2007, 05:03 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்......
QUOTE இறைவனிடமும் கேட்டோம் இணையவேண்டும் நாமென்று. இத்தனையும் நொடிப்பொழுதில் இடிந்துபோனது ஏன்…? மௌனமாய் ஏனானாய் மங்கையே சொல்லிவிடு.. பேசமறுக்கும் இதயத்தை புரிந்திடவும் முடியவில்லை. கவலையை விடுங்க சிவனேஸ்.. உங்களின் பேசமறுக்கும் இதயம் வந்து ஆசையாகப் பேசிப்பழகும் நாளும் வரும் அதுவரை கவிதை எழுதி உங்கள் மெளனத்தைக் கலையுங்கள். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 16 2007, 06:50 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
QUOTE (sivanes @ Nov 16 2007, 12:08 PM) இத்தனையும் நொடிப்பொழுதில் இடிந்துபோனது ஏன்…? மிகவும் கவலையாக இருக்கு கவிதைக்கு வாழ்த்துக்கள் சிவனேஸ்... -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Nov 16 2007, 10:24 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
அன்பை வளர்த்து ஆனந்தத்தில் திளைத்து இன்பத்தில் மூழ்கி... இப்போ துன்பத்தைச் சுமந்தாயோ...? ம்ம்... சோகம் சுமந்த கவிதைக்கு வாழ்த்துக்கள் சிவனேஷ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Nov 17 2007, 03:33 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
QUOTE இறைவனிடமும் கேட்டோம் இணையவேண்டும் நாமென்று. கடவுள் கைவிடமாட்டார் வாழ்த்துக்கள் சிவனேஸ் -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Nov 18 2007, 02:19 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 917 Joined: 1-January 07 Member No.: 808 |
பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை இருந்தாலும் உன்னை இன்றுவரை நேசிக்கிறேன் நீ நேசித்த இதயம் உன்னை நேசிக்க மறந்தாலும், உன் காதலை நீ என்றும் நேசித்து கவி வடி உறவே...... -------------------- -------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------ ***** நம்பிக்கை தளம்****** ***** என் கிறுக்கல்கள்****** |
|
|
|
Nov 20 2007, 02:15 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
சிவனேஷின் நேசிப்பு தொடரட்டும்.
வாழ்த்துக்கள் சிவனேஷ். -------------------- |
|
|
|
Nov 20 2007, 01:43 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 377 Joined: 19-April 07 Member No.: 984 |
அனுபவபூர்வமான உண்மை! என்னால் உங்கள் கவைதையை தொட்டு உணரமுடிந்தது!
நன்றி! சிவனேஸ்! உலகின் பாதிக்காதல்கள் இப்படித்தானோ! -------------------- |
|
|
|
Nov 21 2007, 02:32 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 399 Joined: 16-October 07 Member No.: 2,136 |
QUOTE மௌனமாய் ஏனானாய் மங்கையே சொல்லிவிடு.. பேசமறுக்கும் இதயத்தை புரிந்திடவும் முடியவில்லை. போவென்று சொன்னாலும் பொய்யுரைக்க முடியவில்லை. நல்ல மனங்களுக்கு நாளும் தொல்லைதான். நீயன்று சொன்னது பொருந்துதுபார் எனக்கு.. பொருந்தாத உள்ளங்கள் புரியாது காதலை இரண்டு இரண்டு வரிகளாக நச் நச்சென்று படைத்த வரிகள் அருமை. வாழ்த்துக்கள்! -------------------- அன்புடன் சந்திரதி
|
|
|
|
Nov 21 2007, 03:57 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 174 Joined: 1-October 07 Member No.: 1,851 |
QUOTE (chandrathi @ Nov 21 2007, 02:32 PM) மௌனமாய் ஏனானாய் மங்கையே சொல்லிவிடு.. பேசமறுக்கும் இதயத்தை புரிந்திடவும் முடியவில்லை கவிதை நன்று வாழ்த்துக்கள் சிவனேஸ் . சோகமான வரிகள் காதலை நேசிக்கும் நீங்கள் வாழ்க வளமுடன். -சயிலுயா This post has been edited by சத்தியா: Nov 21 2007, 05:59 PM -------------------- |
|
|
|
Nov 25 2007, 09:13 AM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
QUOTE (sivanes @ Nov 16 2007, 12:08 PM) இப்படியே இருக்க எவ்வளவு போராட்டம்…! இறைவனிடமும் கேட்டோம் இணையவேண்டும் நாமென்று. இத்தனையும் நொடிப்பொழுதில் இடிந்துபோனது ஏன்…? மௌனமாய் ஏனானாய் மங்கையே சொல்லிவிடு.. ஆதித்ததாஸன் 25-11-2007 மறுக்கின்ற மனமும் வெறுக்கின்ற தினமும் நறுக்கென்று பேசும் இதயமும்...உன் பொறுக்கின்ற மனமும் நிறுக்கின்ற அன்பின் ஆழமும்கண்டதும்.... வெறுப்பினை மாற்றும்! மறுப்பின்றிப் பேசும்! பொறுத்து இரு! மறுபிறப்பிலும் தொடரும்! காத்து இரு! உன் கவிகண்டுமா வெறுக்கிறாள்! பெண்கவி பிடிவாதம் ஜாஸ்திதான்!அவள் தன்கவிகொண்டு பதில்கூட்டுவாள்! தண்கவிகொண்டு தாலாட்டுவாள்!காத்திரு! வாழ்த்துக்கள் சிவனேஸ்வரா! தொடரட்டும் இனிமைக்கவிதைகள்! அன்புடன் ஆதித்ததாஸன் -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:39 PM |