IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
வாழ்க நற்றமிழர் . . .!
மகுடதீபன்
post Jan 27 2008, 12:31 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



வாழ்க நற்றமிழர் . . .!



துணிக் கடைத் திறப்பு விழா. . .!
சிறப்பு விருந்தினர்
துணியே இல்லாத நடிகை !

திறப்பு விழா என்பதால்
அவர் வருகை திறந்த நெஞ்சோடு . . .

ஆராவது மூடு விழா
அழையுங்களேன் . . .!

இவர்கள் பேட்டி
மடைதிறந்த்துபோல் - இல்லை எனினும்
உடை திறந்த்துபோல் நிச்சயம் இருக்கும்.!

திறப்பு விழாவின் போது
ரிப்பன் வெட்டிய நடிகை கேட்டார்.

'ரிப்பன் என்குத்தானே . . .!'
உங்களுக்குத்தான் மேம் !
நாளை உடை தைக்க
உபயோகப் படும் !

அன்று சாலையில் இயற்கை மாற்றம்.
புது ந்தி ஒன்று பிரவகித்த்து,
ஜொள் ந்தி . . .
வாழ்க ஜொள்ளர்கள் !

என்ன கூட்டம்
என ஒதுக்க வந்த டிராபிக் போலீஸ்
இரண்டாம் உயிர் எழுத்தை வாயில் திறக்க
நாலாம் உயிர் எழுத்து உள்ளே போய்ப் பறந்தது.!

நடுநாயகமாய் குத்துவிளக்கு. . .!
இலக்குமியைத் தீண்டிப் பழகியது அது

என்ன பாவம் செய்த்தோ இன்று,
உயிர் இருந்தால் தன்னைத்தானே
குத்திக் கொண்டிருக்கும். . .

அதனால்தான் குத்து விளக்கா ?

பேசாமல்
நடிகை வீட்டு நாயையும்
சட்டை அணிவித்து
திறப்பு விழாவுக்குக் கூப்பிட்டிருக்கலாம் . . .!

அதாவது கொஞ்சம் நாணப் பட்டிருக்கும்.

நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். . .!

நடிகைக்கு வேண்டுமாம் என
ஏன் சொல்லாது விட்டாய் பாரதீ . . .?

அந்தக் கூட்டத்தில் நல்லா டிரஸ் பண்ணி
போர்த்திக் கொண்டு வெட்கப் பட்ட சீவன்கள்
துணிக்கடைப் பொம்மைகள் மட்டுமே . . .!

திறந்த மனசோடு எல்லோர்க்கும்
திவ்ய தரிசனம்.

பேருந்துகள் கூட அன்று அங்கே நின்றே சென்றன.



பேயாட பிசாசாட - நடன நிகழ்ச்சியில்
வாராவாரம் இரசித்த்து 2D - தரிசனம்.

இது 3 D - ஜென்ம சாபல்யம் !

மேம்மிடம் நிறையப்பேர் கைஎழுத்து வாங்கினர்.
சிலர் நெஞ்சில், சிலர் உள்ளங் கையில்,
சிலர் ரூபாய் நோட்டுக்களில் . . .

இவர்கள் கொஞ்சநாள் குளிக்க மாட்டார்கள்,
கழுவ மாட்டார்கள். . .
நாளை அந்த ரூபாய் நோட்டு
நல்ல ரேட்டுக்கு ஏராளமாய் ஏலம் போகும் . . .!

மேம்க்கு ரெம்ப ஆசை
தன் இரசிகர்கள்
தனக்குக் கோவில் கட்ட வேணும் என்று . . .

கோவிலில் கற்சிற்பம் இருக்கும்
அதை உறுதி செய்ய
நிறையப் பேர் மேம்மைத்
தொட்டு எல்லாம் பார்த்து
பிறவிப் பயனை அடைந்தார்கள் . . .!

அந்தக் காலத்தில் ஏதாவது மா நாய்க வணிகன்
பூம்புகாரில் உள்ள நாளங்காடிக் கடையைத்
தாசி அபரஞ்சியை வைத்துத்
திறந்திருப்பார் . . .!

இன்று இங்கே இவர்கள் இப்படி !
மனிதர்கள் மாறவே இல்லை !

நீதான் ஸாரதி ஆயிற்றே !
ஏ, வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா . . .!

இவர்களைப் பத்திக் கொண்டு போ கடல் வரை !
அங்கே தள்ளி மந்தார மலையைத் தூக்கி
அமுக்கி ஒரு கடை கடை !

இனியேனும் இப்படிஎல்லாம் திறவார் ஒரு கடை ! !


-m a g u d a d h e e b a n

This post has been edited by magudadheeban: Jan 27 2008, 12:35 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
அனு
post Jan 27 2008, 02:24 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 1,676
Joined: 16-January 07
From: சிங்கபூர்
Member No.: 819



ம்ம் நன்றி மகுடதீபன்..
நல்ல கவிதை வாழ்த்துக்கள்


--------------------
user posted image


அனு ..உங்கள் தோழி
தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jan 27 2008, 03:43 PM
Post #3


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




அது ஏனென்று
எனக்கும்தான் தெரியவில்லை.

படித்தவர்கள்
பண்பானவர்கள்
பெரியவர்கள் என்று
கையெடுத்துக் கும்பிடும்படி
பலர் அங்கே இருந்தாலும்...

திறப்பு விழா என்றதும்
சிறப்பு விருந்தினராய்
துணியே இல்லாத
நடிகைக்கே முதலிடம்.

இது ஏன்...? rolleyes.gif

ம்ம்... உள்ளக் குமுறல் இங்கே கவிதையாய்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 27 2008, 03:46 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



பாராட்டுதலுக்கு
நன்றிகள் அனு. . .

This post has been edited by magudadheeban: Jan 27 2008, 03:49 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 27 2008, 03:49 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



மற்றவர்களைச்
சிறப்பு விருந்தினராய் அழைத்தால்
வர்த்தகம் நடவாதே,
விளம்பரம் கிட்டாதே,

அதுதான் காரணம் சத்தியா !

ஆனால் கடையின்
மங்களகரம் போச்சே !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Jan 27 2008, 05:20 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



QUOTE (சத்த @ Jan 27 2008, 09:13 PM)

அது ஏனென்று
எனக்கும்தான் தெரியவில்லை.

படித்தவர்கள்
பண்பானவர்கள்
பெரியவர்கள் என்று
கையெடுத்துக் கும்பிடும்படி
பலர் அங்கே இருந்தாலும்...

திறப்பு விழா என்றதும்
சிறப்பு விருந்தினராய்
துணியே இல்லாத
நடிகைக்கே முதலிடம்.

இது ஏன்...? rolleyes.gif

சத்தியா,
எத்தனை நல்லவர்களை நம்மவர்களுக்குத் தெரியும்...
எத்தனைப் படித்த அறிஞர்களை நம்மவர்களுக்குத் தெரியும்...

நம்மவர்களுக்கு சாமானியர்களுக்குத் தெரிந்த தெல்லாம் நடிகர்களும் நடிகைகளும்... கூடிப் போனால் அரசியல் தலைவர்களும் தான்.
இவர்களுக்குத்தான் கூட்டம் கூடும்..
கோசங்கள் எழும்...

எனவே தான் வியாபாரிகள் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்கின்றார்கள்...

சாமானியனின் சபலத்தல் காசு பார்க்கின்றார்கள்.

ஃஃஃ

கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பர் மகுடதீபன்.

தங்களின் ஞாயமான சாடல்கள் தொடரட்டும்.


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
PATCHI
post Jan 27 2008, 10:56 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 647
Joined: 19-December 03
Member No.: 14



சிங்காரப் பட்டுடுத்தி
சிலை வைப்பார்...அவர்
சிதைந்து போகும் நலன் கேட்டால்
சினந்து கொள்வார்..

கட்டித் திறந்து பின்
கட்டழகுத் தவம் கொண்டு
கத்தைக் கடன் கழிக்க
கடமைகளை மறந்து விட்டார்...

பார்க்கக் கண் ஆயிரம் கூட
பாவாடைகள் அகன்றுவிடுகின்றன..

யார் செய்யும் தவறுகள் இவை ?

உன் உணர்வோடு கலந்து...
ஷ்..பட்சியும் வந்திடுச்சு..பட்சியும் வந்திடுச்சு..ஷ்


--------------------
உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........!
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 27 2008, 11:32 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



நன்றி பட்சி அவர்களே,

யார் செய்யும் தவறுகள் இவை ?

கலைஅரசன் சொல்வது போது
சமுதாயம் தனி மனிதனின் குழும ம்.

தனிமனிதன் செய்யும் தவறுகள்தான் இவை.

ஒவ்வொருவரும்
தனித் தனியே திருந்தும் போது
ஒட்டு மொத்தச் சமுதாயம்
தானே திருந்திவிடும்.

அதுவரை

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் . . .

m a g u d a d h e e b a n


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Jan 28 2008, 12:15 AM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



வாழ்த்துக்கள் மகுடதீபன்

QUOTE
தனிமனிதன் செய்யும் தவறுகள்தான் இவை.

ஒவ்வொருவரும்
தனித் தனியே திருந்தும் போது
ஒட்டு மொத்தச் சமுதாயம்
தானே திருந்திவிடும்.


உண்மைதான் ஆனால் அப்படியான சந்தர்ப்பம் வருமென நினைக்கிறீர்களா போகிற போக்கைப் பார்த்தால் தெரியவில்லை வியாபாரிகளையும் தவறு சொல்ல முடியாது அவர்களுக்கு கூட்டம் வரவேண்டும். அப்போதானே வியாபாரம் விருத்தியடையும் ஏன் இப்போ வரும் திரைப்படங்களில் கூட அநேகமாக கவர்ச்சி நடனங்களை புகுத்தி விடுகிறார்கள் கதைக்கு எந்த வகையில் இது தேவைப்படும் என்பது புரிவதில்லை கேட்டால் கஷ்டப்பட்டு படமெடுப்பவர்க்கு அது நீண்ட நாட்கள் ஓடவேண்டுமென்ற கவலை . பரவாயில்லை திறப்பு விழா ஒரு நாள் மட்டும் தானே இதையே சாக்காக வைத்து மனைவிமாருக்கு கணவன்மார் புடவை வாங்கிக் கொடுக்கட்டும். biggrin.gif


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 28 2008, 12:46 AM
Post #10


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



ஆமாம் சுகந்தீமா,

இங்கேதான் ஒரு பெரிய கேள்வியே எழுகிறது,
என்ன,
இதுதானே கிடைக்கிறது - என
நேயர்கள் பார்க்கிறார்களா,

இல்லை,
நேயர்கள் விரும்புகிறார்கள், எனவே கொடுக்கிறோம்
என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்
சொல்கிறார்களே
எது சரி ?

QUOTE
திரைப்படங்களில் கூட அநேகமாக கவர்ச்சி நடனங்களை புகுத்தி விடுகிறார்கள் கதைக்கு எந்த வகையில் இது தேவைப்படும் என்பது புரிவதில்லை


எந்தத் தனிமனிதன் எனக்கு
இதுதான் வேண்டும் எனக் கேட்டான்.

நாட்டிலே கிடைப்பதைத் தின்கின்றன பசுக்கள்.
பசுக்களின் சுபாவம் புல் தின்பது.

நாட்டில் புற்களே அற்று
நரகல்களே மட்டும் கிடந்தால்
பசுக்கள் பன்றிகளாக
மாறுவதைத் தவிர
என்ன வழி ?

பின்னூட்டமாக இருந்தாலும் நிறைய எழுதுங்கள்
சுகந்தீமா !


m a g u d a d h e e b a n

This post has been edited by magudadheeban: Jan 28 2008, 12:50 AM


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:38 PM