"காணவில்லை" ஒலிபெருக்கியில் அறிவிப்பு... |
![]() ![]() |
"காணவில்லை" ஒலிபெருக்கியில் அறிவிப்பு... |
Jul 28 2004, 07:13 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
..................................நினைவோ ஒரு பறவை.....................................
..................................விரிக்கும் அதன் சிறகை.................................... "காணவில்லை" ஒலிபெருக்கியில் அறிவிப்பு! ....................................................................... அப்போது எனக்கு 7 வயதிருக்கும். ஒரு நாள் எனது அம்மம்மா அன்ரிமாருடன் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு கலை விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அம்மம்மா, அன்ரி, அன்ரியின் மகள் எல்லோருமாகச் சேர்ந்து சென்றோம். எங்கள் வீட்டில் இருந்து அந்தத் தேவாலயம் தூரத்தில் இருந்தமையால் எம்மை எல்லாம் காரில் ஏற்றிச் சென்று இறக்கி விட்டு அப்பா திரும்பிச் சென்று விட்டார். நாம் அங்கு செல்லும்போது மாலை 5 மணியிருக்கும். பெருந்திரளான மக்கள் கூட்டமாகையால்... ஒரே சன நெருக்கம். அங்கே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருந்தமையால் எல்லோரும் முந்தியடித்துக் கொண்டு தமக்கான இடத்தைப் பிடித்து விட்டிருந்தார்கள். என்ன செய்வது? எமக்கு முன்னால் இடம் கிடைக்கவில்லை. பின்னால்தான் இடம் கிடைத்தது. தொடரும்.............. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2004, 09:06 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சத்தியா.
ஆகா மறுபடியும் ஓர் பதிவேடு ஆரம்பமா? சத்தியா கூட்டத்தோடு கூட்டமா காணமல் போய் விட்டீர்களா? சத்தியா கவவையை மறந்து தொலைந்து போங்கள் அமெரிக்காவை கண்டுபிடிக்க ஒரு "கொலம்பஸ்" போல், சத்தியாவை கண்டுபிடிக்கவா ஒருவர் வரமாட்டார்? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 28 2004, 09:54 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (rennynimal @ Jul 28 2004, 09:06 PM) சத்தியா கவவையை மறந்து தொலைந்து போங்கள் அமெரிக்காவை கண்டுபிடிக்க ஒரு "கொலம்பஸ்" போல், சத்தியாவை கண்டுபிடிக்கவா ஒருவர் வரமாட்டார்? பாருங்களேன். ஒருத்தர் தொலைந்து போவதில் இன்னொருவருக்கு எவ்வளவு ஆனந்தம் என்று. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2004, 06:48 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"காணவில்லை" தொடர்கிறது..............
எங்கும் ஒரே கலகலப்பு. எங்கும் மிகப் பிரகாசமான மின் விளக்குகளின் ஒளிகள். அதைவிட பல மணிக்கடைகள் வரிசையாக காணப்பட்டன. தேவாலயத்தின் வாசலில்... கச்சான், கடலை போன்ற வியாபாரிகளின் திடீர் கடைகள். இப்படி எல்லாமே மனதிற்கு இனம் புரியாத ஒரு மகிழ்வினைத் தந்தன. கிட்டத்தட்ட 6 மணி இருக்கும். கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பாட்டுக்கள், நாடகங்கள், நடனங்கள், மேடைப் பேச்சுக்கள் என பலவகையான நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. என்னவோ தெரியவில்லை. சின்ன வயதில் இருந்தே பாட்டுக்களில் லயித்துப் போவதும்... நடனங்கள் நாடகங்களை ரசிப்பதிலும் அதிக ஈடுபாடு எப்போதும் எனக்குள் இருந்தது. ம்... கிட்டத்தட்ட 9 மணியிருக்கும் தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கக் கூடும், தம் வீடுகளிற்கு செல்வதற்காக மெல்ல மெல்ல கலையத் தொடங்கினார்கள். பின்னே இருந்த எமக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இது தடையாக இருந்தது. அதிலும் நான் சிறியவளாக இருந்தமை யால் எனக்கு அதிகமாக மறைக்கத் தொடங்கியது. ஆனாலும் நான் விடுவதாக இல்லை. அங்கும் இங்குமாக சரிந்து சரிந்து நிகழ்ச்சிகளை விடாது ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது... மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ... என்ற பாடலை ஓர் அக்கா மிகவும் அருமையாகப் பாடத் தொடங்கினார். பாடலில் லயித்த நான் என்னை அறியாமலேயே எழுந்து மெல்ல முன்னே சென்று விட்டேன். அந்தப் பாடலைத் தொடர்ந்து... கூந்தலிலே நெய் தடவி... என்ற பாடலுக்கு இரண்டு அக்காமார் அபிநயம் பிடித்து ஆடத் தொடங்கினார் கள். அதை ரசிப்பதற்காக என் கால்கள் என்னை மறந்து இன்னமும் முன்னே நடந்து சென்று விட்டன. யாரின் மறைப்பும் இன்றி அந்த நடனத்தை நன்றாக ரசித்தேன். அந்த நடனம் முடியத்தான் நான் எங்கோ நிற்பது என் நினைவிற்கு வந்தது. உடனடியாக அம்மம்மா, அன்ரிமார் இருந்த இடத்திற்கு ஓடிச் சென்றேன். அங்கே அவர்கள் இருந்த இடத்தில் அவர்கள் எவரையும் காணவில்லை. அந்த சனத்திற்குள் ஓடி ஓடித் தேடுகின்றேன். அவர்களைக் காணவே இல்லை. எனக்கு மெல்ல அழுகையும் வந்து விட்டது. பெலத்து அழாமல் மெல்ல அனுக்கத்துடன் அழுதபடி மணிக்கடைகளின் பக்கமாக தேடுகின்றேன். அங்கும் அவர்கள் எவரையுமே காணவில்லை. என்னை மறந்து விட்டுப் போய் விட்டார்களோ?... என்ற பயம் எனக்குள் வந்தது. உடனடியாக தேவாலயத்தை விட்டு வெளியே வீதிக்கு அழுதபடி ஓடுகின்றேன். வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். நானும் அழுதழுது ஒவ்வோர் கூட்டத்திற்குள்ளும் அவர்களைத் தேடுகின்றேன். இப்படியே கால் போன போக்கில் அதிக தூரம் ஓடிச் சென்று விட்டேன். நான் எங்கு நிற்கின்றேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.அப்படியே வீதியில் நின்ற படி ஓவென்று அழத் தொடங்கி விட்டேன். அப்போது அந்த வழியில் வயது முதிர்ந்த ஒரு அப்பு சயிக்கிலில் வந்து கொண்டிருந்தார். நான் அழுவதைக் கண்டதும் சயிக்கிலில் இருந்து இறங்கி என் அருகில் வந்தார். நானோ பயத்தில் ஒரே ஓட்டமாக ஒடத் தொடங்கினேன். அந்த அப்புவும் சயிக்கிலை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து ஒருவாறு என்னைத் துரத்திப் பிடித்து விட்டார். பின் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு என் கண்ணீரைத் துடைத்து விட்டபடி... என்னைப் பற்றி விசாரித்தார். நான் சகலதையும் விபரமாகச் சொன்னதும் தான் என்னை எனது அம்மம்மாவிடம் கொண்டு போய் விடுவதாகக் கூறி என்னை தனது சயிக்கிலில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேவாலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அருகே நாம் வந்து கொண்டிருக்கிறோம். அப்போது ஒலிபெருக்கியில்... நீலச் சட்டை போட்டு... இரட்டைப் பின்னல் கட்டியபடி... சத்தியாவைக் காணவில்லை. என அடையாளம் கூறப்பட்டு ஒலிப்பது என் காதுகளில் விழுகின்றது. என்னை கூட்டி வந்த அப்பு, என்னைக் காரியாலயத்தில் ஒப்படைத்தார். பின்னர் அம்மம்மா வந்து என்னை கூட்டி வந்த அப்புவிற்கு நன்றி கூறி விட்டு என்னைக் கூட்டிச் சென்றார். இன்றும் அந்த சம்பவமும்... என்னை கூட்டி வந்த அப்புவின் முகமும் என் மனதில் நிழலாய் பதிந்துள்ளது. என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று. அதுவும் சின்ன வயதில் நடந்திருந்தாலும்... என் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவம் இதுவாகும். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2004, 07:30 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சத்தியா.
எப்படி நான் சொன்னது போலவே கொலம்பஸ் போலவே ஒர் அப்பு வந்து உங்களை கண்டு பிடித்து விட்டார். அந்த அப்புக்கு ஓர் நன்றி. அன்று இந்த சத்தியாவை கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் இன்று நிலா முற்றம் ஓர் அங்கத்தவரை இழந்திருக்கும் அல்லவா? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 2 2004, 09:06 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 724 Joined: 18-December 03 Member No.: 9 |
நன்றி சத்தியா
|
|
|
|
Aug 9 2004, 04:59 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
நன்றி சத்தியா.
நன்றாக நகர்த்திச் சென்றீர்கள் வாழ்த்துக்கள். -------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
Aug 10 2004, 07:42 PM
Post
#8
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
பல பதிவேடுகளை எங்களோடு இணைத்துக்கொள்ளும் உங்களுக்கு நன்றி சத்தியா, தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Aug 11 2004, 08:27 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி சத்யா.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Aug 23 2004, 04:34 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,979 Joined: 19-February 04 Member No.: 57 |
நன்றி சத்தியா
-------------------- something is better than nothing
|
|
|
|
Apr 10 2006, 06:07 AM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நன்றி சத்தியா. நீங்கள் பழையதுகளை மீட்டிப்பார்ப்பது போன்றே நானும் முற்றத்தின் பழையதுகளை புரட்டிப்பார்க்கிறேன். இரட்டைப்பின்னல் நீலச்சட்டை சத்தியாவை நினைத்துப்பார்க்கிறேன். ம்;;;;.......ம்...நல்லவேளை அப்பு மாத்திரம் வராமல் இருந்திருந்தால்.............? எப்படியும் சத்தியாவை அந்த ஆண்டவன் அம்மம்மாவிடம் கொடுத்திருப்பார்.
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Apr 10 2006, 11:45 AM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Apr 10 2006, 06:07 AM) நன்றி சத்தியா. நீங்கள் பழையதுகளை மீட்டிப்பார்ப்பது போன்றே நானும் முற்றத்தின் பழையதுகளை புரட்டிப்பார்க்கிறேன். இரட்டைப்பின்னல் நீலச்சட்டை சத்தியாவை நினைத்துப்பார்க்கிறேன். ம்;;;;.......ம்...நல்லவேளை அப்பு மாத்திரம் வராமல் இருந்திருந்தால்.............? எப்படியும் சத்தியாவை அந்த ஆண்டவன் அம்மம்மாவிடம் கொடுத்திருப்பார். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 10 2006, 12:28 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
நன்றி சத்தியா.
-------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Apr 11 2006, 03:22 AM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
நன்றி சத்தியா
-------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Apr 12 2006, 08:41 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
நன்றி சத்தியா
-------------------- ![]() いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:36 PM |