IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
டீ . . .!
மகுடதீபன்
post May 7 2008, 01:42 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655





டீ

டீ, எப்படி இருக்கிறது ? -
என்கிறாய்
வீட்டுக்கு அழைத்து.


நம் காதலைப் போல

என்கிறேன் நான்.

' பாலொடு டீ கலந் தற்றே பனிமொழி
யாளொடு எம்மிடை நட்பு.'


இங்கும் கவிதைதானா ?
எங்கும் அதுவேதான் !

This post has been edited by மகுடதீபன்: May 7 2008, 02:19 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post May 7 2008, 12:13 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



சூடா ஒரு கப் டீ தந்து....
கூலா ஜில்லுன்னு ஒரு கவிதையும்... biggrin.gif

சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.... thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post May 7 2008, 02:22 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



நன்றி தனிமதி,
இக்கவிதைக்குள்
இரண்டு திருக்குறளின்
தாக்கமும், ஒத்திசைவும் உள !

யாரேனும் கண்டு பிடியுங்கள்
பார்க்கலாம் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post May 7 2008, 04:01 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



இந்த டீ கவிதையை அருமை. வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post May 9 2008, 11:17 AM
Post #5


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




சரி சரி... எங்கும் கவிதைகள் தொடரட்டும்.

ம்ம்... வாழ்த்துக்கள். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post May 9 2008, 11:50 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (மகுட @ May 7 2008, 02:22 PM) *
நன்றி தனிமதி,
இக்கவிதைக்குள்
இரண்டு திருக்குறளின்
தாக்கமும், ஒத்திசைவும் உள !

யாரேனும் கண்டு பிடியுங்கள்
பார்க்கலாம் !


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


கணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.
------------------------------------------

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.


உணவுப் பண்டங்களில் அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல். அதை அளவுகடந்து சிறிது நீளவிட்டாலும் உப்பின்மிகுதிபோல அது கெட்டுவிடும்.


என் சிறிய அறிவுக்கு எட்டியது இக்குறள் இரண்டும்.
சரியாகயிருக்காது என்றது தெரியும். rolleyes.gif

யாருமே கண்டு கொள்ளாதபட்சத்தில் தாங்களே அதனையும் எழுதிவிடுங்களேன் மகுடதீபனண்ணா..... smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post May 10 2008, 01:30 AM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



மிக்க நன்றி தனிமதி
பின்னூட்டங்களையும் வாசிக்து அதற்கும்
பதில் அளிக்கும் ஒருசில பேர்களில்
நீங்களும் ஒருவர் . . .

மட்டுமல்ல, நான் கேட்ட கேள்விக்காக
திருக்குறளை ஒருமூச்சு
புரட்டி எடுத்திருக்கிறீர்கள் போல்
தெரிகிறதே,
அதற்காகவே சந்தோஷப் படுவேன் நான் !

என்றாலும் நான் கேட்டது
என் குறள் வடிவம் - அதன் கட்டமைப்பு
இரண்டு திருக்குறட்களை ஒத்திருக்கிறது - எவை ? - என.

பரவாயில்லை எடுத்த முயற்சிக்கு இனிய பாராட்டுக்கள் !

நாலு நாள் ஆகியும் வேறு யாரும் எட்டிப் பாராத்தால்
நானே சொல்லி விடுகிறேன்.

முதல் மூன்று வார்த்தை கீழ்க்கண்ட குறளில் இருந்து . . .

பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர்


மீதிப் பகுதி இதோ, இத்திருக்குறளில். . .

குடம்பை தனித்தொழிய புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.


மற்றபடி நான் எழுதிய குறட் கவிதை
சுத்தமான குறள் வெண்பா இலக்கணத்தால்
தயாரிக்கப் பட்டது என
இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது. . .

அதிகமான பின்னூட்டம் பெறாத கவிதை எனினும்
இதுவரை பார்த்த 74 பேர்களுக்கும் நன்றி!

This post has been edited by மகுடதீபன்: May 10 2008, 01:30 AM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post May 10 2008, 12:27 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



CODE
மட்டுமல்ல, நான் கேட்ட கேள்விக்காக
திருக்குறளை ஒருமூச்சு
புரட்டி எடுத்திருக்கிறீர்கள் போல்
தெரிகிறதே,
அதற்காகவே சந்தோஷப் படுவேன் நான் !


biggrin.gif biggrin.gif biggrin.gif

நன்றிகள் மகுடதீபனண்ணா...


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:55 AM