நிலா முற்றம்: பிரிவின் நிமித்தம் - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

பிரிவின் நிமித்தம் கென்

#1 User is offline   jakey342001 

  • விவேகமானவர்
  • PipPipPipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 92
  • Joined: 25-October 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 26 June 2008 - 11:59 AM

பிரிவின் நிமித்தம்

நேற்றைய புணர்ச்சியில் நீ
விழி நிறைத்து படுத்திருந்தாய்
மார்போடு இணைந்திட்ட [ நீக்கப்பட்டுள்ளது smile.gif ]
பிரிவை மறுத்து ஒட்டிக்கிடந்தன
அடிவயிற்றில் உள்நுழைந்திட்ட
நானும் பிதற்றிக்கொண்டிருந்தேன்


ஒவ்வொரு துளியிலும்
உயிர்ப்பெருக்கிடும் ஏகாந்தம் நினைத்து
சுரப்பை நிறுத்திக் கொண்டிருக்கிறது உடல்

விரைத்து அடங்கிடும் [ நீக்கப்பட்டுள்ளது ]
கடைசிச் சொட்டு [ நீக்கப்பட்டுள்ளது ]
குறுகத் தொடங்கிட்டது அன்பு

நீண்ட பாலை மணற்வெளியில்
மறைந்திடத் துவங்குகின்றன
உன் காலடித் தடங்கள்

அனேகமாய் பிரிவுகளிலிருந்துதான்
தொடங்குகின்றன
ப்ரியத்தின் புதுக்கரங்கள்

காற்றும் காலமாய் வீசிக்கொண்டேயிருக்கலாம்

This post has been edited by நிலா: 04 July 2008 - 09:31 AM

KeN
0

#2 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 26 June 2008 - 02:45 PM

இப்படி எல்லாம் எழுதினால்தான்
புதுக் கவிதையா ?

வேண்டாம் கென் !

' நான் யார் என்பதை , நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை. நான்,நானாகவே இருக்கிறேன் - நம்பிக்கையுடன்.., '

இது நீங்கள் சொன்னது.
நான் தீர்மானிக்கமாட்டேன்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்,

குறுக்கிட்டதற்குப் பொறுத்தருள்க !

This post has been edited by மகுடதீபன்: 26 June 2008 - 02:50 PM

0

#3 User is offline   jakey342001 

  • விவேகமானவர்
  • PipPipPipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 92
  • Joined: 25-October 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 02 July 2008 - 11:25 AM

http://www.charuonli...june08/pp8.html

இதெல்லாம் தற்புகழ்ச்சிதான் இருந்தாலும் இலக்கியம் நீங்க யோசிக்கிறத எல்லாத்தையும் விட பெருசு


smile.gif)))))))
KeN
0

#4 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 02 July 2008 - 01:37 PM

இலக்கியம் என்பதே நாம் யோசிக்கிறதுதான் கென்.

அது ஒன்றும் எங்கோ உள்ள அன்னியமில்லையே,
பெருசு என்று சொல்ல!

நீங்கள் சொன்னதைச் சொன்னேன் அன்றி
இதில் தற்புகழ்ச்சி எங்கிருந்து வந்தது ?

இன்று எத்தனை பேர்படித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை வைத்தல்ல
நாளை எதிர்காலத்தில் எத்தனை பேர் படிப்பார்கள்
என்று பாருங்கள் காலம் கடந்த இலக்கியம் எது எனப் புரியும்.

கென், நீங்கள் நல்ல கவிஞர்
அப்புறம் ஏன் யதார்த்தம் என்ற பேரில்
இப்படி எல்லாம் கவிதைகள் ?

முதலில் கவிதைகளை உங்கள் வீட்டுக்
கல்யாணமாகாத பெண்களிடம்
கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்
அவர்கள் முதலில் முகம் சுழிக்காமல்
படிக்கிறார்களா
என்று பார்க்கலாம்

அப்புறம் நிலா முற்றத்தில் ஏற்றலாம்.

ஹே, மாடரேட்டர்களே,
இதெல்லாம்
என்ன,

கருத்துச் சுதந்திரம் நிலா அவர்கள்
கொடுத்துள்ளார்கள் என்பதற்காக
எல்லாவற்றையும் ஏற்றி விட முடியுமா ?

நிலாமுற்றத்தில்
இனித் தணிக்கைக் குழு அவசியம்
நினைக்கிறேன்.


சார்நிவேதா சர்ட்டிபிகேட் தந்துவிட்டாலோ
இல்லை மூன்றாம் வாரிசு என அறிவித்து விட்டாலோ
ஓகே ஓகே
எல்லாவற்றையும்
உங்கள் வலைப் பக்கத்தோடு வைத்துக் கொள்ளலாமே !

This post has been edited by மகுடதீபன்: 02 July 2008 - 02:47 PM

0

#5 User is offline   ரதி தேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,596
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: Happy

   ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது  ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது Posted 02 July 2008 - 01:41 PM

QUOTE (மகுட @ Jul 2 2008, 01:37 PM) <{POST_SNAPBACK}>
இலக்கியம் என்பதே நாம் யோசிக்கிறதுதான் கென்.

அது ஒன்றும் எங்கோ உள்ள அன்னியமில்லையே,
பெருசு என்று சொல்ல!

நீங்கள் சென்னதைச் சொன்னேன் அன்றி
இதில் தற்புகழ்ச்சி எங்கிருந்து வந்தது ?

இன்று எத்தனை பேர்படித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை வைத்தல்ல
நாளை எதிர்காலத்தில் எத்தனை பேர் படிப்பார்கள்
என்று பாருங்கள் காலம் கடந்த இலக்கியம் எது எனப் புரியும்.

கென், நீங்கள் நல்ல கவிஞர்
அப்புறம் ஏன் யதார்த்தம் என்ற பேரில்
இப்படி எல்லாம் கவிதைகள் ?

முதலில் கவிதைகளை உங்கள் வீட்டுக்
கல்யாணமாகாத பெண்களிடம்
கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்
அவர்கள் முதலில் முகம் சுழிக்காமல்
படிக்கிறார்களா
என்று பார்க்கலாம்

அப்புறம் நிலா முற்றத்தில் ஏற்றலாம்.

ஹே, மாடரேட்டர்களே,
இதெல்லாம்
என்ன,

கருத்துச் சுதந்திரம் நிலா அவர்கள்
கொடுத்துள்ளார்கள் என்பதற்காக
எல்லாவற்றையும் ஏற்றி விட முடியுமா ?

நிலாமுற்றத்தில்
இனித் தணிக்கைக் குழு அவசியம்
நினைக்கிறேன்.


சார்நிவேதா சர்ட்டிபிகேட் தந்துவிட்டாலோ
இல்லை மூன்றாம் வாரிசு என அறிவித்து விட்டாலோ
ஓகே ஓகே
எல்லாவற்றையும்
உங்கள் வலைப் பக்கத்தோடு வைத்துக் கொள்ளலாமே !

மகுடதீபன் சார் சொல்வது சரிதான் கென்! இனிமேல் இது போன்று கவிதைகள் வேண்டாம்!
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு


Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#6 User is offline   jeyaraman 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Advancing Members
  • Posts: 312
  • Joined: 15-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 02 July 2008 - 07:47 PM

பிரிவின் நிமித்தம்- கவிதையைப் படித்தபிறகு'என்ன இப்படி' என மனம் பதறியது. எழுத்துக்கள் எப்படி ஆடை கட்டாமல் வந்து விட்டன என்ற
பதபதைப்பு. உடனே பதில் எழுதவும் தோன்றவில்லை. இது போன்ற சொற்பிரயோகம் கூடாது என்று சொல்வது கடமை என உணர்ந்து எழுதுகிறேன்.
மனதால் கலப்புற்று வாழ்தல் காதல். உடலால் கலப்புற்றால்தான் அது காதலோ என ஐயுற வைக்கிறது கவிதை. கவிஞரின் கவிதையில் நெருடிய
சில வரிகளை இப்படிச் சொல்லிப்பார்க்கிறேன்:
நேற்றைய கூடலில் நீ
விழி நிறைந்து படுத்திருந்தாய்
நம்மிருவர் நெஞ்சங்களும்
பிரிவை மறுத்து ஒட்டிக் கிடந்தன
உன்னுள் உருகிப்போய்
நானும் பிதற்றிக் கொண்டிருந்தேன்
......................................
களவியின் குழைவில்
கழல்வது தானா அன்பு
.................................

எனது ' சஞ்சாரங்கள்-ஒரு மெல்லிய சாரல்' என்ற காதற்கவிதைகளின் கைப்பிரதி உள்ளது. அது ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையில் கல்வெட்டறிஞர் திரு.செ.இராசு அவர்களாலும், மற்ற நண்பர்களாலும் பாராட்டப்பட்டது. ( கூடிய விரைவில் நிலா முற்றத்தில் வைக்கிறேன்)
அண்மையில் நல்லறிஞர் ஒருவர் கையில் கிடைக்க, அவர் பின் வரும் இரண்டு கவிதைகளைக் கிழித்துவிடுங்கள் என்றார். அவை இதோ:
முரண்பாடே
-----------------
பின்னே கிடக்கும் கூந்தலைப் பின்னிச்
சடையாக முன்னே போட்டு-
அதுவும்
மார்பின் உயரம் காட்டும்
மன்மதக் கருவியாய்ப் போட்டு
நடமாடி வருகின்ற
முரண்பாடே! முரண்பாடே!

கூதிர்கால மழை
----------------
கூதிர்காலத்து அந்தியிலே
பாதித்தொடை நனைவுபெற
தூண்டிலிற் பட்ட மீனாக
வெடுக்கு வெடுக்கென்று
நீங்கள் முன்னேற
வழிமேல் விழிவைத்திருந்த நான்
என்ன நினைத்தேன் தெரியுமா
என்னுடலில் கொதிப்பேறும் சூட்டால்
உங்கள் உடலைத் தழுவி
உடையையும் தொடையையும்
உலறவைத்து, அந்தக்
கூதிரைச் சாகடிக்க வேண்டுமென்றுதான்
---இந்த இரு கவிதைகளையும் நான் கிழித்துப் போடத் தயாரில்லை . எல்லை மீற வில்லை என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது.
நிலா முற்றக் கவிஞர்களாகிய நாம் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு கவிதை படைப்போம்.


-உரப்புளி நா.ஜெயராமன்
0

#7 User is offline   sooryakumar 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 1,035
  • Joined: 16-November 06

Posted 03 July 2008 - 12:53 AM

நோ..நோ..
கென்னின் கவிதைகளுக்குத் தடை போடவேண்டாம்..

அவரிடம் நல்ல ஆற்றலும் உண்மையும் இருக்கிறது.

உங்களுக்கு ஒரேயொரு உதாரணம் சொல்கிறேன்.

இன்று மாபெரும் கவிஞனாகப் போற்றப்படும் விக்ரமாதித்யன்,

தனது உள்வாங்கும் உலகம் எனும் தொகுதியில்....

16 வயதில் smile.gif
60 வயதில் smile.gif

என்று எழுதியிருக்கிறார்.
அவருக்கு விருதும் கிடைச்சிருக்கு.

நீங்கள் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பது ஆதங்கம்.
என் ஆதங்கத்தை உங்கள் மீது திணிப்பது அராஜகம்.

நன்றி.

This post has been edited by நிலா: 03 July 2008 - 10:22 AM

காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
0

#8 User is offline   sooryakumar 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 1,035
  • Joined: 16-November 06

Posted 03 July 2008 - 01:29 AM

மகுடதீபன் மரபு சார்ந்தும் சில விழுமியங்களையும் பாதுகாக்க நினைக்கிறார். தப்பேதுமில்லை.

ஜெயராமன் நாசூக்காக தன் கருத்தைச் சொன்னார்.

மொழியின் எல்லைகளை அதுவும் நவீன தமிழ்க் கவிதையின் எல்லைகளைப் பற்றி நிறையவே பேசலாம்.

பெண்ணியம் சார்ந்த கவிதை மொழி என்பது பற்றி பெரிதாகக் கதை அடிபடுகிறது அறிவீர்களா???

முலைகள். என்ற தலைப்பிலேயே ஒரு பெண்ணின் கவிதைத் தொகுப்பு உள்ளதே.

புதிய மாதவி
மாலதி மைத்ரேயி
சுகுமாரி
திலகபாமா.

இவர்கள் கூறும் மொழியென்ன????????

இவர்கள் ஆழமாகச் சில பதிவுகளை பதிக்க முயல்கிறார்கள்.

கென்னின் கவிதையில் சில சொற்கள் எல்லை மீறுகின்றன தான்.
ஆனால் என்ன செய்வது....??
எடுத்த சப்ஜெக்ரே அதுதானே.....

உருவமா உள்ளடக்கமா அல்லது கட்டுடைப்பா நவீனத்துவமா பின்நவீனத்துவமா

எல்லாத்துக்கும் இசைந்து போகிறமாதிரி தமிழ்கவிதை வந்திடிச்சு..வரணும்.
ஆனா அது தரமா தரமில்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.

தடை போடுவது சென்சர் பண்ணுவது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத்தான் ...என்ன செய்யலாம் என்று ஒரு படைப்பாளி என்ற ரீதியில்....
யோசிக்கிறேன்.

கென்னை எனக்குத் தெரியாது.
ஆனால் அவரது கவிதைகள் சிந்திக்கவும் நயப்பதற்குமுரியன.
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
0

#9 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 03 July 2008 - 02:17 AM

கென் சிறந்த படைப்பாளி என்பதில்
எனக்கு ஐயமே இல்லை சூர்யக் குமார் !

நான் அவரது மற்ற கவிதைகளைக் குறை சொல்லவில்லை.

இந்த ஒரு கவிதையைத்தான் சொன்னேன்.

ஒருவர் எழுதுவதைப் பார்த்து
அடுத்தவரும் அதே ரீதியில்
எழுத ஆரம்பித்து விட்டால்
நிலா முற்றத்தின் தரம் பாதிக்கப் படுமே
எனத்தான் அஞ்சுகிறேன்

புதுமை என பேரில்
சும்மா வித்தியாசமாக எழுதுகிறேனாக்கும் என
புணர்ச்சி, விந்து, விறைப்பு என எழுதினால்
முதல் முறை வித்தியாசமாகப் படும்
அப்புறம் உவ்வே என ஓங்கரிக்கும்

அதுவே நீங்கள் சொன்னமாதிரி
சில பெண்கள் எழுத்த் துவங்கும் போது
ஆகா புதுமைப் பெண்கள் எனவும்
எல்லோர்க்கும் எழுத்துச் சுதந்திரம் எனவும்
என்னாற் கைதட்ட ஏலாது

படுக்கை அறையில் கொட்ட வேண்டியதை
சாலையில் புழங்கும் இடத்தில் கொட்டினால்
அங்காடி ஞமலிக்கும்
எழுத்தாளனுக்கும் என்ன வித்தியாசம் ?

பாலுக்கு ஆடைதான் அழகு, சுவையும் கூட.

விலங்குகளுக்குச் சட்டை போட்டால் அசிங்கமாய் தெரியும்
மனிதனுக்குச் சட்டை இல்லாதிருத்தால்
அசிங்கமாகத் தெரியும்

நான் ஒன்றும் மரபைக் கட்டிக் காக்க
கங்கணம் கட்டிக் கொண்டு பேசவில்லை

1980-ல் மறைந்த சுஜாதா அவர்கள்
குமுதத்தில்
தன் முதல் வரலாற்றுத் தொடரில்
அந்தப் பெண்ணிண் நெஞ்சில் இரு பூனைக் குட்டிகள்
என வருணித்ததால் கதை நிறுத்தப் பட்டதும்
அவ்வளவு குமுத வார இதழ்களும் நடு ரோட்டில்
எரிக்கப் பட்டதும்
எழுத்தாளனுக்கு மிரட்டல் வந்ததும்
நாடறியும்

அதற்கே பொறுக்காத தமிழ்ச் சமுதாயம்
இதைச் சீரணிப்பது வேடிக்கைதான்

ஜெயராமன் வேண்டுமானால்
கிழித்துப் போட வேண்டாம்

காலம் தீர்மானிக்கட்டும்

குப்பைகள் தானே மக்கிவிடும்
0

#10 User is offline   நிலா 

  • நிர்வாகி
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Support
  • Posts: 1,385
  • Joined: 17-December 03
  • Current Mood: Current Mood: Thinking

 உள்ளும் புறமும் ஒன்றாகக் கடவதாக !  உள்ளும் புறமும் ஒன்றாகக் கடவதாக ! Posted 03 July 2008 - 10:09 AM

நண்பர்கள் நலந்தானா.... அடடா அற்புதமா யோசிச்சிருக்கீகளே... குட்... சிந்தனை வானம் நாம் சிறகடித்துப்பறக்கும் வரை உயர்ந்து கொண்டே செல்லும் ... அதற்கு எல்லை இல்லை... நம்மோட கண்களுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கலாம் அதற்கும் கட்டுப்பாடு இல்லை.. நம்ம கண்ணு.. நம்ம பார்வை.. யாருய்யா அது குறுக்கால வாறது.. ம் .. சாதாரண மனித இயல்புதானே... இல்லையா... பறங்க .. நிறைய கொடி கட்டிப் பறங்க... அதுதான் கவிஞனுக்கு .. அவன் வளர்ச்சிக்கு நல்லது...

சின்னதா ஒரு விஷயம்...பத்துப் பேர் சேர்ந்து வாழற ஒரு வீட்ல... ஒரு நைட்.. சும்மா சாப்பாட்டு நேரத்துல... எல்லாரும் ப்ரெஷ்ஷா ... ஆகக்குறைஞ்சது நைட்டியாச்சும் மாட்டிக்கிட்டு உட்காந்திருக்க...திடீர்னு ஒருத்தர் வந்து அம்மணமா நின்னா அசிங்கமா இருக்காதா... மனசால பேசிப்பாருங்க..ம்.. யெஸ்னு அதிருதுல்ல.. அதுதான் இங்கே சிக்கல்.. காமக்கலவை இல்லாத இலக்கியம் இல்லவே இல்லை .. சங்க இலக்கியங்களும் பெரிய அளவுல காமம் பேசுது .. புதுக் கவிதைகளும் பெரிய பெரிய அளவுல காமத்தைப் பேசலாம்... ஆனா .. என்ன பச்சையா பேசக் கூடாது.... !!

அது ஏன் பச்சையா .. னு கேட்டிங்கனா .. சும்மா காமெடி பண்ணாதிங்கனுதான் சொல்லனும் .. குமுதம் வாங்கப்போற கடையில வண்ணத்திரையையும் சேர்த்து வாங்கினாலும் .. எத்தனை பேர் .. வீட்டுக்குள்ள அத கொண்டு போய் பப்ளிக்கா காட்டுவாங்க... அதையும் தாண்டி பல பலான புத்தகங்கள் இருக்கு.. அவையும் புத்தகங்கள் தான் .. தமிழ்தான்... சில நேரம் இலக்கிய சிந்தனையோட கூட படைச்சிருக்கலாம்....ஆனா அதை ஏன் நாங்க பலான புத்தகம்னு பிரிச்சு வைக்கிறோம் .. ம் .. என்னமோ இருக்குல்ல.. ? யெஸ்னு மனசு சொல்லும் .. அதோட அத விட்டுடுவோம் .. பிரிச்சு மேயற அவசியமே இல்லை..

சோ .. உங்க கற்பனைக்கு இங்கே எல்லை இல்லை.. தடையில்லை.. சுதந்திரமா நீந்துங்க... ஆனா எப்படியான வார்த்தைகள பப்ளிக்கா பயன்படுத்தலாம் .. பயன்படுத்த முடியாதுனு .. கொஞ்சம் யோசிக்கனும்... உங்க கற்பனை வளத்தை வீணடிக்காம... பார்த்ததும் முகம் சுழிக்காத வேற சொற்களைக் கொண்டு ... மாத்திக்கனும்.. சோ .. அந்தப் பொறுப்பை .. எழுதியவர் ஏற்றுக்கொள்ளட்டும் .. இவ்வளவு நல்ல படைப்பாளி .. தமிழ்ல சும்மா சுழியோட மாட்டீங்க... ம் .. smile.gif
எத்தனை சுருக்கினாலும்.. தேவைகள் மட்டும் விரிகிறது !!
0

#11 User is offline   jakey342001 

  • விவேகமானவர்
  • PipPipPipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 92
  • Joined: 25-October 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 03 July 2008 - 11:32 AM

உங்களின் எல்லைகளுக்குள் என் கவிதைகள் ஏற்படுத்திய நாகரீக ? அதிர்ச்சிகளுக்காய் வருந்துகிறேன்,

உங்கள் அளவிற்கு எனக்கு இலக்கியமோ , சிந்தனையோ இல்லையென்றே நினைக்கிறேன் மகுடதீபன்.

வருங்கால சந்ததிகளுக்கான உங்கள் இலக்கியங்கள் வான் புகழ் பெறட்டும்.

ஆமாம் காமத்துப்பால் இருப்பதால் திருக்குறளை கொளுத்திடுவீர்களா>


கோவில் வாசல் கோபுர சிலைகளை பார்த்ததுண்டா???

பாவம் நீங்கள் வழக்கமான பூர்ஷ்வாத்தனம் இது.

காமம் தவறென்றால் நீங்களோ நானோ இருக்க மாட்டோம் என் வீட்டுப்பெண்களிடத்தில் கவிதையைக்காட்டினேன் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகனும்.

மற்றபடி நிலாமுற்றம் எல்லைகளுக்கு நான் தேவையில்லை என்பதை அறிந்தேன் மகிழ்ச்சி நன்றிகள்
KeN
0

#12 User is offline   jakey342001 

  • விவேகமானவர்
  • PipPipPipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 92
  • Joined: 25-October 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 03 July 2008 - 11:59 AM

அன்பு நிலாமுற்றம் மாடரேட்டருக்கு,

என் கவிதையை கொத்துப் பரோட்டா போடுவதை தவிர்த்து முற்றிலுமாய் நீக்கிட கேட்டுக்கொள்கிறேன்.


cry_smile.gif 13.gif
KeN
0

#13 User is offline   bavan 

  • நிர்வாகம்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Support
  • Posts: 4,369
  • Joined: 18-December 03
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 03 July 2008 - 01:35 PM

QUOTE (jakey342001 @ Jul 3 2008, 12:59 PM) <{POST_SNAPBACK}>
அன்பு நிலாமுற்றம் மாடரேட்டருக்கு,

என் கவிதையை கொத்துப் பரோட்டா போடுவதை தவிர்த்து முற்றிலுமாய் நீக்கிட கேட்டுக்கொள்கிறேன்.


cry_smile.gif 13.gif


வணக்கம் கென்,

குறிப்பிட்ட ஒரு சில இடங்களை வேறு சொற்களைக் கொண்டு மாற்றும் படி மாத்திரமே உங்களிடம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கான போதிய விளக்கமும் நிலாவின் பதிவில் இருக்கிறது, எனவே, அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

உறுப்பினர்கள் கருத்துக்கள் ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

எனவே, தனி நபர் தாக்குதலாக திசை மாறாமல் இங்கே பரிமாறப்படும் கருத்துக்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கவிதை இங்கே இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கப் போவதில்லை, உங்கள் திறமையிலும் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்லை, எனவே மாற்று சொற்களைக் கொண்டு கவிதையை முழுமைப் படுத்த முயற்சி செய்யுங்கள்.
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
0

#14 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 03 July 2008 - 05:03 PM

வணக்கம் கென்

இலக்கியச் சர்ச்சை என்பது இன்று நேற்றா
நக்கீரன் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்வதுதானே . . .

உங்களோடு என்றைக்குமே எனக்குச் சண்டை
இருந்ததில்லை கென்,

கவிதை மக்கள் பார்வைக்கு வரும் போது
சர்ச்சைக்கு ஆளாவது இயல்பு
அதில் சினம் என்ன வேண்டிக் கிடக்கிறது ?

முன்பு ஒருமுறை இதே நிலா முற்றத்தில்
வேறு யாரோ ஒருவர் விமர்சிக்க,

' அப்படி என்றால் எழுதுவதைத்தான்
நிறுத்த வேண்டும் . . .'

என எழுதி இருந்தீர்கள் .
வேண்டாமே இது போன்ற கோபம்.

அப்புறம்

QUOTE
உங்கள் அளவிற்கு எனக்கு இலக்கியமோ , சிந்தனையோ இல்லையென்றே நினைக்கிறேன் மகுடதீபன்.

வருங்கால சந்ததிகளுக்கான உங்கள் இலக்கியங்கள் வான் புகழ் பெறட்டும்


நீங்கள் நெஞ்சப் புகழ்ச்சியாக எழுதி இருப்பினும் இல்லை
வஞ்சப் புகழ்ச்சியாக எழுதி இருப்பினும்
வாக்கு வன்மை கொண்ட கவிஞனின்
வாக்கு அல்லவா இது,
பலிக்கக் கடவதாகுக !

அது என்ன,
திருக்குறளைக் காமத்துப் பாலைக்கொளுத்த முடியுமா
என்கிறீர்கள் ?
வள்ளுவன் காலத்திலேயே சங்கப் பலகை தவிர
வேறு யாரும் அதை ஏற்கவில்லை,
இருந்த போதும் அது இரண்டாயிரம் வருடம்
தாண்டி நிற்கும் அதிசயம்
காரணம் எழுதியவனின் வாக்கு வன்மை !

இறைவனை நேரில் தரிசித்த தெய்வப் புலவனின்
மூன்றாம் பாலை
கேவலம் ஹோட்டலில் குடித்துவிட்டு
ரூம் போட்டு எழுதும் புதுக் கவிதை
எச்சங்களுடன் எப்படி ஒப்பிட முடியும் ?

இன்னும் மணிவாசகரின் திருக் கோவையார்,
ஆண்டாள் பாசுரம், ஜெயதேவரின் அஷ்டபதி
எனச் சொல்லிக் கொண்டே போகலாம்,
ஆயினும்
இவைகளில் உள்ளவை சிருங்கார ரஸமே தவிர
அருவருப்பில்லையே,

யானையின் மத்தகம் கண்ட வீரனுக்குத்
தலைவியின்
நகில்மேல் படாம்
ஞாபகம் வந்ததாக வள்ளுவர் சொல்வதைத் தானே
நீங்கள் எல்லாம் அதிகபட்சமாகச் சொல்லிக் காட்டமுடியும்,
இதில் அசிங்கம் ஒன்றுமே இல்லையே,

ஏன் கவிஞர் கண்ணதாசனின்
தூக்கணாங் குருவிக் கூட்
தூங்கக் கண்டான் மரத்திலே . . .
என்ற பாடலில் கூட அருவருப்பு வரவில்லையே !

காமம் இயல்புதானே அன்றி
அது தவறென்று எப்போது சொன்னேன் ?

சில புதுக் கவிதைகளைச் சுதந்திரம் என்ற பேரில்
பெண்ணியம் என்ற பேரில்
வரம்பு மீறும் வார்த்தைப் பிரயோகத்தால்
துச்சாதனத்தனம் செய்து
துகிலுரித்தலின் மேலாகவும் அசிங்கம் செய்வதைத்தானே
வேண்டாம் என்றேன்


இது இருவர் மட்டுமே வலம் வரும் ஏடன் அல்ல,
எல்லோரும் புழங்கும் நிலா முற்றம்

இந்த நிலா முற்றத்தில் கென்,
நானும் உங்களைப் போல் ஒரு உறுப்பினன்,
சொல்லப் போனால் வெகு சாதாரணன்
எனக்கு முன்பே
உங்களை இங்கு இணைத்துக் கொண்டவர் நீங்கள்

இதில் அனைவரும் சமமே தவிர
எனக்கென்று பூர்ஷ்வாத் தனம் எங்கிருந்து வந்தது ?

இதன் தரத்தைக் கட்டிக் காக்க
எம்போல் உமக்கும் பங்கிருக்கிறது

நம்புகிறேன் கென் உங்கள் வீட்டுப் பெண்களிடம்
கவிதை காட்டினீர்கள் என்பதை . . .

அதற்காக நிலாமுற்றப் பெண்களும் சரி
அதில் வழக்கமாகப் படிக்க வரும் பெண்களும் சரி
எல்லோரும் ஒரே அளவு மனப் பக்குவம்
கொண்டவர்கள் அல்லவே

வழக்கமாக உங்கள் கவிதையை வாசித்துச் சிலாகிக்கும்
யாரேனும் குறைந்த பட்சம் விமர்சிக்கவாவது
முடிந்ததா இங்கே என்றால்
இல்லை
காரணம் கூச்சம்

ஆகவேதான் இதை கொஞ்சம் இன்னும்
நாசூக்காகச் சொல்லலாமே எனக் குரல் கொடுத்தேன் அன்றி
நீங்கள் சொல்வது போல்
கொத்து புரோட்டா போட அல்ல,

என் குரல் எல்லாம்
அந்த பாச்சா விழுந்த புரோட்டா மாவு உருண்டை மட்டும்
வேண்டாம் எனச் சொல்லுமே தவிர

உங்கள் மற்ற சுவையான பதார்த்தங்களை அல்ல !

அப்புறம் நீங்கள் சொன்ன கோபுரச் சிலை விஷயம்
இடிக்கவா நான் சொன்னேன் ?

நானே என் கவிதைகளில் அப் படங்களை
இணைத்ததும் உண்டு

அதுவும் இதே நிலா முற்றத்தில். . .

போதும் கென்,
விமர்சனங்களை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு
எழுதுங்கள்

முடியாது என்றால் தங்கள் சித்தம் !

This post has been edited by மகுடதீபன்: 03 July 2008 - 05:05 PM

0

#15 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 03 July 2008 - 11:31 PM

நிலா அவர்களுக்கும்,
பவன் அவர்களுக்கும்

நிறைய நன்றிகள்
பிரச்சினையைத்
தலையிட்டுத் தீர்த்தமைக்கு. . .!

தம்பி நவன் அவர்களின்
பாஸ் வேர்ட் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லையாம்,

முற்றத்தின் உள்ளே நுழை முடியாமல்
வெளியே நின்று மட்டும் வேடிக்கை பார்க்கிறார்

கொஞ்சம் உதவுங்களேன் பவன் !
0

#16 User is offline   jakey342001 

  • விவேகமானவர்
  • PipPipPipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 92
  • Joined: 25-October 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 04 July 2008 - 07:42 AM

இறைவனை நேரில் தரிசித்த தெய்வப் புலவனின்
மூன்றாம் பாலை
கேவலம் ஹோட்டலில் குடித்துவிட்டு
ரூம் போட்டு எழுதும் புதுக் கவிதை
எச்சங்களுடன் எப்படி ஒப்பிட முடியும் ?


அன்பின் மகுடதீபன் ,


பெரியார் பிறந்த மண்ணில் இன்னும் இத்தகைய கிறுக்குத்தனங்கள் இருப்பது வேதனை, பெண்களுக்காய் பரிந்து பேசுகின்ற , போலி ஆசாமிகளிடம் தான் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இறைவன், கடவுள் , மதம் இதெல்லாம் பிற்போக்கின் உறைவிடமே தவிர வேறொன்றும் இல்லை.


ஹோட்டலில் ரூம் போட்டு குடிப்பது ஏதோ உலக மகா குற்றம் என்பது போலவும் புதுக்கவிதைகளை எச்சம் என்றும் தீர்மானிக்க நீங்கள் யார்?

இதுதான் பூர்ஷ்வாத்தனம் அய்யா.

தரம் என்பதை எவன் தீர்மானிக்க முடியும், மிகத்தெளிவான உங்கள் விமர்சனங்களுக்கு நன்றிகள். குப்பைகள் எது என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.


பரோட்டோ என்றுக்குறிப்பிட்டது கவிதையை கொதறி வைத்திருப்பதற்குதானே தவிர தங்களுக்கு அல்ல‌


புதுமைப்பித்தன், கரிச்சான் குஞ்சு, ஜானகிராமன் , ஆதவன் இன்னும் பல பல எழுத்துக்களை கொளுத்துங்கள்

வாழ்க உங்கள் இலக்கிய ஆர்வம் , வளர்க நிலாமுற்றம் தாண்டியும்
KeN
0

#17 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 04 July 2008 - 04:59 PM

ஓகோ, பூர்ஷ்வாத்தனம் என்றால்
இதுதானா,
நான்தான் வேறு என்னமோ என நினைத்துவிட்டேன்

மதம் என்பது பிற்போக்குத் தனத்தின் உறைவிடம்
எனத் தாங்கள் கூறுவது கென்
ஒருவேளை உண்மையாக இருக்கலாம்.

ஆனால் இறைவன், கடவுள் இதுவும்
பிற்போக்குத் தனத்தில் சேர்த்தி என்றால்
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒரு விவாதம் ஓய்ந்து
அடுத்த விவாதத்திற்கு ஏன் இந்த அடி கோலல் ?

அன்றியும்
வாக்குவாதம் செய்து நிரூபிக்கும் விஷயமும் இல்லை இது.

காலம் தீர்மானிக்கட்டும்
நானும் அதைத்தான் சொல்கிறேன்

பெரியாருக்கு முன்பே எத்தனையோ பெரியவர்கள்
பிறந்ததும் இந்த மண்தான்
அவர்களும் பிற்போக்கு வாதிகள்தானோ ?

போலி ஆசாமிகள் பற்றிய தங்கள்
உஷாருக்கு நன்றி

இனிப் பெண்களிடம் யாரும் பரிவு காட்டாதீர்கள்
காட்டினால் உங்களுக்கும போலிகள் பட்டம்
யாரேனும் சூட்டக் கூடும்.

வரம்பு மீறிய புதுக் கவிதை விவகாரம் போய்
இன்னொன்றா, வேண்டாம் !

தங்களின் வாழ்த்துக்குத்
தாராள நன்றிகள் !
0

#18 User is offline   bavan 

  • நிர்வாகம்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Support
  • Posts: 4,369
  • Joined: 18-December 03
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 04 July 2008 - 05:45 PM

QUOTE (bavan @ Jul 3 2008, 02:35 PM) <{POST_SNAPBACK}>
வணக்கம் கென்,

குறிப்பிட்ட ஒரு சில இடங்களை வேறு சொற்களைக் கொண்டு மாற்றும் படி மாத்திரமே உங்களிடம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கான போதிய விளக்கமும் நிலாவின் பதிவில் இருக்கிறது, எனவே, அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

உறுப்பினர்கள் கருத்துக்கள் ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

எனவே, தனி நபர் தாக்குதலாக திசை மாறாமல் இங்கே பரிமாறப்படும் கருத்துக்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கவிதை இங்கே இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கப் போவதில்லை, உங்கள் திறமையிலும் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்லை, எனவே மாற்று சொற்களைக் கொண்டு கவிதையை முழுமைப் படுத்த முயற்சி செய்யுங்கள்.



பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி, தலைப்பு மூடப்படுகிறது.
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • This topic is locked

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users