எப்போது பெளர்ணமியாவாய்…? |
![]() ![]() |
எப்போது பெளர்ணமியாவாய்…? |
Aug 21 2008, 10:02 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() எப்போது பெளர்ணமியாவாய்…? உள்ளத்தின் உணர்வுகள் உன் உணர்வால் எனை மெல்ல அணைத்துக் கொள்ள… நீ வரும் வழி பார்த்து என் விழிகள் வழியில் தவம் கிடக்கின்றன! அமைதியாய் நானிருந்து அன்போடு உனை நினைத்து உருகும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும் எப்போதும் நீயேதான் நிறைகின்றாய் ! ஓ...! ஒவ்வொரு பொழுதுகளிலும் - நீ என்னருகில் வேண்டும் போல் என் மனம் வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது! ம்…! நீயே சொல்! என் மன வானில் எப்போது நீ பெளர்ணமியாவாய்…? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 21 2008, 11:55 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஆறாத் தாகம் இருந்து கொண்டே
இருக்க வேணும் கவிஞனுக்கு . . அப்போதுதான் ஆறாய் கவிதைகள் பெருக்கெடுக்கும் சத்தியாவின் தாக மலையில் இருந்து வரும் இன்னொரு ஆறு ... பௌர்ணமி வெளிச்சமாய் வியாபித்து படம் போலவே வண்ண வண்ணமாய் ஒளிர்கிறது . . வாழ்த்துக்கள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Aug 22 2008, 12:11 AM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
வாஞ்சை....
என்ற சொல் அழகாக வந்து வீழ்ந்திருக்கிறது, தங்கள் காலடியில். கவிதையை வாழ்த்தவா....அல்லது அந்தச் சொல்லை வாழ்த்தவா?????? பி.கு. வாஞ்சிநாதன். -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Aug 22 2008, 06:13 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 977 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
தேடலோடு கலந்த பார்வை அனலை தெறிக்கிறது
தித்திப்பு கவியில் இங்கு இனிக்கிறது தெவிட்டாத சுவையில் மனம் துடிக்கிறது தேவைகள் நிறைவேறவே வாழ்த்துகிறது |
|
|
|
Aug 22 2008, 02:09 PM
Post
#5
|
|
|
விவேகமானவர் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 91 Joined: 5-April 08 Member No.: 2,753 |
தவம் நிறைவு பெற்று
உணர்வுகள் உண்மையாகி வாஞ்சைப்படும் மனதை வாஞ்சையாய் அணைத்து துளிக் கண்ணீர் துடைத்து உன்னருகில் மட்டுமல்ல உன்னிலேயே உறைந்து உன்னையே முழுமதியாய் உயர்த்தும் அந்த உணர்வு சீக்கிரமே வரும் பாராட்டுக்கள் சத்தியா |
|
|
|
Aug 22 2008, 04:51 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
நிலாவில் அமாவாசை வந்தாலும் அழகான வெளிச்சம் தரக்கூடிய பெளர்ணமியும் வரும்!
கவிதை வரிகள் அனைத்தும் முத்துக்கள்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சத்தியா! -------------------- |
|
|
|
Aug 22 2008, 06:24 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 303 Joined: 15-December 07 Member No.: 2,659 |
'உணர்வே அணைத்துக் கொள்ள,
விழிகள் தவம் கிடக்க, கண்ணீர்த்துளியில் உருவம் நிறைய, ஒவ்வொரு பொழுதிலும் அருகிருக்க வாஞ்சைப் பட'- இவற்றையெல்லாம்விட 'மன வானில் பௌர்ணமியாகிவிட்டால் தேடலே தேவையில்லை என்கிறது சத்தியா அவர்களின் கவிதை. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Aug 24 2008, 08:10 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
வஞ்சிக்கொடியின் வாஞ்சையில் சிக்கிய
வாலிபனே நீதான் யாரோ.....?? இவள் நெஞ்சம் நிரைந்து நித்திரை துலைக்கப் பிறந்தவனே..... கண்ணீர் துளிகளை வெண்ணீர் ஆக்கியவனே... சிவந்துபோன இவள் விழிகளை பார்....!! சித்திரம் போன்ற இவள் கவியை நிரப்பியவனே.....! யார்...? யார்.....? யாரடா நீ.......???? வாழ்த்துக்கள் சத்தியா...... தேடலில்தான் எத்தனை இன்பம் நிரைந்திருக்கின்றன..... -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Aug 25 2008, 01:53 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
எப்போது பெளர்ணமியாவாய்…? உள்ளத்தின் உணர்வுகள் (கடவுள்)உன் உணர்வால் எனை மெல்ல அணைத்துக் கொள்ள… நீ வரும் வழி பார்த்து என் விழிகள் வழியில் தவம் கிடக்கின்றன! அமைதியாய் நானிருந்து அன்போடு உனை நினைத்து உருகும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும் எப்போதும் நீயேதான் நிறைகின்றாய் ! ஓ...! ஒவ்வொரு பொழுதுகளிலும் - நீ என்னருகில் வேண்டும் போல் என் மனம் வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது! ம்…! நீயே சொல்! என் மன வானில் எப்போது நீ பெளர்ணமியாவாய்…? அடைப்புக் குறிகளில் கடவுள் போட்டால் நல்ல ஆன்மீகக் கவிதை கடவுளின் பதில்: இருண்ட உன் மன வானம் இருதயத்துள் சுழிய பௌர்ணமி மனமாய் நான் பீறிட்டு வழிவேன்! -------------------- |
|
|
|
Aug 26 2008, 07:45 AM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 116 Joined: 16-May 06 Member No.: 520 |
வாழ்த்துகள் சத்தியா...அழகான கவிதை அந்த பௌர்ணமி நிலவைப் போல...
-------------------- நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்
![]() இனியவள் புனிதா |
|
|
|
Aug 26 2008, 02:52 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துகள் சத்தியா...
பௌர்ணமியைக் காண.. அமாவாசையில் இருந்துதான் ஆகவேண்டும்.. வாழ்க்கையில் தேடுவது கிடைக்க சில காலம்.. இப்படியான கஸ்டங்களையும் சந்திக்க நேரிடும்.. உங்கள் வாழ்வில் ஒளிமயமான பௌர்மணி வர வாழ்த்துகள். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Sep 3 2008, 12:46 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
கவியோடு இணைந்து கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:36 PM |