பூவிழி |
![]() ![]() |
பூவிழி |
Aug 30 2008, 10:33 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
பூ விழி
பூவிழிக்குள் விழுந்தபிம்பம் கோடி - உன் பொன்உருவம் போல வரு மோடி ? பாவழிக்குள் வந்து தடம் பதித்தவளே பதம் முழுக்கக் கூவிளமும் கருவிளமும் கொள்ளைஎனத் தருபவளே நாவழியே நடந்த உனை நாடி - புகழ் நாட்டிடவோ நல்லதமிழ்ப் பாடி ? கோபம்எலாம் ஏனடியோ கொள்ளை - உளம் கொண்டுநின்று மிழற்றுகிற கிள்ளை தாபமுடன் தவிக்கிறது தான்அடங்க மறுக்கிறது ஞாபகமோ நீவிதைத்த நடவுக்குள் விளைகிறது தீபவிழி பாய்ச்சுதடி கள்ளை - அதில் திளைக்கின்றேன் தீருதடி சள்ளை காட்சிஎலாம் தருவதற்கேன் காலம் - மிகக் கடத்துகிறாய் நிலைமைஅலங் கோலம் ஆட்சிஎலாம் மதுரையிலே ஆள்வதனால் என்னபயன் மாட்சிமையாய் அரசாள மனதேசம் விற்பனைக்குப் போட்டுவைத்தேன் அன்புமட்டும் போதும் - அது பொன்விலைக்கு நேர்விலைஎப் போதும் கச்சிறுக்கும் கலசமது் ஆடும் - அதில் கனகமணிச் சரமிரண்டு பாடும் பச்சைஒளிக் கிரணம்எனைப் பற்றிஉயிர்ப் பாகவரும் உச்சிமுதற் பாதம்வரை ஊறிடுந்தீம் பாகுவரும் துச்சமென உலகமெலாம் தோணும் - இவள் சொல்லுவதால் பிறக்குதிந்த ஞானம். மேகலையில் ஆடிவரும் நாதம் - தான் மேதினியி லேஎனக்கு வேதம் யோகநிலை காட்டுவதும் உச்சரித்துப் போற்றுவதும் மோக ஒளிச் சோதிஇது முன்புவரக் காணாமல் போகுமெனில் என்னுரைப்பேன் தாகம் - இவள் பூங்கரத்துள் சிக்குறுதல் போதும் சுற்றியுளோர் எண்ணமெலாம் சூழ - நான் சோர்வுறவா வாழுகிறேன் தாழ வெற்றியுடன் வளைந்திடும் திக் விசயமதில் உனக்கிணையாய் உற்றிடுநாள் என்றுகொலோ ஓதடியோர் வார்த்தைஎன பற்றுகிறேன் பாசவெறி மூள - எனை பாகமென ஆக்கிவிடு ஆள கண்டகண்ட மடமனிதர் மத்தி - இதில் காணுதிலை அந்தரங்க சுத்தி கொண்டதெலாம் குறையாகக் குற்றுயிரோ குலையாக பிண்டமட்டும் அலையுதடி பிணமாகத் திரியுதடி தெண்டனிட்டேன் உள்ளம் எனும் புத்தி - நின் சேவடிக்குள் ஆக்கிவிடு பொத்தி பார்ப்பவரின் கண்வலைக்குள் பட்டு - மிக பரிதவிப்பில் ஆளுகிறேன் கெட்டு மூர்த்தணிய மாகவரும் மோகவெறி யாகமனம் ஆர்த்தெழுங்கால் அடக்கடியோ அடைக்கலநின் சேவடியோ தீர்தெழுங்கா லம்எதுவோ தொட்டு - நின் திருக்கரத்தால் வைஇரண்டு கொட்டு மனக்குழப்பம் அதிகரிக்கும் தோஷம் - இதில் மாட்டியவன் பாடுமிக மோசம் தினக் குழப்பம் தீரவிலை சேர்ந்தவரின் திருஷ்டியிலே வனக் கிளீ நான் வாடுகிறேன் வருத்தமுடன் பாடுகிறேன் கனக்குதடி நான்நடிக்கும் வேஷம் - இதில் காணுதிலை எங்கேசந் தோஷம் சுற்றியவர் வீச்சுகளில் சொக்கி - நான் துடிதுடித்தேன் மாயவலை சிக்கி எற்றுதைக்க ஏலுதிலை இல்லைஎன ஆகுதிலை முற்றியதோ தீரவிலை மோகவலை மோகவலை வெற்றுயிராய் உனதடியே விக்கி - நான் வீழுகிறேன் விஷம்எல்லாம் கக்கி சாவாக்கலைநெறி அபிராமி பாடல்கள் -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Aug 31 2008, 04:50 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
ஆஹா!
காதலியை பற்றியதொரு அழகான கவிதை! சினிமாப் பாடல் போல் எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Aug 31 2008, 06:47 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE மனக்குழப்பம் அதிகரிக்கும் தோஷம் - இதில் மாட்டியவன் பாடுமிக மோசம் தினக் குழப்பம் தீரவிலை சேர்ந்தவரின் திருஷ்டியிலே வனக் கிளீ நான் வாடுகிறேன் வருத்தமுடன் பாடுகிறேன் கனக்குதடி நான்நடிக்கும் வேஷம் - இதில் காணுதிலை எங்கேசந் தோஷம் சுற்றியவர் வீச்சுகளில் சொக்கி - நான் துடிதுடித்தேன் மாயவலை சிக்கி எற்றுதைக்க ஏலுதிலை இல்லைஎன ஆகுதிலை முற்றியதோ தீரவிலை மோகவலை மோகவலை வெற்றுயிராய் உனதடியே விக்கி - நான் வீழுகிறேன் விஷம்எல்லாம் கக்கி இக்கவிதை வாசிக்கும் போது.. என் மனமும் கவலையடைகிறது.. எழுத்தாளரின் மனம்படும் வேதனைகள்.. பல கோணங்களின் சித்தரிக்கின்றன கவியில்.. QUOTE வெற்றுயிராய் உனதடியே விக்கி - நான் வீழுகிறேன் விஷம்எல்லாம் கக்கி மதுரைஆளும் மீனாட்சி.. உங்கள் மனக்குறையை தீர்த்துவைப்பாள்.. அதுவரை கக்குங்கள் கவிதைகளாக...வாழ்த்துகள்.. கவிதைக்கு மட்டுமல்ல மனக்குறைகள் தீர்ந்து நல்வாழ்வு வாழவும். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Aug 31 2008, 11:28 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
காட்சி காணும் ஒவ்வொருவருக்கும்
கண்ணிலே ஒவ்வொரு வகை லென்ஸ் உண்டு இரதி ! நன்றி தனிமதி, தங்கள் வாழ்த்தும் மனசுக்கு ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:36 PM |