மண்ணில் தெரியுது சொர்க்கம் |
![]() ![]() |
மண்ணில் தெரியுது சொர்க்கம் |
Sep 6 2008, 03:59 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
மண்ணில் தெரியுது சொர்க்கம்
சொர்க்கம் என்பது எங்கே உள்ளது சொலவா முடியாது நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால் நமைவிட மேல் ஏது மண்ணில் தெரியுது சொர்க்கம் காண மானுடரே வாங்க கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக் கதைகள் ஏன் போங்க பகைவனை மோதிச் சுட்டுவி டாமல் பாசம் பொழியுங்க புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க போரை அழியுங்க எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை என்றால் ஏன் சண்டை வல்லான் இல்லான் என்றில்லாமல் வசிப்போம் ஊராண்டை காலையிற் பகைவனைத் தியானம் செய்க காதலில் ஆழ்ந்திடுக மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான் மனம்போல் வாழ்ந்திடுக உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க உடனே சிரியுங்க விர்என வெளியே வாங்க அங்கே விண்ணைப் பிடியுங்க சண்டை களுக்குள் நேரம் தொலையுது சவத்தைத் தள்ளுங்க அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க அனுபவம் கொள்ளுங்க மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை மறுபடி ஏன் சண்டை பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு பழகுக வீட்டாண்டை புத்தன் ஏசு போதித் தார்கள் போற்றுக நற்றொண்டை நித்தம் நித்தம் முழக்குக முழக்கி நெகிழுக நம் தொண்டை நாம் எல்லோரும் நபியின் பிள்ளை நமக்குள் ஏன் சண்டை பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன போனது நாள் பண்டை மானுட சக்தியின் மகத்துவம் கேட்க மக்காள் வாருங்க தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும் தேளிடம் ஏனுங்க அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம் அன்பைத் தெளியுங்க கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில் காதலைப் பிழியுங்க குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக் குற்றம் உமதுங்க வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த வகையும் உமதுங்க கவனம் கண்ணை மூடுங்க உள்ளக் கதவைத் திறவுங்க நவநவமான உலகம் உமக்கே நட்பாய்ப் பரவுங்க மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை மனம் போல் சுத்துங்க கனிவாள் உமையே கவனிப் பாள் எனில் கவலைகள் வெத்துங்க -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Sep 7 2008, 05:00 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
மண்ணில் தெரியுது சொர்க்கம்
மண்ணிலே சொர்க்கம்... கவிதையிலே வாசித்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள் மகுடதீபனண்ணா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Sep 7 2008, 02:53 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... மானிடர் எல்லோரும் மனதில் இதை நிறுத்தி விட்டால் மண்ணில் தெரியும் சொர்க்கம் தான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Sep 8 2008, 05:07 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 601 Joined: 20-July 06 Member No.: 581 |
சொர்க்கம் மண்ணில் என சொல்லும் கவிதை அருமை மகுடதீபன் பாராட்டுக்கள்.
-------------------- முடிந்தபின்பு தான் தெரிந்தது முற்றுப்புள்ளியின் வலி!
![]() |
|
|
|
Sep 9 2008, 01:16 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
இக்கவிதை ஒவ்வொருவரும் நடைமுறையில்
ஏற்கொள்ளல் வேண்டும்! நல்ல கவிதை வரிகள்! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:36 PM |