தீபாவளி மாலை முரசு-24.10
#2
Posted 24 October 2008 - 03:56 PM
அதுவும் மாலை முரசில் . .?
முரசு கொட்டி வாழ்த்துகிறோம் நண்பரே
தங்கள் புதிய பார்வைக்கு . . !
என்னதான் இனிப்புகள் தின்றாலும்,
தீபாவளியின் இன்னொரு பக்கம்
கொஞ்சம் கந்தகக் கசப்புதான் . . .!
போன வாரம் சிதம்பரம் கோவில் சென்றிருந்தேன்,
மூன்று திசைகளிலும் கோபுர வாசல் கிச்சென அடைத்துக்
கீழ்ப்பறம் மட்டுமே திறந்திருந்தார்கள்,
வெடி குண்டு பயத்தில். . .!
கடந்த மூன்று மாத காலமாய் இதே நிலைமையாம் . .!
தீபாவளி நேரத்தில் வெடிப்பது எந்த வெடி
எனத் தெரியாது போய்விடுமோ என்ற பயமோ ?
எனக்கென்னவோ எப்போது பார்த்தாலும்
ஜே ஜே என இருக்கும் மற்றைய கோபுர வாயில்கள்
ஓவென மனித நடமாட்டமே அற்று இருப்பதைப் பார்க்கும் போது
வெடி வைப்பவர்களுக்கு அதுவே ஏதுவாகிவிடுமோ
என அச்சமாகக் கூட இருந்தது . . .
கூண்டில் சிக்கிக் கொண்ட எலி
பயத்தில் உள்ளே உள்ள தேங்காய்ச் சில்லைத் தின்னாது . . .
மனிதனுக்கு மட்டும் பயங்கர வாத வெடியே வெடித்தாலும்
தீபாவளி கேட்கிறது . .
நமது முன்னோர்கள் தீபாவளி கொண்டாடினார்களா என்ன ?
குலோத்துங்க சோழன் கொண்டாடியதாகக்
கம்பரும், ஒட்டக் கூத்தரும் பாடிய பாடல்
இருந்தால் யாராவது சொல்லுங்கள், பார்ப்போம் . . .!
போகட்டும் கவிஞரே,
உங்கள் கருத்துக்பகு ஒரு ஜே !

கவிதை1000 ........ தமிழ்க்கவிதை
எரிதழல்]....... ..... . சன்மார்க்கம்
கவிஅரங்கம்........ சிதம்பரம்
அபிராமி................ சேதுபூமி
#3
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
Posted 24 October 2008 - 08:27 PM
வெளி வந்த சிறப்பான கவிதை..
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! கலையரசன்..
#4
Posted 25 October 2008 - 12:56 PM
ஒரு பக்கம் சந்தோசம்
மறு பக்கம் வேதனை.
ம்ம்... வாழ்த்துக்கள் கலை அரசன்.
#5
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
Posted 30 October 2008 - 04:18 PM
நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்!

Help

















